என் மலர்
உள்ளூர் செய்திகள்

காடம்பாடியில் தேர்பவனி நடைபெற்றது.
காடம்பாடி புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி
- ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
- புனித நீர் தெளித்து வீதி வழியாக தேர்பவனி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காடம்பாடியில் பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது.
ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது முன்னதாக ஆலயத்தில் ஆலய பங்கு தந்தை பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரி கக்ப்பட்ட சப்பரத்தில் புனித செபஸ்தியார்எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story






