என் மலர்
நீங்கள் தேடியது "நவராத்திரி கொலு"
- முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
- ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் சக்தி வழிபாட்டால் நலம் யாவும் வந்து சேரும். நல்வாழ்வு தரும் நவராத்திரியில் கொலு படிகள் அமைக்கும் முறை குறித்து குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொலு படிகளை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற ஒற்றைப்படை வரிசையில் அமைக்கவேண்டும்.
முதல் படியில் ஓரறிவு கொண்டவைகளான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டும்.
இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகளின் பொம்மைகள், சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும்.

மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்கவேண்டும்.
நான்காவது படியில் நான்கு அறிவுகொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவராசிகளின் பொம்மைகள் இடம்பெற வேண்டும்.

ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள் இருக்க வேண்டும்.
ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகளை இடம்பெறச் செய்யவேண்டும்.

எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.
ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரின் உருவங்களையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடு நாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும்.
- புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
- சிவனுக்கு உகந்தது ‘சிவராத்திரி’. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் ‘நவராத்திரி’.
புரட்டாசி மாதம் ஒரு புனிதமான மாதமாகும். கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் இம்மாதத்தில் பெண் தெய்வ வழிபாட்டால் பெருமை சேரும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே சக்தி வழிபாட்டால் சஞ்சலம் தீர்க்கும் மாதமான புரட்டாசியில் வரும் நவராத்திரி விழாவை கொண்டாடினால் நலம் யாவும் வந்து சேரும். ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலுக்கும் மூல காரணமாக விளங்கும் தெய்வங்களான சிவன், பிரம்மா, விஷ்ணுவின் துணைவியர்களான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி ஆகிய தெய்வங்களை பூமாலை சூடியும், பாமாலை பாடியும் வழிபட்டால் பிரச்சனைகள் அகலும். பொருள் செல்வம் கூடும். வாழ்க்கையில் சங்கடங்கள் நீங்கி, வெற்றி வாய்ப்புகள் பெருகும். அந்த அடிப்படையில் உருவானதுதான் நவராத்திரி விழா.
சிவனுக்கு உகந்தது 'சிவராத்திரி'. அதேபோல அம்பிகையை கொண்டாட உகந்த நாள் 'நவராத்திரி' ஆகும். 'நவம்' என்றால் 'ஒன்பது' என்றும், 'ராத்திரி' என்றால் 'இரவு' என்றும் பொருள்படும். ஒன்பது இரவுகளில் அம்பிகையை கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்று சாஸ்திரம் சொல்கிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழா புரட்டாசி மாதம் 6-ம் நாள் (22.9.2025) அன்று ஆரம்பமாகிறது.
அன்றைய தினம் முதல் இல்லங்களிலும், ஆலயங்களிலும் கொலு வைக்கத் தொடங்குவர். 30.9.2025 அன்று துர்க்காஷ்டமி, 1.10.2025 அன்று சரஸ்வதி பூஜை, 2.10.2025 அன்று விஜயதசமி நிகழ்வோடு நவராத்திரி முடிவடைகிறது. இந்த நாட்களில் முப்பெரும் தேவியை வழிபட்டால் ஒப்பற்ற வாழ்க்கை அமையப்பெறும். ஒருவர் வாழ்க்கையில் கல்வி, செல்வம், வீரம் மூன்றும் இருந்தால்தான் கல்வியால் ஈட்டிய செல்வத்தை காப்பாற்றி வைத்துக்கொண்டு, வாழ்க்கை நடத்த இயலும்.
எனவே தான் 'வீரம்' தரும் துர்க்கா தேவியை முதல் மூன்று நாட்களும், 'செல்வம்' தரும் லட்சுமியை அடுத்த மூன்று தினங்களும், 'கல்விச் செல்வம்' தரும் சரஸ்வதியை அடுத்த மூன்று நாட்களும் முறையாக பூஜை செய்து வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அவ்வாறு வழிபட்டால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெற தொடங்கும் என்பது முன்னோர் வாக்கு.
தேவியின் அருள் கிடைக்க தேவர்கள் கடும் தவம் செய்தனர். இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளின் பேரருளையும் பெற முயற்சி எடுத்தனர். தேவர்கள் உடலை அசைக்காமல் தவம் செய்த நாட்களில் எல்லா வஸ்துகளும் அசையாமல் இருந்தன. அதன் நினைவாக கொலு வைத்துக் கொண்டாடுகிறோம்.
இந்த சிறப்புவாய்ந்த புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா மட்டுமின்றி, பெருமாளுக்குரிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது. சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாகவும் புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
விநாயகர் விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம்' என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது. புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
மகாலட்சுமி விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியை பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
அமுக்தாபரண விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.
ஜேஷ்டா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று, ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.
சஷ்டி - லலிதா விரதம்
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.
கபிலா சஷ்டி விரதம்
புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.
- உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
- பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான்.
மகிஷாசுரன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.
தேவர்களும் & முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.
பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள்.
அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள்.
தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.
ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று.
இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தாள்.
உடனே பார்வதிதேவி, லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள்.
ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.
மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான்.
உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்கையாகத் தோன்றினாள்.
அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள்.
பின்னர் துர்க்கா தேவி தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள்.
மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதனால் அதிர்ச்சியில் உறைந்தான்.
ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள்.
இதனைக் கண்ட தேவர்களும் & முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றி துதித்தனர்.
இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.
- பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்துள்ளாள்.
- எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.
எல்லா வழிபாடுகளுக்கும் தாய் வழிபாடாக, முதன்மை வழிபாடாக பராசக்தி வழிபாடு கருதப்படுகிறது.
பராசக்தியை வழிபட்டால் எல்லா கடவுள் அவதாரங்களையும் வழிபடும்போது என்னென்ன பலன்கள் கிடைக்குமோ, அத்தனை பலன்களும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பராசக்தியான அம்பிகை ஒருத்திதான்.
ஆனால் அவள் பல அவதாரங்கள் ஏற்று அசுரர்களை அழித்து, பக்தர்களை காத்து நல்வழி காட்டியுள்ளாள்.
அதை பிரதிபலிக்கவே ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
நவ என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு.
ஒன்பது நாட்கள் இரவில் அம்பிகையை வழிபடுவதே நவராத்திரி ஆகும்.
- முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
- இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகை 9 வடிவங்களில் வணங்கப்படுகிறாள்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்சமாக வழிபடப்படுவாள்.
அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.
இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமாக அம்பிகை வழிபடப்படுவாள்.
இந்த ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அன்னை எடுத்த அவதார நோக்கத்துக்கு ஏற்ப அலங்காரம் செய்யப்படும்.
பாடல், கோலம், நைவேத்தியங்களும் அம்பிகையின் அவதார நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இனி வரும் பதிவுகளில் இந்த 9 நாட்களும் அன்னையை எப்படி வழிபட வேண்டும் என்பதை காணலாம்....
- மகேஸ்வரியை “குமாரி” வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
- குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.
வடிவம்: மகேஸ்வரி (மது கைடவர் என்ற அசுரனை அழித்தவள்)
பூஜை : 2 வயது சிறுமியை குமாரி அவதாரத்தில் வணங்க வேண்டும்.
திதி : பிரதமை
கோலம் : அரிசி மாவால் பொட்டுக் கோலம் போட வேண்டும்.
பூக்கள் : மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நைவேத்தியம் : வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், மொச்சை, சுண்டல், பருப்பு வடை.
ராகம் : தோடி ராகத்தில் பாட வேண்டும்.
பலன் : வறுமை நீங்கும், வாழ்நாள் பெருகும்.
மகேஸ்வரி அலங்காரம்
நவராத்திரி முதல் நாள் மதுகைடப வதத்துக்கு மூலகாரணமான தேவியை மகேஸ்வரியாக வழிபட வேண்டும்.
மகேஸ்வரியை அபயவரஹஸ்தத்தோடு, புத்தகம், அட்ச மாலையுடன் "குமாரி" வடிவமாக அலங்கரித்து, மனதில் தியானம் செய்து வணங்க வேண்டும்.
இந்த "குமாரி" தேவிக்கு, மல்லிகை விசேஷம்.
எனவே மல்லிகை அர்ச்சனை உகந்தது.
அம்பாள், சங்கீதப்பிரியை ஆயிற்றே... எனவே, தினமும் சுவாரஸ்யமான சங்கீதம் வீட்டில் தவழ்ந்தால் சுபிட்சம் பெருகும்.
முதல் நாளில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடினால் விசேஷம்.
குமாரி இரண்டு வயதுக் குழந்தையாய் இருப்பாள்.
பிரதமை திதியில் இரண்டு வயதுக் குழந்தையை (தன் வீட்டுக் குழந்தை அல்ல) அழைத்து வந்து அவளை அன்னை குமாரியாகவே பாவித்து, அவளுக்கு ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
குழந்தைக்கு அணிவித்த ஆடை, அணிகலன்களைத் திரும்ப வாங்கி விடக்கூடாது.
தேவி பாகவதத்தின் முதல் அத்தியாயத்தையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதித் துதித்தால் குமாரி தேவியின் அருள் பரிபூரணமாய்க் கிட்டும்.
பிரதமை திதியில் நாம் வணங்கும் குமாரி தேவி நமக்கு குறைவற்ற வாழ்வு தருவாள்.
குழந்தையின் கள்ளம், கபடமற்ற மன நிலை நமக்கு வந்தால் தான் இறைவனை நாம் அடைய முடியும்.
மகேஸ்வரி சிவனின் சக்தி. வெள்ளை நிறம் கொண்டவள்.
இவளுக்கு ஐந்து முகம் உண்டு.
- நவராத்திரி அன்று அர்ச்சனை செய்ய வேண்டிய மந்திரம்
- ஓம் மங்கள நாயகியே போற்றி!
ஓம் பொன்னே போற்றி!
ஓம் மெய்ப்பொருளே போற்றி!
ஓம் போகமே போற்றி!
ஓம் ஞானச் சுடரே போற்றி!
ஓம் பேரின்பக் கடலே போன்றி!
ஓம் குமாரியே போற்றி!
ஓம் குற்றங்களைவாய் போற்றி!
ஓம் முற்றறிவு ஒளியோய் போற்றி!
ஓம் பேரருட்கடலே போற்றி!
ஓம் ஆற்றல் உடையாய் போற்றி!
ஓம் அருட்கடலே போற்றி!
ஓம் ஆனந்த அறிவொளி போற்றி!
ஓம் இருளகற்றுவாய் போற்றி
ஓம் இன்பத்தின் உறைவிடமே போற்றி!
ஓம் ஈயும் தயாபரி போற்றி!
ஓம் மங்கள நாயகியே போற்றி!
இப்படி அர்ச்சனை முடிக்கவும்.
- கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
- முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.
கல்ப காலத்தின் இறுதியில் உலகத்தைப் பிரளயம் சூழ்ந்தது.
மகா விஷ்ணு ஒரு சிறு குழந்தையாக சேஷசயனத்தில் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்க, மது கைடபர் என்ற இரு அரக்கர்கள் எக்களிப்பில் திருமாலின் உந்தியிலிருந்து உதித்த பிரமனுடன் போர் புரியத் தொடங்கினர்.
பிரமன் பராசக்தியை மகாதேவி மகாமாயை, மகா புத்தி, மகாவித்யை என்றெல்லாம் போற்றித் துதித்து இவ்விரு அசுரர்களை மயக்கி, உலகைக் காத்தருள வேண்டினார்.
அம்பிகை மகாவிஷ்ணுவின் யோக நித்திரையிலிருந்து வெளிப்பட்டு மது கைடபர்கள் இருவரையும் தம் தொடை மீதே வைத்து தனது சக்ராயுதத்தால் மகாவிஷ்ணு வதம் செய்யக் காரணமாக இருந்தார்.
சிவப்பு வண்ணப் பட்டாடைகளையும், சிவப்பு கலந்த ஆபரணங்களையும் அணிவிக்கலாம்.
முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம்.
எள் சாதம், எள் பாயாசம், வேர்க்கடலை சுண்டல் வைத்து பூஜை செய்யலாம். அதையே வருபவர்களுக்கும் பிரசாதமாக வழங்கலாம்.
- கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலுவிருப்பவளே “ஸ்ரீ ராஜராஜேஸ்வரி”
- கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.
நவராத்திரி இரண்டாம் நாள் மகிஷாசூரனை வதம் செய்வதற்கு முன்பு, அவனது சேனைகளை துவம்சம் செய்ய புறப்பட்ட அன்னையை, கவுமாரியாக மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாக மனதார நினைத்து பூஜிக்க வேண்டும்.
கரும்பு வில், பாசாங்குசம், மலரம்பு இவற்றை ஏந்தி அழகாக, கொலு விருப்பவளே "ஸ்ரீ ராஜராஜேஸ்வரி"
இவளுக்குப் பிடித்த பூ மல்லிகையும், துளசியும்.
இவற்றைக் கொண்டு அர்ச்சித்தால் மனம் நிறைந்து அருள்பாலிப்பாள்.
கல்யாணி ராகத்தில் பாடலாம். புளியோதரையை நைவேத்தியமாய் படையுங்கள்.
கவுமாரியை த்ரிசக்தி என்றும் சொல்வார்கள்.
மூன்று நிலைகளை மூன்று அக்னிகளில் சேர்த்து ஏகா அக்னியாய் நிற்பவளே அன்னை த்ரிமூர்த்தி.
இவள் மூன்று அக்னிகளாய் இருப்பதனால் தான் ஸ்வாஹாதேவியும், ஸ்வதா தேவியும் திருப்தி அடைகின்றனர்.
இவள் மூன்று வயதுக் குழந்தை வடிவாக இருப்பவள்.
துவிதியை திதி நாளில் மூன்று வயதுக் குழந்தையை அழைத்து வந்து, த்ரிமூர்த்தி தேவியாய் பாவித்து ஆடை, அலங்காரங்கள் செய்து, பாத பூஜை செய்து வணங்க வேண்டும்.
தேவி பாகவதத்தில் இரண்டு, மூன்று அத்தியாயங்களையும், ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தையும், நவாஷரி மந்திரத்தையும் ஓதுதல் வேண்டும்.
முன்று அக்னிகளாய்த் திகழும் த்ரிமூர்த்தி தேவியை வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறவாமையை வரமாய் அளிக்கின்றாள்.
குரு அருள் பெற்றிடவே மூன்று நிலைகளை நாம் அடைய வேண்டும். மூன்று நிலைகள் அடைய அன்னையின் அருள் வேண்டும்.
கவுமாரி என்ற அவதாரம் முருகப் பெருமானின் சக்தியாகக் கருதப்படுகிறது.
இவளுக்கும் 6 முகங்கள், 12 கைகள் உண்டு என்று ஸ்ரீதத்துவநியதி கூறுகின்றது.
இவளது கரகங்கள் வரத, அபய முத்திரைகள் தவிர வேல், கொடி, தண்டம், பாத்திரம், அம்பு, வில், மணி, தாமரை, சேவல், பரசு ஆகியவற்றை ஏந்தி இருக்கும்.
கவுமாரி 13 கண்களை உடையவள் என்று காரணாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவள் மயிலை வாகனமாகவும், கொடியாகவும் கொண்டவள்.
- ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி!
- ஓம் சுந்தர வடிவே போற்றி!
ஓம் வளம் நல்குவாய் போற்றி
ஓம் நலந்தரும் நாயகி போற்றி
ஓம் முக்கண் மூர்த்தியே போற்றி
ஓம் அறத்தின் வடிவோய் போற்றி
ஓம் மின் ஒளி அம்மா போற்றி
ஓம் எரி சுடராய் நின்ற தேவி போற்றி
ஓம் ஏற்றத்துக்கரசி போற்றி
ஓம் எரம்பன் தாயானவளே போற்றி
ஓம் எங்களின் தெய்வமே போற்றி
ஓம் ஒளிக்குள் ஒளிர்பவனே போற்றி
ஓம் ஈரேழுலகிலிருப்பாய் போற்றி
ஓம் சூளா மணியே போற்றி
ஓம் சுந்தர வடிவே போற்றி
ஓம் ஞானத்தின் வடிவே போற்றி
ஓம் நட்புக்கரசியே போற்றி
ஓம் திரிமூர்த்தி தேவியே போற்றி
- அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.
- தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.
ராஜ ராஜேஸ்வரியை தியானிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
1. எந்த மந்திரத்தாலும் நம்மை கட்ட முடியாது.
2. எந்த மந்திரத்தாலும் நம்மை அடிமை படுத்த முடியாது.
3. ஏவல் ,பில்லி சூன்யங்கள் நம்மை ஒன்றும் செய்யாது.
4. விரோதிகள் தன்னால் அழிந்து விடுவர்.
5. துரோகிகள் சந்ததி இல்லாமல் ஆகி விடும்.
6. அனைவரும் போற்றி புகழக் கூடிய வசிய சக்தி உண்டாகி விடும்.
7. சித்து வேலைகள் கை கூடும்.
8. அதிர்ஷ்ட லட்சுமி நம் வீட்டிற்கு வந்து நம்முடைய வாயிற் கதவை தட்டும்.
9. தோல்வி புற முதுகு காட்டி ஓடியே விடும்.
10. அரசனும் பணியக் கூடிய தகுதி நமக்கு வந்து சேரும்.
- சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
- சர்க்கரைப் பொங்கல் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
நவராத்திரி 3ம் நாள் மகிஷாசூரனை வதம் புரிந்து, சூலமும் கையுமாய், மகிஷனின் தலைமீது வீற்றிருக்கும் தாயை மனதில் நினைத்துக் கும்பிடுவார்கள்.
இவளை, இந்த நிலையில் "கல்யாணி" என்று அழைப்பார்கள்.
சம்பங்கியும் மரிக்கொழுந்தும் கல்யாணி தேவியின் விருப்ப மலர்கள்.
மனதில் உள்ள பக்தியை எல்லாம், சர்க்கரைப் பொங்கலாய் சமைத்து, நைவேத்தியம் செய்யுங்கள்.
வெற்றியையே உகந்தளிக்கும் செல்விக்கு இனிப்பையே படைப்போம்.
மகிஷாசுரனை வதம் செய்த தேவி வராகியாகவும் அம்பிகை காட்சி தருகிறாள்.






