search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Holy Water"

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    • ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    தென்காசி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது.

    கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை ஆகியவை இன்று நடக்கிறது.

    இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் ஆகியவை நடக்கிறது.

    அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் பகுதியில் சிறிய மலை குன்றின் மீது ராமபிரானின் வலது கால் பாதம் இருப்பதாக கூறி முன்னோர்கள் காலத்தில் இருந்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பாதம் இருக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் ராமர் சீதையை தேடி செல்லும் பொழுது தாகத்திற்கு தண்ணீர் அருந்தியாக நம்பப்பட்டு வரும் சுனை ஒன்றும் உள்ளது. சுனையில் எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் நிரம்பியிருப்பதால் காட்டுப்பாதையில் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் குடிநீர் தேவையை அந்த சுனை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு இந்த சுனையில் இன்று பூலாங்குளம் கிராமத்தை சேர்ந்த ஜெகநாதன் தலைமையிலான ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என திரளான பக்தர்கள் சென்று ராமர் பாதம் இருக்கும் பகுதியில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

    பின்னர் சுனைநீரிலும் சிறப்பு பூஜைகள் செய்து கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுனை நீரை பருகி ராமபிரானை வழிபட்டனர்.

    • ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.
    • சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    மயிலாடுதுறை:

    கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களின் பாவங்களை போக்கி கொண்டனர்.

    பக்தர்களின் பாவசுமையால் கருமை நிறமடைந்த நதிகள் அனைத்தும் தங்கள் பாவசுமைகளை போக்கிக் கொள்ள சிவபெருமானை வேண்டியபோது, நதிகள் அனைத்தும் மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் தங்கி காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு பாவச் சுமைகளை போக்கிக்கொள்ள இறைவன் அருளியதாக புராண வரலாறு கூறுகிறது.

    எனவே, காசிக்கு நிகராக மயிலாடுதுறை போற்றப்படுகிறது.

    நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரியில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்களின் பாவசுமைகளை போக்கி கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு ஐப்பசி துலா உற்சவம் முதல் தீர்த்தவாரியுடன் நேற்று தொடங்கியது.

    கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் மயிலாடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் காவிரி ஆற்றில் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புஷ்கர தொட்டியில் போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாக புனித நீர் தெளிக்கும் வகையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்திருந்தது.

    காலையிலிருந்து ஏராளமான பொதுமக்கள் புனிதநீராடினர்.

    தொடர்ந்து அபயாம்பிகை உடனான மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி உடனாகிய அய்யாறப்பர், தெப்பக்குளம் மற்றும் மலைக்கோவில் விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு பக்க கரைகளிலும் எழுந்தருளினர்.

    அங்கு அஸ்திர தேவருக்கு பால், தயிர், தேன், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    தொடர்ந்து தினந்தோறும் மாயூரநாதர் மற்றும் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சந்திரசேகர சுவாமிகள் புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறவுள்ளது.

    முக்கிய நிகழ்வாக சிவ வைணவ தலங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்சவமாக திருக்கல்யாணம், தேரோட்டம், அமாவாசை தீர்த்தவாரி, கடைமுழுக்கு, முடவன் முழுக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    இதனால் சிவ வைணவ தலங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • செம்பனார்கோயில் அருகே பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
    • புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே காளகஸ்திநாதபுரம் மேற்கு தெருவில் மிக பழைமையான காமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

    இக்கோயில் கும்பாபி சேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைத்து நான்கு கால பூஜைகள் நடைபெற்றது.

    யாகசாலையில் பூர்னா குதி நடைபெற்று, மேள தாளங்கள் முழங்க, சுந்தர் சிவாச்சாரியார் புனித நீர் கடங்களை தலையில் சுமந்து விமான கோபுரங்களை சென்றடைந்தனர்.

    பின் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, வானவேடிக்கை நடைபெற, புனித நீர் குடங்களை கொண்டு விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    இதனை தொடர்ந்து கருவரையில் சுவாமிக்கு புனித நீரை ஊற்றி மஹா கும்பாபிசேகம் நடைபெற்றது.

    விழாவில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், கிராமவாசிகள்,விழா குழுவினர்கள், மற்றும் நாட்டான்மைகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தை வந்தடைந்தது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ மனோன்மணி சமேத கைலாசநாதர் கோவில் உட்பட ஏழு கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, பிம்பசுத்தி ரக்ஷா பந்தனன், நாடி சந்தானம், தத்துவச்சாரணை, ஸ்பரிசாஹூதி, திரவியா ஹூதி, மகாபூர்ணா ஹூதி, யாத்ரா தானம், கிரகப்பிரிதி அனைத்து ஆலயங்களுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்கள் சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், ஸ்ரீ சீதலா தேவி மாரியம்மன், ஸ்ரீ மன்மத சுவாமி கோயில், ஸ்ரீ கூந்தாளம்மன் கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயம், ஸ்ரீ கைலாசநாதர் ஆலயங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஆச்சாரிய உற்சவம், எஜமானும் உற்சவம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடு துறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன், மயிலாடுதுறை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாக குழுத்தலைவரும், மாவட்ட திமுக துணைத்தலை வருமான மு. ஞானவேலன் உள்ளிட்ட 2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பெரும்பள்ளம் கிராம வாசிகள் செய்தனர்.

    • கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜை நடந்தது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த கழனிவாசல் கிராமத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 20-ந் தேதி 2 கால யாகசால பூஜையை சிவசிதம்பரம் குடும்பத்தார்கள் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில், கல்யாணசுந்தர குருக்கள் நடத்தினார்.

    அதன் பின்னர், பூர்ணாஹுதி நடைபெற்றது.தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கோபுரத்தை வந்தடைந்தனர்.

    பின், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

    கும்பாபிஷேக பணிகளுக்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் குலோத்துங்க சோடியன், டெல்லியை சேர்ந்த சந்திரசேகர், ராணுவதுறை உதவி செயலாளர் தேன்மொழி சந்திரசேகர், ஆசிரியை வனிதா குலோத்துங்க சோடியன், மாதவன் உள்ளிட்ட பக்தர்கள் உபயம் செய்தனர்.

    விழாவில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜாங்கம், குருக்கள் ரமணி, கோவில் பூசாரி கலியமூர்த்தி, நாட்டாமைகள், கிராமமக்கள், மகளிர் சுய குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிக்கல் சிங்கார வேலன் கோவிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் அமைந்துள்ளார் சிங்கார வேலவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயமாகும் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு புகழ்மிக்க இவ்வாலயத்தில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு யாகம் நடைபெற்றது.

    பின்னர் சிங்காரவேலவர் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் பால் விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சிங்காரவேலனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது ஆடிக்கிருத்திகை என்பதால் நாகப்பட்டினம் மட்டுமின்றி திருவாரூர், காரைக்கால், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பிரஹன்நாயகி அம்பிகை சமேத அருணஜடேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருப்பணி கள் முடிவடைந்த நிலையில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    இதற்காக கோவிலின் அருகே 59 யாகம் குண்டங்களுடன் கூடிய பிரமாண்ட யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டு, இன்று (3-ந் தேதி) முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு யாகசாலை மண்டபத்தில் புனிதநீர் கலசங்கள் வைக்கும் நிகழ்வு நடந்தது. திருப்ப னந்தாள் மன்னியாற்றில் இருந்து புனிதநீர் கொண்ட கலசங்களுக்கு திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்கள் யானையின் மீது வைத்து, மேளதாளங்கள் முழங்க, பெண்கள் முலைப்பாரி எடுத்து கோவிலின் 4 வீதிகளிலும் ஊர்வலமாக வந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனிதநீர் கலசங்கள் வைக்க ப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், காசித்திருமட அதிபர் எஜமான் சுவாமிகள், இளவரசு தம்பிரான் சுவாமிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • முன்னதாக கடந்த 21-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • கடம் புறப்பட்டு நடைபெற்று கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே ஆம ப்பள்ளம் கிராமத்தில் பழனியாண்டவர் சுவாமி கோயில் உள்ளது.

    இக்கோ யில் திருப்பணிகள் செய்ய ப்பட்டு கும்பாபி ஷேகம் நடந்தது. முன்ன தாக புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து விழா அன்று நான்காம் கால யாகசாலைபூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள, தாளங்கள் முழங்கிட கோயிலை வலம்வந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபி ஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.
    • புனிதநீர் அடங்கிய கடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

     சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே வேதராஜபுரம் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது.

    முன்னொரு காலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கு அடைக்கலம் தந்ததால் இவருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்படுகிறார்.

    இந்த கோவிலில் விநாயகர், அகோர வீரபத்திரர், தூண்டிக்கார சாமி, பெரிய உடையார், சின்ன உடையார் உள்ளிட்ட பரிவார சாமி சன்னதிகள் திருப்பணி நிறைவடைந்துள்ளது.

    இதை அடுத்து இந்த கோவிலின் குடமுழுக்கு நேற்று நடந்தது.

    இதை ஒட்டி கடந்த 22 ஆம் தேதி கணபதி பூஜை உடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    இந்த பூஜைகளை திருவெண்காடு ஸ்வேதாரணேஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 25க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்கள் இதில் பங்கேற்றனர்.

    நேற்று காலை 6 ஆம் கால யாக பூஜை தொடங்கியது.

    அப்போது கோ பூஜை, லட்சுமி பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன.

    பின்னர் மகாபூர்ணாஹூதி செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து மேள, தாளம் முழுங்கிட சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய யாக குடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு கோபுர கலசங்களுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    இதை அடுத்து ஒரே நேரத்தில் அனைத்து சன்னதிகளுக்கும் புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    அப்போது கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டதை கண்ட பக்தர்கள் ஐயப்பா ஐயப்பா என சரண கோஷமிட்டனர்.

    பின்னர் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர், குலதெய்வ பக்தர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.இதை ஒட்டி திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் செய்திருந்தனர்.

    • கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.

    தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர், சிங்கப்பூர் தொழிலாளர் சபா பவுர்ணமி குழுயாக பூஜை தலைவர் துரை அரசன், தொழிலதிபர்கள்சிங்கப்பூர் சபாரெத்தினம், தோப்புத்துறை ஆரிபா, இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பூர்ணாஹீதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மாலாபுரம் அக்ரகாரத்தில்

    ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு, ஸ்ரீ பகவத் ப்ராத்தனா அனுக்ஞை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை கும்ப பூஜை, கலாகர்ஷனம்,கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் அங்குரார்பனம், திக்பந்தனம் ஆகியவற்றுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    காலை 4ம் கால யாக சாலை பூஜை நிறைவில், மகா பூர்ணாஹீதி அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்ற பின்பு, மங்கல வாத்தியங்கள் முழங்கள், கடங்கள் புறப்பாடு நடைபெற்று அதன் பிறகு பட்டாச்சாரிகள் வேத மந்திரம் முழங்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்ற மகா கும்பாபி ஷேகம் சிறப்பாக நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    இதனைத் தொடர்ந்து மாலையில் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு அலங்காரம் மற்றும் வாண வேடிக்கைகள் நாதஸ்வர கச்சேரியுடன் கருட சேவை புறப்பாடு திருவீதி உலாவும் நடைபெற்றது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோபுராஜபுரம், மாலாபுரம், பெருமாங்குடி பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் நாட்டான்மை காரர்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

    ×