என் மலர்
நவராத்திரி ஸ்பெஷல்

Navratri Special: நவராத்திரியை கொண்டாடும் போற்றி பாடல்கள்: 8-ம் நாள் இன்று..!
- முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
- ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு நேரம். முன்னிரவில் சக்தியை முறையோடு ஆராதித்து மகிழ்விப்பதே நவராத்திரி. பொதுவாக இப்பண்டிகையை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி ஒன்பது நாட்களும் 10-வது நாள் விஜயதசமி என்றும் கொண்டாட வேண்டும். இது பொதுவான விதியாக இருக்கிறது.
முதலில் நமது விருப்பப்படி வீட்டில் உள்ள கொலு பொம்மைகளை வரிசைப்படுத்தி கொலு வைத்துவிட வேண்டும்.
பின்னர், அம்மனை எழுந்தருளச் செய்து விட்டு, விக்னங்கள் இன்றி இந்தப் பூஜை நிறைவு பெற ஒன்பது நாட்களும் எந்த விதமான இடையூறும் வராமல் இருக்க விநாயக வணக்கம் சொல்ல வேண்டும்.
விநாயகரை நினைத்து நமஸ்காரம் செய்யவும். அம்மன் எழுந்தருளல் முடிந்த உடன் நவராத்திரிக்கு உரிய பூஜையைத் தொடங்க வேண்டும். முதலில் பிள்ளையாருக்கு 16 போற்றிகளை சொல்லவும்.
ஒவ்வொரு நாளும் இப்படி தொடங்கி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது.
9 நாட்களுக்குரிய போற்றி பாடல்களில் எட்டாவது நாளான இன்றைய போற்றி பாடலை பார்ப்போம்..
எட்டாம் நாள் போற்றி
ஓம் வேத மெய்பொருளே போற்றி
ஓம் மேனிக் கருங்குயிலே போற்றி
ஓம் அண்டர் போற்றும்
அருட் பொருளே போற்றி
ஓம் எண்திசை ஈஸ்வரியே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி
ஓம் மாயோனின் மனம்
நிறைந்தவனே போற்றி
ஓம் தூய ஒளியாய் தெரிபவளே போற்றி
ஓம் சிங்க வாகினித் தேவியே போற்றி
ஓம் அங்கமெலாம் காக்கும் ஆதரவே போற்றி
ஓம் சூலத்தில் சத்தியம் காப்பாய் போற்றி
ஓம் துன்பம் துடைக்கும் தூமணி போற்றி
ஓம் எதிரிகள் விரட்டும் ஏந்தலாய் போற்றி
ஓம் கடுவிஷம் இறக்கும் மருந்தே போற்றி
ஓம் காப்பதில் நிகரிலாத் தெய்வமே போற்றி
ஓம் கற்பகமாய் எம்முன் தோன்றுவாய் போற்றி
ஓம் ஜம்தும் துர்க்கா தேவியே போற்றி!!






