search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகோட்டை சிந்தாமணி கூத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பெரியகோட்டை சிந்தாமணி கூத்த அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

    • விநாயகர் பூஜை, தீபாராதனை, கோபூஜை, 2-ம் கால யாகபூஜை நடைபெற்றது.
    • கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனிதநீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    மதுக்கூர்:

    பட்டுகோட்டை அருகே அருள்மிகு பூர்ணாம்பிகா புஷ்கலாம்பிகை சமேத அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் மற்றும் பிடாரி அம்பிகையின் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்தி ற்குட்பட்ட பெரியக்கோட்டை கிராமத்தில் அருள்மிகு பூர்னாம்பிகா, புஷ்கலாம்பிகை அருள்மிகு சிந்தாமணி கூத்த அய்யனார் பிடாரி அம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.

    இந்த திருக்கோயில் சிலை ஒரே கல்லில் ஆனது குறிப்பிடத்தக்கது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட விநாயகர் பூஜை மஹகணபதி ஹோமம் விநாயகர் பூஜை தீபார்த்தனை, கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து பல்வேறு புனித தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட கலச நீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது.

    இந்த புனித நீரை மங்கல இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் சுமந்தபடி கருட பகவான் கலசத்தை சுற்றிவர புனித நீர் கும்பத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடை பெற்றது.

    நிகழ்ச்சியை பெரிய கோட்டை மதுக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டாரங்களில் இருந்த பொதுமக்கள் நிறைய பேர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×