search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ragi Kolukattai"

    கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று கேழ்வரகில் காலை நேர டிபனாக நீர் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி மாவு - அரை கப்,
    கேழ்வரகு மாவு - அரை கப்,
    தண்ணீர் - தேவைக்கு,
    கடுகு - கால் டீஸ்பூன்,
    கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், தேவையான அளவு உப்பு, சூடான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

    இந்த மாவு சிறிது ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    பிறகு இட்லி தட்டில் உருண்டைகளை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் உருண்டைகளை சேர்த்து கிளறி பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×