என் மலர்
நீங்கள் தேடியது "Prasad"
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் 7வது நாளான இன்று காராமணி சுண்டல், வெஜிடபிள் சாதம், இனிப்பு பொங்கல் செய்து காலராத்திரி தேவிக்கு படைக்கலாம்.
முதலில், காராமணி சுண்டல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
காராமணி (கறுப்பு கண் பட்டாணி) - 1 கப்
எண்ணெய் - 1-2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2 (காரத்திற்கு ஏற்ப)
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)
இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது, விருப்பப்பட்டால்)
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
துருவிய தேங்காய் - 2-3 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
* காராமணியை இரவில் அல்லது குறைந்தது 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
* பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, காராமணியுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2-3 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
* காராமணி குழையாமல், உதிரியாக இருப்பது முக்கியம். வெந்ததும் நீரை வடிக்கட்டி தனியே வைக்கவும்.
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.
* பிறகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு (சேர்ப்பதாக இருந்தால்), காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து சில நொடிகள் வறுக்கவும்.
* விருப்பப்பட்டால், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கலாம்.
* இப்போது வேகவைத்து வைத்துள்ள காராமணியை கடாயில் சேர்த்து, தாளிப்புடன் நன்கு கலக்கவும்.
* காராமணியுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1-2 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறவும்.
* கடைசியாக, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து (விருப்பப்பட்டால்), நன்கு கலந்துவிட்டு அடுப்பை அணைக்கவும்.
* சுவையான காராமணி சுண்டலை சூடாக அல்லது வெதுவெதுப்பாக மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறலாம்.
இந்த சுண்டலை நவராத்திரி காலத்தில் நிவேதனமாகவும் படைக்கலாம்.
வெஜிடபிள் சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
கலப்பு காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி, குடைமிளகாய்) - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் (விரும்பினால்)
பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
கொத்தமல்லி தழை - சிறிது

செய்முறை:
* முதலில், குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
* பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* அதனுடன் பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்கவும்.
* இப்போது நீங்கள் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
* ஊறவைத்து, கழுவிய அரிசியை சேர்த்து 2 நிமிடங்கள் லேசாக வதக்கவும்.
* தேவையான அளவு உப்பு மற்றும் பிரியாணி மசாலா சேர்த்து நன்கு கலக்கவும்.
* 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, மிதமான தீயில் 2 விசில் வரும் வரை வேகவிடவும்.
* குக்கரின் ஆவி அடங்கியதும், திறந்து சாதத்தை மெதுவாக கிளறவும்.
* இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, ரய்தா அல்லது குழம்புடன் பரிமாறவும்.
இனிப்பு பொங்கல்:
நவராத்திரியின் போது பிரசாதமாக படைக்கப்படும் இனிப்பு பொங்கல் என்பது சர்க்கரைப் பொங்கல் ஆகும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - கால் கப் முதல் அரை கப் வரை
வெல்லம் - 2 கப் அல்லது தேவைக்கேற்ப
நெய் - கால் கப் முதல் 3 டேபிள் ஸ்பூன் வரை
முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் - ஒரு ஸ்பூன் அல்லது தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை
* ஒரு குக்கரில், லேசாக வறுக்கப்பட்ட பாசிப்பருப்பு, கழுவிய அரிசி, தேவையான அளவு தண்ணீர், மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவிடவும்.
* ஒரு கடாயில் வெல்லத்தை எடுத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்.
* வெல்லப் பாகை வடிகட்டி, குக்கரில் உள்ள அரிசி-பருப்பு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறவும்.
* மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* வெந்த அரிசி-பருப்பு கலவையில் நெய், வறுத்த முந்திரி, திராட்சை, மற்றும் ஏலக்காய்த்தூளைச் சேர்த்து நன்கு கிளறி, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
*நவராத்திரி ஸ்பெஷல் இனிப்புப் பொங்கல் தயார்.
- பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
- இந்திய பக்தத்ர்களிடம் ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 வசூலிக்கப்பட்டது.
அயோத்தி ராமர் கோவிலை வைத்து கோடிக்கணக்கான ரூபாய் சைபர் மோசடி நடந்துள்ளது. ராமரின் பிரசாதம் என்று கூறி பக்தர்களிடம் இருந்து ரூ.3.85 கோடி மோசடி செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 2024 இல் கருவறையில் ராமர் சிலை பிராண-பிரதிஷ்டை விழாவிற்குப் பிறகு பக்தர்களிடையே அதிகரித்த பக்தியை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேறி உள்ளது.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருப்பதாக காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தெய்வீக பிரசாதத்தை அவர்களின் வீட்டு வாசலில் வழங்குவதாக உறுதியளித்து ஒரு போலி வலைத்தளம் மூலம் லட்சக்கணக்கான பக்தர்களை ஏமாற்றியுள்ளார். அந்த நபர் காஜியாபாத்தை சேர்ந்த ஆஷிஷ் சிங் என்று தெரியவந்தது.
ஆஷிஷ் சிங் இப்போது அமெரிக்காவில் வசிக்கிறார். பிராண பிரதிஷ்டை விழாவிற்கு சில வாரங்களுக்கு முன்பு அவர் 'khadiorganic.com' என்ற போலி போர்ட்டலைத் தொடங்கினார். அதில் ராமர் கோவில் பிரசாதம், கோயிலின் புகைப்படங்கள் மற்றும் நினைவு நாணயங்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்தார்.
இருப்பினும், அவர் இந்திய பயனர்களிடமிருந்து ரூ.51 மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடமிருந்து $11 "வசதி கட்டணம்" வசூலித்தார்.
இதில் டிசம்பர் 19, 2023 முதல் ஜனவரி 12, 2024 வரை 6.3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களிடமிருந்து ஆர்டர்கள் பெறப்பட்டன.
வலைத்தளம் உள்ளே செல்ல, டிஜிட்டல் முறையில் பல நுழைவு கட்டணங்கள் மூலம் அவர் பணம் பெற்றார். இவ்வாறு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் ரூ.10.49 கோடி, அதில் ரூ.3.85 கோடி பிரசாத விநியோகத்திற்காக மட்டும் வசூலிக்கப்பட்டது.
இந்த மோசடி வழக்கில், போலீசார் ஐபிசி பிரிவுகள் 420, ஐடி சட்டத்தின் பிரிவு 66D மற்றும் பாஸ்போர்ட் சட்டம், 1967 இன் பிரிவு 12(3) ஆகியவற்றின் கீழ் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- சோழவந்தான் அருகே உள்ள முனியாண்டி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள பன்னிமுட்டி முனியாண்டிகோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. பன்னிமுட்டி முனியாண்டி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சாலைக்கோபுரம் அனைத்திற்கும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து புதிதாக மதுரைவீரன், சப்பானி இரு தெய்வங்களுக்கும் பீடம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த புதன்கிழமை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம் நடந்து மாலை முதல் கால பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளில் இரண்டாம் கால பூஜை மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் கால பூஜை நடந்தது. மகாபூர்ணாகுதி நடந்து, புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். காலை சரியாக 9.30 மணி அளவில் விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்து. மகா தீபாராதனை, கோ பூஜை, மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. வேத ஆகம திருமுறை பாராயணம் நடைபெற்றது. கோவில் பூசாரி சண்முகசுந்தரம் கோடாங்கி பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார். அன்னதானம் வழங்கப்பட்டது.
- வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
- 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்,ஜூன்.29-
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு, நேரில் சென்று சுவாமியை தரிசிக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக, அவர்கள் வீடுகளுக்கே கோவில் பிரசாதம் அனுப்பி வைக்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத் துறை செயல்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புகழ் பெற்ற ராமநாத சுவாமி கோவிலும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கோவிலில் கோடி தீர்த்தம், 100 மி.லி., செம்பில் அடைத்தும், 50 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தபால் செலவு தவிர்த்து, இதற்கு கட்டணம், 145 ரூபாய். பிரசாதம் வேண்டுவோர் www.hrce.tn.gov.inஎன்ற இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.இந்து சமய அறநிலையத் துறை - தபால் துறை இணைந்து ஏற்கனவே, 49 பிரசித்தி பெற்ற கோவில்களின் பிரசாதத்தை, தபால் வழியாக பக்தர்களுக்கு அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 600 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
- அவர்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 600 கிராம மக்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லை. பற்றாக்குறை காரணமாக பலருக்கும் மருத்துவமனைக்கு வெளியே உள்ள மரங்களின் அடியில் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது.
நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் கிடத்தப்பட்டு கயிறுகளில் டிரிப்ஸ் பாட்டில்கள் கட்டப்பட்டிருந்தன. மேலும் சிலருக்கு மரங்களில் பாட்டில்கள் பிணைக்கப்பட்டு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் திடீரென மயக்கமடைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
- கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.







