என் மலர்tooltip icon

    நவராத்திரி ஸ்பெஷல்

    Navratri Special: நவராத்திரி 8-ம் நாளில்  பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...
    X

    Navratri Special: நவராத்திரி 8-ம் நாளில் பக்தர்கள் அணிய வேண்டிய ஆடையின் நிறம்...

    • ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
    • முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை.

    இந்து மதத்தில் பற்பல பண்டிகைகள் இருந்தாலும் பெண்களுக்குத் தனி கவுரவம் அளித்துப் பெண்களைப் போற்றும் பண்டிகைகளில் தலையாயது நவராத்திரி. மற்ற பல பண்டிகைகள் ஒருநாள் மட்டுமே கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மட்டும் விமரிசையாக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.

    இந்த நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும் என்பது நம்பிக்கை. ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக் கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.

    அப்படியான நவராத்திரியின் எட்டாம் நாளில் மகாகவுரி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால் மயில் பச்சை நிறத்திலான ஆடையே பக்தர்கள் அணிந்து வழிபட வேண்டும். நீலம் மற்றும் பச்சை கலவையானது தனித்துவத்தை குறிக்கும் நிறமாகுகிறது.

    Next Story
    ×