என் மலர்

    நீங்கள் தேடியது "Krithikai"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாத திங்கள்கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.
    • புனிதநீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைக்கழி கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு தல சிறப்புகளை உடைய இக்கோவிலில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதத்தில் திங்கள் கிழமையில் வரும் கிருத்திகை தான் சோமாவாரமாகும்.

    அதைப்போல் நேற்று தை மாதமான கீர்த்திகை திங்கள் கிழமை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

    நெல்லின் மேல் சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு மா இலை பூ வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு ஹோமம் பூரனாகஹூதி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து பூஜிக்கப்பட்ட சங்குகள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆலய வெளி மற்றும் உட்புர பிரகாரத்தினை வலம் வந்து சுப்ரமணிய சுவாமி மற்றும் பாவவிநாச பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய 1008 சங்குகளால் மகாபிஷேகம் நடைபெற்றது.

    கோயில் அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

    இந்நிகழ்சிகளை நெடுவாசல் மாணிக்கம் பிள்ளை வகையரா ஏற்பாடுகள் செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகன், பரமத்தி வேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் கபிலர்மலையில் உள்ள ‌பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில்‌ உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை‌ முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,பிலிக்கல்பாளையம் ‌விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ‌சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோவிலில் உள்ள ராஜா சுவாமி, மற்றும் கந்தம்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் முருகன், பாலப்பட்டி முருகன் கோவில், மோகனூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×