Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 6-ம் நாள் இன்று..!

முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 6-ம் நாள் இன்று..!
Published on

நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.

முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.

பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.

விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும்.

முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும். ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.

9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் ஆறாம் நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..

ஆறாம் நாள் போற்றி

ஓம் பொன்னரசியே போற்றி

ஓம் நவமணி நாயகியே போற்றி

ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி

ஓம் சிங்கார நாயகியே போற்றி

ஓம் செம்பொன் மேனியளே போற்றி

ஓம் மங்காத ஒளியவளே போற்றி

ஓம் சித்திகள் தருவாய் போற்றி

ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி

ஓம் சுத்த பரிபூரணியே போற்றி

ஓம் மகாமந்திர உருவே போற்றி

ஓம் மாமறையுள் பொருளே போற்றி

ஓம் ஆநந்த முதலே போற்றி

ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி

ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி

ஓம் மாகேஸ்வரியே போற்றி

ஓம் மகா சண்டிகையே போற்றி

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com