search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காத்தையா சுவாமிகளின் 26-ம் ஆண்டு குருபூஜை விழா
    X

    குருபூஜை விழா நடந்தது.

    காத்தையா சுவாமிகளின் 26-ம் ஆண்டு குருபூஜை விழா

    • காலை 5 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 6 மணியளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.
    • 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சுந்தர வளநாடு வாளமர் கோட்டை மாதவமணி தவத்திரு காத்தையா சுவாமிகளின் 26 ஆம் ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் வாண்டையார் இருப்பு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தர்மராஜன் வரவேற்புரை ஆற்றினர்.

    மேலும் வாளமர் கோட்டை பகுதியை சேர்ந்த இளங்கோவன் மேடை மட்டும் பந்தல் அலங்காரம் செய்து கொடுத்தார்.

    ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் தவமணி அன்னதானம் வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பிஜேபி மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் கலந்து கொண்டனர்.

    சித்தர் வழி தோன்றல் மாதவமணி தவத்தில் காத்யதையா சுவாமிகள் என்ற தலைப்பில் கரந்தை தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் குருநாதன் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

    முன்னாள் அரசு வழக்கறிஞர் நமச்சிவாயம் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த விழா காலை 5 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கி 6 மணி அளவில் இரண்டாம் கால யாகபூஜை தொடங்கியது.

    மேலும் 10 மணியளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    மேலும் இந்த விழாவில் பக்தர்கள் திரளானோர் பங்கு பெற்று தரிசனம் செய்தனர்.

    இறுதியில் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×