search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த செம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, கோபுர கலசம் நிறுவுதல், சுவாமி சிலைகள் நிறுவுதல், முதல் கால வேள்வி பூஜை உள்ளிட்டவை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து கோவில் கோபுர கலசங்களின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பின்னர் ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீதீப்பாஞ்சம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×