என் மலர்
நீங்கள் தேடியது "தம்பதி"
- சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர்.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.
ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர்.
- சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் வளையக்கார வீதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனர். எந்த விழாவானாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர். அவ்வப்போது இவர்களது மகன், மகள்கள் வந்து பார்த்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அன்னியப்பன் வீட்டில் இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இதிலிருந்து அள்ளியப்பன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் அன்னியப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதனால் வேதனை தாங்காமல் பாப்பம்மாள் கணவரின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் மாலை அன்னியப்பன் உடல் இறுதி சடங்கு செய்ய கருங்கல்பாளையம் காவிரி கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்த பாப்பம்மாள் திடீரென உயிரிழந்தார். இதனை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதிகள் சாவிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும்.
- காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும்.
'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே' என்றொரு பழமொழி உண்டு. இது வெறும் பழமொழி அல்ல. நீரின்றி அமையாது உலகு என்பதுதானே உண்மை. அதேபோல், நம் வாழ்வில், எல்லா சடங்கு சாங்கிய நிகழ்வுகளின் போதும் தண்ணீருக்கும் நமக்குமான பந்தம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். அப்படியொரு உணர்வுபூர்வமான நன்னாள்தான் ஆடிப்பெருக்கு விழா!
ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு கொண்டாடப்படும். கோடைக் காலம் முடிந்து, அந்த வெயிலில் மண்ணெல்லாம் பாளம் பாளமாக வெடித்து, ஆடிக் காற்றில் அந்த மண்ணுக்குள் காற்று நிரம்பியிருக்க, ஆடி மாதத்தில் சாகுபடிக்கு பூமியே தயாராக இருக்கும். அதற்குத் தகுந்தாற்போல, காவிரி முதலான நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் அதன் பின்னர், சீரும் சிறப்புமாக செழிக்கும். தானியம் பெருகும்.
முக்கியமாக, ஆடிப்பெருக்கு நன்னாளில் நீர்நிலைகளில் நீராடி வணங்க வேண்டும். நீறை வணங்க வேண்டும். தாம்பத்ய வாழ்வு சிறக்கும். இந்த நாளில், வீட்டின் மூத்த பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நீர்நிலைகளில் நீராடுவார்கள் வணங்குவார்கள்.
வீட்டிலிருந்தபடியே காவிரித்தாயை வணங்குவோம். காலையில் புதிதாகத் திருமணமான பெண்கள் அணிந்திருக்கும் தாலியை மாற்றிக் கொள்ளும் வைபவமும் இந்தநாளில்தான் நடைபெறும்.
எனவே, அதிகாலையில் நீராடுங்கள். மனதில் காவிரியை நினைத்துக்கொண்டு நீராடினால், அந்த காவிரியானது நம் வீட்டில் தண்ணீரில் கலந்து விடுவதாகவும் ஐதீகம்.
புதிய மஞ்சள் சரடுடன் புதிய தாலியை பெண்கள் அணிந்து கொள்ளுங்கள், கன்னிப் பெண்களுக்கும் வேண்டிக்கொண்டு, புதிய மஞ்சள் அணிவிப்பதும் வழக்கம். இதனால் காவிரியை போல் அந்த பெண்ணின் வாழ்வும் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது ஐதீகம்.
தம்பதிக்குள் பிரிவினை ஏற்பட்டாலும், கருத்து வேறுபாடுகளை களைந்து மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்பதை வலியுறுத்தவே புதுமணத் தம்பதியை அந்த ஒருமாதத்தில் பிரித்து வைப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக திருணமாகி புகுந்த வீட்டுக்குச் சென்ற தனது பெண்ணை, இந்த மாதத்தில் பெண்ணை பெற் தாயார் சீர் செய்து தன் வீட்டுக்கு அதாவது பெண்ணின் பிறந்த வீட்டுக்கு அழைத்து வருவார்.
ஆடி மாதமான இந்த மாதத்தில் தன் தாய் வீட்டில் இருக்கும் பெண், அனைத்து சாஸ்திர - சம்பிரதாயங்களையும் கற்றறிவாள். சடங்கு சாங்கியத்தை எப்படி மேற்கொள்வது, எல்லோரையும் அனுசரித்து குடும்பம் நடத்துவது எப்படி என்பதையெல்லாம் அறிவாள். அதன்படி புகுந்த வீட்டில் பெயரெடுத்து வாழ்வாள். பெருமைபட வாழ்வாள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
- போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
- இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்....
சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை பெறுவதற்காக வினோதமான முறையில் சிந்தித்து வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், குடும்பத் தலைவி ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து காவல்நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். தனது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்முரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கணவர் முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து மனைவி கூறியது தான் ஹைலைட்.
வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது. இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.
இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இணையத்தால் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான் என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று கணவன், மனைவியான இருவர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவில் ராஜகோபுரத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெண் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான். தினமும் தான் சாப்பாடு வாங்கி வந்து இங்கு சாப்பிடுவது எல்லாருக்கும் தான் தெரியும். தற்போது கையில் காசு இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்து சாப்பிட்டோம் என்று சாதாரணமாக பதில் அளித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் அசைவ சாப்பாடு இங்கு வந்து சாப்பிடலாமா என்று எச்சரித்தார். பின்னர் அவர்கள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் நிர்வாக அலுவலர்களால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
- தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
- தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.
தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...
பேச்சுவார்த்தை இல்லாமை
தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.
மன அழுத்தம், அவசரம்
வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
அலுப்பூட்டும் 'வழக்கம்'
திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
கவனிக்கப்படாதது
திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.
எதிர்மறை நடத்தை
எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.
உடல்ரீதியான நெருக்கமின்மை
திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.
விரக்தி, வெறுப்பு
திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது. கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.
தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.
- சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
- சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.
அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- போலீசார் தீவிர விசாரணை
- மன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் குழியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலையா (வயது 85). இவரது மனைவி செல்லம் (77).
இவர்களுக்கு சந்திரசேகர் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அவர்கள் தனித்தனியாக வசிப்பதால், பாலையா தனது மனைவி செல்லத்துடன் தனியாக வசித்து வந்தார்.
வயதான தம்பதியரான அவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் அதற்கான மாத்திரை சாப்பிட்டு வந்தனர். நேற்று காலை வெகுநேரமாகியும் பாலையா வீட்டு கதவு திறக்கப்படவில்லை.
இதனால் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், பாலையா வீட்டுக்குச் சென்று அழைத்துப் பார்த்தார். அப்போது வீட்டு க்குள் இருந்து எந்த சத்த மும் வரவில்லை. எனவே கதவை தட்ட முயன்ற போது, அது திறந்தே கிடந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு பாலையாவும் அவரது மனைவி செல்லமும் ஜன்ன லில் தூக்கில் பிணமாக தொங்குவது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட் டது.
போலீசார் விரைந்து வந்து, பாலையா மற்றும் அவரது மனைவி செல்லம் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பாலையாவின் மகன் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த பாலையா மற்றும் செல்லம் மன வேதனை அடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார்.
- மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில் சென்று குறி கேட்டுள்ளார்.
கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார். அதன்படி, தனது மனைவியை பிரிய மஞ்சுநாத் முடிவு செய்தார். அத்துடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கும்படியும் துமகூரு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதியின் தொடர் விசாரணையில் பூசாரி கூறியதாலே மஞ்சுநாத் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தம்பதியை சேர்த்துவைக்கும் பொருட்டு மஞ்சுநாத், பார்வதம்மாவை அழைத்து தனித்தனியாக பேசினார்.
மூட நம்பிக்கையால் மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது சரியில்லை. மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதையடுத்து, தனது மனைவி பார்வதம்மாவுடன் சேர்ந்து வாழ மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் மஞ்சுநாத்தும், பார்வதம்மாவும் மாலை அணிவித்து கொண்டனர்.
- குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியை சேர்ந்த டாக்டர் தம்பதியினர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளனர்.
இதற்காக தங்களது சொத்து பத்திரத்தை அடமானமாக பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்த கடன் முழுவதையும் செலுத்தி விட்டு பின்பு வேறு ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர். ஆனால் முதலில் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனம் அடமானமாக கொடுத்த அசல் பத்திரத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர்கள் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.1 லட்சம் வழக்கு செலவு தொகை ரூபாய் 7,500 மற்றும் திருப்பி கொடுக்காத அசல் பத்திரத்தின் நகல் பத்திரத்தை உரிய வழி முறைகளை பின்பற்றி ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.
- பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார்.
- தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 35). இவர் நேற்று இரவு நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த சாலையில் ரூ.500 நோட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஜெயபிரகாஷ் அந்த ரூபாய் நோட்டுகளை மனைவியுடன் சேர்ந்த சேகரித்தார். தொடர்ந்து அந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.
இதையடுத்து அந்த பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார். அந்த தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர். மேலும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- பரபரப்பு தகவல்கள்
- 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய பகுதியில் தங்கி ஊசி பாசி மாலை விற்பனை செய்து வந்த வள்ளியூர் பூங்கா நகர் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 24).
இவரது மனைவி ஜோதிகா (20). இவர்களின் 4 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் தூக்கி சென்றார். இது தொடர்பாக வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது குழந்தையை ரெயிலில் கேரளாவுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை கேரளாவில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொல்லம் ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை அங்குள்ள ரெயில்வே போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் இருந்து குழந்தையை கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று கேரளா போலீஸ் பிடியில் இருந்த 2 பேரை கைது செய்தவுடன் அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர்கள் வட்டக்கோட்டை பகுதியை சேர்ந்த நாராயணன் (48) அவரது மனைவி சாந்தி (50) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடமும் கிடுக்குபிடி விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குழந்தையை கடத்திச்சென்று கேர ளாவை சேர்ந்த ஒரு கும்பலி டம் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதற்காக விலைபேசி உள்ளனர். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டு குழந்தையை பிச்சை எடுக்கும் தொழிலில் பயன்படுத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் நாராயணனை நாகர்கோவில் ஜெயிலிலும் சாந்தியை தக்கலை ஜெயிலிலும் அடைத்தனர்.






