search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kolukattai"

    • பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.
    • கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி மலைக்கோ ட்டையில் தாயுமான சுவாமி கோவில் உச்சியில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இதில் மேலே அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில் என்றும், கீழே அமைந்துள்ளது மாணிக்க விநாயகர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்து 4-வது நாள் வரும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி விழா இன்று தொடங்கி 14 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான இன்று 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டையைக் கொண்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இதற்காக நேற்று காலையில் இருந்தே கோவில் மடப்பள்ளி பணியாளர்கள் ஈடுபட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக் காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்தனர். பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் ஆவியில் வேகவைத்தனர்.

    இன்று காலை 9.30 மணிக்கு இந்த மெகா கொழுக்கட்டை தொட்டில் போன்ற அமைப்பில் எடுத்து செல்லப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கு படைக்கப்பட்டது.

    அதேபோல் காலை 10 மணிக்கு அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மெகா கொழுக்கட்டை எடுத்து செல்லப்பட்டு படையல் இடப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே மலைக் கோட்டைக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகங்கள் செய்து தீபாராதனைகள் நடந்தன.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு இன்று முதல் தொடர்ந்து 14 நாட்கள் வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்திபுத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 

    • கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.
    • விநாயகருக்கு உரிய திசை கிழக்கு

    பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத் தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே, பிள்ளையாருக்குப் பூஜை செய்யும் போது கொழுக்கட்டை படைக்க வேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டைகள் படைக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    கணபதிக்கு உகந்த நைவேத்தியம்

    கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம் போன்றவற்றுடன் கரும்புத்துண்டு தேங்காய், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும்.

    பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேக வைத்தது. இட்லி, தோசை. பாயாசம், அவல்,பொரியில் நாட்டுச்சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டி விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது.

    எப்படி வணங்க வேண்டும்?

    முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் மூன்று முறை குட்டி, காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.

    தூங்க வேண்டிய திசை

    விநாயகருக்கு உரிய திசை கிழக்கு சொந்த வீட்டில் வசிப்பவர்கள் கிழக்கே தலை வைத்து படுக்க வேண்டும். இடது புறம் உடல் கீழே படும்படியோ, மல்லாந்தோ படுக்கலாம்.

    மாமனார் வீட்டிற்குச் சென்றால் தெற்கே தலை வைத்துப் படுக்க வேண்டும். முகம் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அப்போது வடக்குத் திசையில் உள்ள குபேரனின் பார்வை மருமகனுக்குக் கிடைக்கும். மாமனார் வீட்டிலும் செல்வம் பெருகும்.

    வடக்கே தலை வைத்துப்படுத்தால் ஊரில் இருப்பவர்கள் நம்மை விரட்டியடிக்கும் நிலைமை ஏற்படும். இதனால்தான் இறந்து போனவர்களின் தலையை வடபுறமும் காலைத் தென்புறமும் வைத்து இறுதிச் சடங்குகளைச் செய்கிறார்கள். இந்த தகவல்களை சொல்லியிருப்பவர்கள் நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள்.

    விக்னமில்லாத சுகவாழ்வுக்கு இரவில் படுக்கப்போகும் முன் விநாயகரை மனதால் வணங்கியபடி கிழக்கே தலை வைத்துப் படுப்பதே மிக நல்லது.

    • திரு வலம்- வலம் வந்த விநாயகர் திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்
    • மதுரை-முக்குறுணி பிள்ளையார் திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையாருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் துளசி மாலை அணிவிக்கப்படுகிறது. அது ஏன் தெரியுமா? அதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    விநாயக பெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று துளசி பல்லாண்டு காலம் தவம் இருந்தாள். எப்போது என்னை மணம் முடிப்பீர்கள் என்று விநாயகரை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

    இதனால் கோபம் அடைந்த விநாயக பெருமான் துளசியை பார்த்து நீ ஒரு செடியாக மாறக் கடவது என்று கூறினார். இதை கேட்ட துளசி மனம் வருந்தினாள். விநாயகரை பார்த்து என்னை இப்படி சபித்து விட்டீர்களே, ஒரு நாளேனும் உங்கள் திரு மேனியை நான் தாங்கியிருக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

    அவளது வேண்டுகோளை விநாயகர் ஏற்றுக்கொண்டார். விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் என் திரு மேனியில் நீ தங்கி இருக்கலாம் என்று வரம் கொடுத்தார். அதன்படி விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜையின்போது விநாயகருக்கு துளசி மாலை அணிவிக்கப்படுகிறது.

    பிள்ளையார் சிறப்பு பெற்ற தலங்கள்

    எல்லா ஆலயங்களிலும் விநாயகருக்கு தனி இடம் உண்டு. ஆனாலும் பிள்ளையார் சிறப்பாக வீற்றிருக்கும் தலங்கள் பல உள்ளன. அவை வருமாறு:-

    திருவாவடு துறை-அழகிய விநாயகர்

    திருவையாறு-ஓலமிட்ட விநாயகர்

    விருத்தாசலம் ஆழத்து பிள்ளையார்

    திருச்சி - உச்சி பிள்ளையார்

    திருக்கடவூர்-கள்ள வாரண பிள்ளையார்

    திரு முருகன் பூண்டி -கூப்பிடு பிள்ளையார்

    வேதாரண்யம்-சிந்தாமணி கணபதி

    கீழ்வேளூர்-சுந்தர கணபதி

    அன்பிலாத்துறை -செவி சாய்த்த பிள்ளையார்

    திரு நள்ளாறு-சொர்ண விநாயகர்

    செங்காட்டாங்குடி-கணபதீஸ்வரர்

    திரு வலம்- வலம் வந்த விநாயகர்

    திரு வீழி மிழலை-படிக்காசு விநாயகர்.

    பாண்டிச்சேரி- மணக்குள விநாயகர்

    திரு விடை மருதூர்-படித்துறை விநாயகர்

    திருநாரையூர்-பொல்லா பிள்ளையார்

    திருவெண்ணைநல்லூர்- பொள்ளா பிள்ளையார்

    திருவாரூர்- மாற்றுரைத்த பிள்ளையார்.

    மதுரை-முக்குறுணி பிள்ளையார்

    திரு வலஞ்சுழி-வெள்ளை விநாயகர்

    பிள்ளையார் பட்டி-கற்பக விநாயகர்

    விநாகர் சதுர்த்தி கொண்டாடுவது எப்படி?

    ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினம் விநாயகரின் அவதார தினமாக அவரது பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அவர் பூலோகத்திற்கு வந்து தனது பக்தர்களை நேரடியாக காண்பார் என்பது ஐதீகம்.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி சிலைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி முதல் நாள் மாலையோ அல்லது விநாயகர் சதுர்த்தி அன்றோ வாங்கி வர வேண்டு ம். சுடாத களி மண்ணால் ஆன விநாயகர் பொம்மைகளை வாங்கி வருவது சிறப்பு.

    ஒரு பலகையை சுத்தப்படுத்தி அதில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை அமர வைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி நாளில் காலையிலே எழுந்து குளிக்க வேண்டும்.

    பஞ்சினால் செய்த மாலையை இடையிடையே சிவப்பு நிறம் இருக்குமாறு குங்குமம் தடவி தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும்.

    அருகம்புல். எருக்க மாலை போன்றவற்றை வாங்கி வைத்து கொள்ளவேண்டும். பூக்கள், அட்சதை, குங்குமம், ஆகியவைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் தேங்காயும் மிக முக்கியம். எனவே கொழுக்கட்டை தயார் செய்து வைத்து கொள்ளவேண்டும். கொழுக்கட்டை குறைந்த பட்சம் 21 இருக்க வேண்டும். உப்பு கொழுக்கட்டை, சுண்டல், அப்பம் ஆகியவைகளை தயார் செய்து வைத்துக்கொண்டு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கும் முன் விநாயகர் சிலையில் குண்டு மணியை பதித்து கண் திறந்து சந்தனம், குங்குமம், திருநீறு பொட்டு இடவேண்டும். பின்னர் பூப்போட்டு எருக்கு மாலை அணிவிக்க வேண்டும். ஒரு தாம்பளத்தில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் வைக்க வேண்டும்.

    அதோடு விளாம் பழத்தை வெல்லத்தோடு கலந்து பழ பச்சடியும் வைக்க வேண்டும்.கணேச பஞ்ச ரத்தினம், விநாயகர் அகவல் சொல்ல வேண்டும்.பின்னர் ஓம் சித்தி விநாயக நம, ஓம் ஸ்ரீமகா ஹணபதியே நம என்று சொல்லி தூப தீபங்கள் காட்டி அனைவரும் வணங்க வேண்டும்.

    எல்வோரும் வணங்கியதும் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டைகளையும் இதர பலகாரங்களையும் நிவேதனம் செய்யவேண்டும் நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்களை முதலில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதையடுத்து பெரியவர்கள் உண்ண வேண்டும். இரவு சந்திர தரிசனம் செய்யவேண்டும். விநாயகர் சதுர்த்தியன்று இரவு சந்திரனை தரிசித்தால்தான் பூஜை முழுமை பெறும்.

    இதையடுத்து மறு நாளான பஞ்சமி அன்றோ அல்லது 2 நாட்களுக்கு பிறகோ சஸ்டி அன்று புனர் பூஜை செய்யலாம். தூப தீபம் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி சிறிது பால் அல்லது பாயாசம் நிவேதனம் செய்து விநாயகர் சிலையை வடக்கு பக்கமாக நகர்த்தி வைக்க வேண்டும். பின்னர் பிள்ளையார் சிலையை எடுத்து சென்று கடலிலோ அல்லது நதியிலோ குளத்திலோ கரைக்க வேண்டும்.

    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    அணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்
    வெல்லம் பொடித்தது - 1/2 கப்
    பால் - 1 கப்
    தேங்காய்த்துருவல் - 1/2 கப்
    ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு - ஒரு சிட்டிகை



    செய்முறை :

    ஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.

    2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.

    அடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.

    பின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    இன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.

    சூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.

    இதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.

    குறிப்பு:
    வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை செய்யலாம். இதை செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 200 கிராம்,
    துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்,
    நெய் - 2 டீஸ்பூன்,
    புதினா - கால் கட்டு,
    பச்சை மிளகாய் - 2,
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை :  

    கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த கோதுமை ரவை, நறுக்கிய காய்கறிகள், புதினா, நெய், ப.மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து, உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் இந்த கொழுக்கட்டைகளை வேத்து நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை ரவை வெஜிடபிள் உருண்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×