என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • தேவகோட்டை அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    தேவகோ ட்டை அருகே ஏழுகோட்டை நாட்டைச் சேர்ந்த பெரியகோடகுடி கிராமத்தில் மிகப்பழமை யான முத்துமாரியம்மன் கோவில் மற்றும் கோட்டை விநாயகர் தர்ம முனீஸ்வரர், ஆகாச வீரன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் கடந்த சில மாதங்களாக புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்தது. அதன்படி நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இன்று காலை 5:30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மண்டப சபா சுவாமிக்கு, ரக்ஷா பந்தனம், கோ பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, ஆசிர்வாதம் தீபாரணை நடைபெற்றது.

    காலை 9 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். கண்ணங்குடி ஒன்றிய பெருந்தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக் தலைமை தாங்கினார்.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், திருப்பட்டு சாற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேக விழாவில் சுமார் 5 ஆயிர த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×