search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ashada navratri"

    • 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
    • இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம்.

    நவராத்திரியில் நான்கு வகை உண்டு. ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களை `ஆஷாட நவராத்திரி' என்றும், புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை `சாரதா நவராத்திரி' என்றும், தை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரக்கூடிய நவராத்திரியை `மகா நவராத்திரி' என்றும், பங்குனி மாதத்திற்கு பின் அமாவாசைக்கு அடுத்து வரும் நவராத்திரியை `வசந்த நவராத்திரி' என்றும் சொல்வார்கள்.

    நவராத்திரி கொண்டாடும் வழக்கம் குறித்து கூறும்பொழுது புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்ம ராஜாவின் இரண்டு கோரைப் பற்கள் என்று கூறுவார்கள். அனைத்து ஜீவராசிகளும் இந்த பற்களில் அகப்பட்டு துன்பம் இல்லாமல் இருக்க, நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.

    நான்கு நவராத்திரிகள் இருந்தாலும், பல இடங்களில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரியாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருப்பது இந்த விழாவின் சிறப்பாகும்.

    சுரதன் என்ற மன்னன், தான் ஆட்சி செய்த தேசத்தை நல்ல முறையில் ஆண்டு வந்தான். எல்லாவிதமான தர்மங்களும் தெரிந்த அந்த மன்னனை, மக்கள் அனைவரும் போற்றினர். அந்த நேரத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு பிரிவினர், சுரத மன்னனின் நாடு மீது படையெடுத்து வந்தனர். சுரத மன்னன் நல்ல வீரனாகவும், போர்த் திறமை மிக்கவனாகவும் இருந்தாலும், சூழ்ச்சியின் காரணத்தால் அந்தப் போரில் தோல்வியடைந்தான்.

    தன் மந்திரிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை அறிந்து வருந்திய மன்னன், தன் நாட்டை விட்டு காட்டிற்குச் சென்றான். அப்போது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சுமேதஸ் என்ற மகரிஷியைச் சந்தித்தான். அவரிடம் தன்னுடைய நிலையைச் சொல்லி வருந்தினான். அந்த மகரிஷி மன்னனிடம், `சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இரு' என்றார்.

    அப்படி அவ்விடத்தில் மன்னன் தங்கியிருந்த நேரத்தில், சமாதி என்ற வியாபாரி ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் மகரிஷியிடம் `நான் நல்ல முறையில் வியாபாரம் செய்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை சேர்ந்த மற்றவர்கள் செய்த சூழ்ச்சியால் அனைத்து செல்வத்தையும் இழந்தேன். என் மனைவி, பிள்ளைகளும் என்னை மதிக்கவில்லை. அதனால் கடன் அதிகமாகி மனம் வருந்தி தனித்து இந்த காட்டை வந்தடைந்தேன்' என்றான்.

    பின்னர் மன்னனையும், வியாபாரியையும் பார்த்து, `உங்கள் இருவருக்கும் துயரங்கள் தீர, அற்புதமான தேவியின் மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த வனத்தில் இருந்து ஜெபியுங்கள்' என்றார் மகரிஷி. அவர்களும் தேவியின் அந்த மகா மந்திரத்தை வனத்தில் இருந்து நீண்ட காலம் ஜெபம் செய்தனர். தேவியின் உருவத்தை மண்ணில் செய்து வைத்து வழிபட்டனர்.

    அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து தேவி அங்கே தோன்றி, `உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?' என்று கேட்டாள். அவர்களும் தங்கள் நிலையை சொல்லி வரம் கேட்டனர். அரசனைப் பார்த்து, `நீ இழந்த ராஜ்ஜியத்தை அடைவாய். அடுத்த ஜென்மத்தில் மனுவாக பிறப்பாய்' என்று வரம் கொடுத்தாள். வியாபாரியை பார்த்து `சம்சார பந்தம் உன்னை விட்டு விலகும். நீ இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று, நிறைய தான தர்மங்கள் செய்து மோட்சத்தை அடைவாய்' என்றாள்.

    அதன்படி சுரத மகாராஜா தன் நாட்டையும், வியாபாரி மோட்சத்தையும் அடைந்தனர். அவர்கள் மண்ணில் அம்மன் உருவை செய்து வைத்த வழிபட்டதன் காரணமாகவே, இன்றும் நாம் நவராத்திரி வேளையில் பொம்மைகளால் கொலுவைத்து வழிபாடு செய்கிறோம்.

    விரதம் இருப்பது எப்படி?

    13 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் கொண்டது, தேவி மகாத்மியம். இதை `சப்த சதி' என்றும் சொல்வார்கள். நவராத்திரியில் இதை முறையாக பாராயணம் செய்வது மிக விசேஷமானது.

    யம் யம் சிந்தயதே காமம்

    தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்

    இதை படிப்பதால் எதை கேட்கிறோமோ அதை அம்பாள் கொடுப்பதாக ஐதீகம்.

    நவராத்திரி ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும், அம்பாளை வழிபாடு செய்வார்கள். 9 நாட்களும் தினமும் சுத்தமாக உபவாசம் இருந்து அம்பாளை அர்ச்சனை செய்வதும், நவாவரண பூஜை செய்வதும், சப்த சதி என்னும் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதும், சுவாசினி பூஜை செய்வதும், கன்னியா பூஜை செய்வதும், தினமும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், சவுந்தர்ய லஹரி படிப்பதும் மிக விசேஷமானதாகும்.

    தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் அஷ்டமி அன்றும், மகா நவமி அன்றும் மட்டுமாவது பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும். நவராத்திரி ஒவ்வொரு நாளும், ஒரு சுஹாசினி மற்றும் ஒரு கன்னியான குழந்தையை வீட்டுக்கு வரவைத்து, அவர்களை அம்மனாக பாவித்து வஸ்திரம், மாலை, வளையல் போன்ற மங்கலகரமான பொருட்களைக் கொடுத்து, அவர்களை சாப்பிட வைத்து அம்பாளாக நமஸ்கரிக்க வேண்டும்.

    நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை அறையில் தெய்வ அருள் தொடர்ந்து இருக்க இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினோறு படிகளில் மண் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யலாம். பிளாஸ்டிக் பொம்மைகளை தவிர்ப்பது உத்தமம்.

    அம்பாளை இந்த ஒன்பது நாளும் அந்தந்த தினத்திற்கு சொல்லிய கோல மிட்டு, சுண்டல் செய்து, அந்தந்த தினத்திற்குரிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தும், அந்தந்த தினத்திற்குரிய பாடல்களைப் பாடியும், அம்பாளை வழிபாடு செய்தால், நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும், அந்த குடும்பத்தில் உண்டாகும்.

    நவராத்திரி அன்று எந்தவித பூஜைகளும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அபிராமி அந்தாதியில் வரும் `வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை, பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த, ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு, செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே' என்ற பாடலையாவது, ஒன்பது நாளும் தொடர்ந்து சொல்லி வர அம்பாளின் அருள் கிடைக்கும்.

    சகல சித்திகளையும் தரக்கூடிய `ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே' என்ற நவராதிரி மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.

    • ஞாயிற்றுக்கிழமை கன்னிமார் பூஜை, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
    • 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது.

    திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே சின்னாம்பட்டியில் வராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா கடந்த 18-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது.

    அதன்படி நேற்று சிம்ஹாரூடா வராஹி ஹோமம் மற்றும் அலங்கார ஆராதனைகள் மகா பூர்ணாகுதி ஆகியவை கோவிலில் நடந்தது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) உன்மத்த பைரவி ஹோமம் நடைபெறுகிறது. மாதுளை அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். இதேபோல் நாளை (சனிக்கிழமை) விளக்குபூஜை, காய்கறிகளால் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கன்னிமார் பூஜை, மாவிளக்கு எடுத்தல், அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி சுமங்கலி பூஜையும், 27-ந்தேதியன்று தம்பதியினர் பூஜை, பொங்கல் வைத்தல், மகா வரசித்தி வராகி மூல மந்திர ஹோமம், பட்டுப்புடவை அம்மனுக்கு சமர்ப்பித்தல், மகா கலசாபிஷேகம், இரவில் அம்மன் ரத உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28-ந்தேதி மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கம்பிளியம்பட்டி, சின்னாம்பட்டி, வாராகிபுரம் ஊர் பொதுமக்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வரசித்தி வாராகி பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார்.
    • திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மன் அருள் பாலிக்கிறார்.

    ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு வெண்ணைக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அல்லல்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பாள் தேவி.
    • வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம்.

    ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி, அன்னை வராஹி விரத வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே ஸித்திக்கும் என்கிறது பிரமாண்ட புராணம்.

    வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி என்னும் இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக்கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனிமாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடிவடையும். ஆனிமாத அமாவாசைக்கு மறுதினம் தொடங்கி அடுத்த ஒன்பது நாள்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வராஹி அம்மன்.

    வராஹி அம்மன் சப்த மாதர்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர். கிராமங்கள் தோறும் அனைத்துக் கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டுமுறை இருக்கும். காரணம் சப்த மாதர்களும் மனித வாழ்க்கைக்குத் தேவையானவற்றை அருள்பவர்கள் என்பது நம்பிக்கை. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு இந்த நாள்களில் நவதானிய அலங்காரம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்கும அலங்காரம் எனத் தினமும் ஒரு பொருளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

    வராஹியை விரதம் இருந்து வழிபட உகந்த திதி பஞ்சமி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என இருகாலங்களிலும் வராஹியை வழிபட வேண்டும் என்றாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வராஹிக்குரிய அர்ச்சனை மந்திரங்களில், `ஆஷாட பஞ்சமி பூஜன ப்ரியாயை நமஹ' என்று ஒரு வரி வரும். ஆஷாட மாத பஞ்சமியில் செய்யப்படும் பூஜையைப் பிரியமுடன் ஏற்பவள் அன்னை என்பது இதன் பொருள். நவராத்திரியில் பஞ்சமி திதி நடு நாயகமான தினம். அதனாலேயே அவளுக்குப் பஞ்சமி வழிபாடும் ஏற்பட்டது. அன்னைக்கே பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. அதற்குப் பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்கொள்ளலாம்.

    வராஹி தேவிக்கு தானியக் கோலமிட்டு வழிபடுவது சிறப்பு. வீட்டில் பஞ்சமி அன்று பூஜை அறையில் விளக்கேற்றி சிறு கோலமிட்டு அதை தானியங்கள் கொண்டு அலங்கரித்து அன்னை வராஹியை விரதம் இருந்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    வராஹியை வழிபடுபவர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை.

    துன்பம் தீர்க்கும் துவாதச நாமங்கள்

    பிரமாண்ட புராணம் வராஹி தேவியின் மகிமைகளை விளக்குகிறது. பண்டாசுர வதத்துக்கு லலிதாம்பிகை புறப்படும்போது தேவி வராஹியும் தன் கிரி சக்கரத்தில் எழுந்தருளினாள். அப்போது சுற்றியிருந்த தேவதைகள் வராஹியை துவாதச நாமங்கள் சொல்லித் துதித்தனர். துவாதசம் என்றால் பன்னிரண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களைச் சொல்லித் துதித்து அன்னையை வழிபட்டால் சகல காரியங்களும் ஸித்தியடையும் என்கிறது பிரமாண்டபுராணம்.

    1. பஞ்சமி,

    2. தண்டநாதா,

    3. சங்கேதா,

    4. சமயேஸ்வரி,

    5 சமய சங்கேதா,

    6. வராஹி,

    7. போத்ரினி,

    8. சிவா,

    9. வார்த்தாளி,

    10. மகா சேனா,

    11. ஆக்ஞா சக்ரேஸ்வரி,

    12. அரிக்ஞை என்பன அந்த நாமங்கள்.

    இந்தப் பன்னிரண்டு நாமங்களையும் ஒவ்வொரு பஞ்சமி அன்றும் அன்னையின் சந்நிதியில் அல்லது வீட்டில் அம்பிகையின் படத்துக்கு முன் நின்று சொல்லி வணங்க, தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள் இருந்தால் கட்டாயம் வழிபட வேண்டிய தெய்வம் அன்னை வராஹி. அன்னையை பஞ்சமி தினத்தன்று விரதமிருந்து வழிபட்டால் பூமி தொடர்பான வழக்குகள் அனைத்தும் சாதகமாகும் என்பது நம்பிக்கை.

    ஸ்ரீவராஹிதேவிக்கு சில நிவேதனங்கள் விசேஷம். பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, தயிர்சாதம், சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கருப்பு எள் உருண்டை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, தேன் இவை அனைத்தும் அன்னைக்குப் பிரியமானவை. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ, இயன்றால் இவையனைத்தையுமோ படைத்து, மற்றவர்களுக்கும் விநியோகித்து வராஹியை வழிபட்டால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

    ஆஷாட நவராத்திரி காலத்தில்.... விரதம் இருந்து பஞ்சமி திதியில் உக்கிரமான பெண் தெய்வங்களை தரிசிப்பதும், வழிபடுவதும், எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும். காரியத்தடைகளையெல்லாம் நீக்கி அருளுவாள் தேவி என்று சாக்த உபாஸகர்கள் போற்றுகின்றனர்.

    இன்று 23.6.2020 பஞ்சமி திதி வருகிறது. இந்த நாளில் விரதம் இருந்து அனைவரும் வீட்டில் விளக்கேற்றி அன்னைக்குப் பிரியமான பன்னிரு நாமங்களைச் சொல்லி வராஹி தேவியை வழிபடுவோம். உக்கிர பெண் தெய்வங்களையும் தரிசித்து வேண்டுவோம்.

    வராஹி தேவியை செவ்வரளி மாலை சார்த்தி வேண்டுவோம். வீட்டில் இருந்தபடியே வராஹிதேவியின் காயத்ரியையும் மூலமந்திரத்தையும் 108 முறை ஜபித்து பிரார்த்தனை செய்துகொள்ளலாம். நம்மைப் பிடித்திருக்கும் துன்பங்கள் எல்லாம் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் என்று மனமார வேண்டிக்கொள்வோம்.

    ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    • வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி.
    • கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.

    சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வராஹி புராணம். வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.

    வராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. வராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    வீட்டில் விளக்கேற்றி வராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.

    ஓம் ஐம் க்லெளம் ஐம்

    நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளி

    வராஹி வாராஹமுகி வராஹமுகி

    அந்தே அந்தினி நம :

    ருத்தே ருந்தினி நம :

    ஜம்பே ஜம்பினி நம :

    மோஹே மோஹினி நம :

    ஸதம்பே ஸ்தம்பினி நம:

    ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

    ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

    ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு

    சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

    ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

    என்று சொல்லி வழிபடலாம்.

    ஓம் வாம் வராஹி நம:

    ஓம் வ்ரூம் ஸாம் வராஹி கன்யகாயை நம:

    எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

    ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வராஹி தேவ்யை நம:

    க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்

    தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

    எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,

    லூம் வராஹி லூம் உன்மத்த பைரவீம்

    பாதுகாப்பாம். ஸ்வாஹா

    எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.

    வராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும். வராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.

    • சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராஹி அம்மன் அருள்பாலிக்கிறார். ஆஷாட நவராத்திரியையொட்டி நேற்று காலை சிம்ஹாருடவராஹி அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து நேற்று மாலை சிம்ஹாருட வராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 27-ந்தேதி தொடர்ந்து ஆஷாட நவராத்திரி நடக்கிறது.
    • வராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருப்பரங்குன்றம் கோட்டை வராஹி அம்மன் வழிபாட்டு மன்றத்தின் சார்பில் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி சிறப்பு வழிபாடு நேற்று தொடங்கியது.

    வருகின்ற 27-ந்தேதி தொடர்ந்து ஆஷாட நவராத்திரி நடக்கிறது. நிகழ்ச்சியையொட்டி வராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகாதீப, தூப, ஆராதனையும் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வராகி அம்மனை வழிபட்டனர்.

    • வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன.
    • 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், உடன்குடி மற்றும் திசையன்விளைக்கு அருகில் உள்ள கொம்மடிக்கோட்டையில் வாலைகுருசுவாமி கோவில் உள்ளது. பாலாசேத்திரம் என அழைக்கப்படும் இக்கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெற்று வரும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா முக்கியமான ஒன்றாகும்.

    ஆஷாட நவராத்திரி காலம் என்பது சந்திரமான கால கணிதமுறையில் ஆனி மாதத்தில் தொடங்குகின்ற அமாவாசையை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். அந்த வகையில் குருசுவாமி கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா சிறப்பு அபிஷேகத்துடன் நேற்று தொடங்கியது. ஆஷாட நவராத்திரி நாட்களில் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. இந்த விழா வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது.

    குறிப்பாக 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்கின்றனர். ஆஷாட நவராத்திரி விழாவில் வாராஹி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கும்.

    • ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
    • வராஹியை வணங்குபவர்களுக்கு செய்வினையால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

    ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரியின் கையில் உள்ள பஞ்ச பாணங்களிலிருந்துத் தோன்றியவள்தான் ஸ்ரீ மகா வராஹி எனப்படும் அம்மன். சேனைகளுக்குத் தலைவியாக அன்னையை பாதுகாப்பவளாக விளங்கும் இவள் வராஹி முகத்துடன் இருப்பதால் வராஹி எனப்படுகிறாள்.

    பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டா என்னும் சப்த மாதாக்களில் இவள் 6-வதாக பூஜிக்கப்படுபவள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் இருக்கும் 6 ஆதார சக்கரங்களில் நெற்றியில் 2 கண்புருவங்களுக்கு இடையில் இருக்கும் ஆக்ஞா சக்கரப்பகுதிக்கு வராஹியே தேவதையாவாள்.

    ஆனி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரையில் உள்ள ஒன்பதுநாட்கள் வராஹி நவராத்திரி எனப்படுகிறது. இதை ஆஷாட நவராத்திரி என்றும் சொல்வார்கள். ஒரு காலத்தில் அம்பிகை வழிபாடு தாய் வழிபாடாக மிகவும் சீரும் சிறப்புடன் விளங்கியது. நவராத்திரி என்றால் புரட்டாசி நவராத்திரிதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் 12 மாதங்களிலும் அம்பிகையை நினைத்து 12 நவராத்திரிகள் கொண்டாடிய காலமும் உண்டு.

    இப்போது பிரதானமாக நான்கு நவராத்திரிகள் இருக்கின்றன. வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி. இதில் ஆஷாட நவராத்திரி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகிறது.

    குறிப்பாக இந்த நவராத்திரியின் நடுவில் திகழும் பஞ்சமி திதி வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ வராஹி தேவியை உபாசிக்க சிறப்பான நாளாகும்.

    இந்த நாட்களில் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹிக்கு அபிஷேகம், அர்ச்சனை பூஜைகள் செய்யலாம். இதனால் சிறந்த பேச்சுத் திறன் கிடைக்கும். ஜாதகப்படி செவ்வாய் ராகு மற்றும் கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும். எங்கும் எதிலும் பாதுகாப்பு கிடைக்கும்.

    மேலும் ஸ்ரீமகாவராஹியை வணங்குபவர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தீய மந்திரங்களாலும் செய்வினைகளாலும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இதை ஓட்டியே வராஹிக் காரனோடு வாதாடாதே என்னும் பழமொழி கூறப்படுகிறது.

    இந்த நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து ஸ்ரீ மகா வராஹியின் படத்தை வைத்து அம்மனின் வலது பக்கத்தில் தாமரைத் தண்டு அல்லது வாழைத் தண்டால் திரி செய்து நெய் தீபம் ஏற்றி,

    மஞ்சள் பட்டுத் துணி சாத்தி,

    பஞ்சம்யை நம,

    தண்டநாதாயை நம,

    சங்கேதாயை நம,

    சமயேஸ்வர்யை நம,

    சமய சங்கேதாயை நம,

    வராஹியை நம,

    போத்ரிண்யை நம,

    ரிவாயை நம,

    வார்த்தாள்யை நம,

    மகாசேனாயை நம,

    ஆக்ஞாசக்ரேஸ்வர்யை நம,

    அரிக்ன்யை நம என்னும் 12 மந்திரங்களை சொல்லி சிவப்பு புஷ்பத்தால் பூஜை செய்ய வேண்டும். தோல் உரிக்காத கருப்பு, உளுந்தால் செய்த வடையும், மிளகு சேர்த்த தயிர் சாதமும், சக்கரைவள்ளிக் கிழங்கும், சுக்கு சேர்த்த பானகமும், நிவேதனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு முறையாக பக்தியுடன் ஸ்ரீ வராஹியை நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை செய்பவர்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் நோய் எதிரி மற்றும் அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவார்கள்.

    தஞ்சை பெரிய கோவிலில் எப்போதும் ஆஷாட நவராத்திரி மிக விசேஷமாக கொண்டாடப்படும். இந்த நாளில் நவதானிய அலங்காரம், தேங்காய் பூ, சந்தனம், குங்கும அலங்காரம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஒன்பது நாட்கள் விரதம் இருந்து தினமும் வீட்டில் பூஜை அறையில் கோலமிட்டு, விளக்கேற்றி, அன்னை வராஹியை வழிபட்டால் எப்பொழுதும் குறைவற்ற செல்வமும் தானிய விருத்தியும் ஏற்படும். மாணவ-மாணவிகள் வராஹி அம்மனை வழிபட சகல கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

    ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.
    உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    இந்து மதத்தின் சிறப்பு மிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்புமிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாக கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு.

    நான்கு விதமான நவராத்திரிகள் :

    வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

    தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)


    ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம்.

    விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.

    பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காக செய்யப்படுவது. வடமாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக் களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

    உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வரபகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்க்கு ஏற்ற சக்தியை அளித்து விவசாயத்தை பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

    வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.

    வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

    வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.

    ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
    ×