என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேத்தை யொட்டி கடங்ளில் புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி
- கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- புனிதநீர் நிரப்பி அதனை ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் உள்ளது. அபயாம்பிகை அம்மன் மயில் உருவம் கொண்டு சிவனை பூஜித்து சாப விமோசனம் அடைந்த தலம். மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை வள்ளி தேவசேனா உடனாகிய சுப்பிரமணிய சாமி கோவிலில் நாளை மறுநாள் (24-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா கடந்த 19-ம் தேதி எஜமானர் அனுக்ஞை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக புன்னிய நதிகளில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு மயிலாடுதுறை துலா கட்ட காவிரி கரையில் உள்ள காவிரி அம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, 10-க்கும் மேற்பட்ட மல்லாரி மேளக்கச்சேரி உடன் ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல, 100-க்கும் மேற்பட்ட வேத சிவ ஆகம பாடசாலை சிறுவர்கள் தேவார பாடல்கள் பாடி பின் தொடர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொள்ள வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி அதனை யானைகள் மீது ஏற்றி ஊர்வலமாக மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன கட்டளை மடத்தின் வாசலில் தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மலர் தூவி புனித கடங்களை வரவேற்றார்.
தொடர்ந்து யாகசாலையில் பாலசந்தர் சிவாச்சாரியார், திருக்கடையூர் மகேஷ் குருக்கள் ஆகியோர் முதல் கால பூஜைகள் தொடங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்