search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consecrated"

    • புனித நீர் தெளிக்கப்பட்டது
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோமாசிபாடி அடுத்த கலித்தேரி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஸ்ரீரேணு காம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது விழாவை முன்னிட்டு யாக குண்டங்கள் அமைத்து கலசங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு, 2 கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மேளதாளம் முழங்க புனித நீர் நிரப்பப்பட்ட கலசத்தை சிவாச்சாரியார்கள் எடுத்துக்கொண்டு கோயிலை வலம்வந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடத்தினார்கள். பின்னர் பக்தர் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    விழாவில், திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம் எல் ஏ., திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.கே.அரங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நைனாக்கண்ணு, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பளான், கோவில் நிர்வாகிகள் கோபால்சாமி | கணேசன், திருமூர்த்தி, ரகுராமன், ஸ்தபதிகள் பாலாஜி, குமார் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது
    • கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த மேல் நகர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஜோதீஸ்வரி சமேத ஸ்ரீ ஜோதி நாகேஸ்வரர் கோவில் கும்பாபி ஷே கம் நடந்தது.

    இதனை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகாதீபா ராதனை காண்பி க்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் கோவில் கோபுரத்தில் உள்ள கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சூரியதாங்கல் கிராமத்தில் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    புனித நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஸ்ரீ தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து மங்களம் மேல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அம்பேத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது
    • ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் மாரியம்மன் மற்றும் எட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்த புனித நீரானது பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது.

    இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது.
    • 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பழங்கரை ஊராட்சி நல்லி கவுண்டம்பாளையத்தில் கன்னிமார் சுவாமிகள் கருப்பராயன் திருக்கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் கடந்த ஆறு மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. இதையடுத்து நேற்று இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கடந்த 1 ந்தேதி திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வேள்வி ஆகியவை நடந்தன. அன்று காலை 10 மணியளவில் பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்று சுவாமி வழிபாடு செய்தனர். 2 ந்தேதி காலை 8 மணி அளவில் விமான கலசம் நிறுவுதல் நிகழ்ச்சி நடந்தது.

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை நிலத்தேர் வழிபாடு, என் திசை காவலர் வழிபாடு, காப்பு அணிதல், ஆகியவை நடந்தன. மாலை 6 மணிக்கு முதல் கால வேள்வி, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், அருளாளர் அமுதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. 3-ந் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 6 .45 மணிக்கு வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடந்தன.

    காலை 7 மணி அளவில் திருக்குடங்கள் திருக்கோவிலில் வளம் வந்தது. இதை அடுத்து 8 மணியளவில் வினாயகர் விமானம் மற்றும் மூல மூர்த்திகளாகிய, கருப்பண்ணசாமி, கன்னிமார் சாமிகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் அவினாசி, நல்லி கவுண்டம்பாளையம், பழங்கரை,திருப்பூர், மேட்டுப்பாளையம், சந்தியங்கலம், மைசூரு, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.

    உடுமலை:

    உடுமலை அருகே பூளவாடி பொம்மநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன், செல்வவிநாயகர் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது.

    மேலும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன், கால யாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு முதலில் விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீமாகாளியம்மன் , விமானம் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.

    கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இறுதியாக கோ மாதா பூஜை நடத்தப்பட்டது. இதில் உடுமலை , தாராபுரம் ,குடிமங்கலம் ,கோவிந்தாபுரம்,குண்டடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • Consecrated, Deeparathana, கும்பாபிஷேகம், தீபாராதனை

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெரிய கள்ளங்காடு மகா கணபதி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பெரியகள்ளங்காடு கிராமத்தில் அருள் பாலித்து வரும் மகா கணபதி திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், மூன்றாம் காலயாக பூஜை, நான்காம் காலயாக பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, யாத்ரா தானம், மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஸ்ரீ மகா கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை காண கள்ளங்காடு, குருவிக்கரம்பை, குண்டாமரைக்காடு, நாடாகாடு, கொன்றைக்காடு, காலகம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கோவில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • இந்திராணி அம்மன், கவுமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்துள்ள கொத்தங்குடியில் உத்தண்டி அய்யனார், தூண்டிகாரன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாக சாலை பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.

    பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடந்தது.

    தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது.

    பின்னர் சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சித்தி விநாயகர், வாராகி அம்மன், இந்திராணி அம்மன், கவுமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • யாகசாலை பூஜைகள் கடந்த 27-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரிவேளூர் கிராமத்தில் ஆனந்தவள்ளி சமேத சுயம்புநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

    மகாவிஷ்ணு இந்த ஊரில் தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்ததால், ஹரிவாசநல்லூர் என்னும் புராதான பெயரை பெற்றுள்ளது.

    அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அரிவேளூர் என்று அழைக்கப்படுகிறது.

    பழமை வாய்ந்த இக்கோயில் புனரமைக்கப்பட்டு 85 ஆண்டுகளுக்குப் பிறகு, திருப்பணிகள் செய்யப்பெற்று மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் 27 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரண்டாம் கால யாகசாலை பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.

    இந்நிலையில், நான்காம் காலை யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து, விமான கும்பத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை ஆலய அர்ச்சகர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலை மையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

    நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் க.அன்பழகன், அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், கோயில் செயல் அலுவலர் அன்பரசன் மற்றும் கிராம பிரமுகர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
    • வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

    திருநாகேஸ்வரம்:

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வெங்கடாசலபதி கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வருகிற 29-ந் தேதி வெங்கடாசலபதி கோவில், வடக்கு வீதியில் உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவில் வளாகத்தில் 28 வேதிகைகள், 34 ஹோம குண்டங்கள் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 150 வேத விற்பன்னர்கள் வருகை தந்து நான்கு வேதங்களும் படித்தனர்.

    பின்னர், இரவு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முதல்கால யாகசாலை பூஜையில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், அரசு குரூப்ஸ் தலைவர் திருநாவுக்கரசு, இ.பி. சில்க்ஸ் இ.பி. சேதுராமன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா வீரகுமார், அபிராமி கார்த்திகேயன், பாலச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் மகேஸ்வரி துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து, இன்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது, பின்னர், மாலை 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு சாந்தா, கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க நாச்சியார், உள்ளிட்ட கோயில்களும், மேலவழி பகுதியில் திரௌபதி அம்மன், ஸ்ரீ பூமி தேவி அம்மன் ,உள்ளிட்ட கோயில்களும் திருப்பனந்தாள் சன்னதி தெருவில் ஸ்ரீ வேம்பு முத்து மாரியம்மன் கோவில்களில் திருப்பணிகள் கும்பாபிஷேகம் செய்திட திட்டமிட்டு, திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகள் விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை, கஜ பூஜை நடைபெற்று, காவிரியாற்றில் இருந்து கலசங்களில் புனிதநீர் கொண்டு வரப்பட்டு கும்ப அலங்காரத்துடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்று முதல்கால யாக பூஜைகள் தொடங்கியது.

    தொடர்ந்து 24-ந் தேதி சனிக்கிழமை இருவேளை யாகசாலை பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்று 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை 4ம் கால யாகசாலை பூஜை பூர்ணாஹதியுடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டு, நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூ மாரி பொழிய கடங்கள் புறப்பாடும் அதனை அடுத்து, ஒரே நேரத்தில் 8 ஆலயங்களில் மூலவர் விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

    இதில் தருமபுர ஆதீனம் 27 வது மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருமுன்னர், காசி திருமட அதிபர் ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள், இளவரசு சபாபதி தம்பி ரான் சுவாமிகள் கலந்து கொண்டனர்.

    சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஒரே நேரத்தில் 8 கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடந்ததால் திருப்பனந்தாள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வருகையால் திருப்பனந்தாளி ஆன்மீக பூமியாக திகழ்ந்தது.

    • கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக, கடந்த 22-ந் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.

    தொடர்ந்து, நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் வெங்கடேச குருக்கள் தலைமையில் சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர், சிங்கப்பூர் தொழிலாளர் சபா பவுர்ணமி குழுயாக பூஜை தலைவர் துரை அரசன், தொழிலதிபர்கள்சிங்கப்பூர் சபாரெத்தினம், தோப்புத்துறை ஆரிபா, இந்து நற்பணி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன், வீரராசு கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம்முருகையன், ஆத்மா குழு தலைவர் சதாசிவம், இந்து நற்பணி மன்றத்தினர், தோப்புத்துறை முஸ்லிம் ஜமாத் மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×