என் மலர்

    நீங்கள் தேடியது "couple"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    எரியோடு அருகே கோவிலூர் கணபதிபுரம் குறிகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). பட்டதாரி வாலிபர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வீராப்பூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பின ரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பால சுப்பிரமணியம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த–வர் முத்துக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜய–லட்சுமி (30). இவர்கள் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களது உறவி னர் பாலசுப்பிரமணி–யம் (50).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கண வன், மனைவி இருவரும் சென்று தாங்கள் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேருமா றும், அதில் அதிக வட்டித் தொகை கிடைப்பதாகவும், அதன் மூலம் லாபம் பெற–லாம் என்றும் ஆசை வார்த் தை–களை கூறியுள்ள–னர்.

    இதனை நம்பிய பால சுப்பிரமணியம் ஏலச் சீட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பிலான சீட்டில் சேர்வதாக கூறினார். இதில் மாத தவணை யாக கடந்த 8.9.2021 முதல் 13.10.2022 வரையிலான காலத்தில் ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்தை தம்பதியினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தும் சீட்டுத் தொகையை தராமல் தம்ப தியினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். பல முறை கேட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து பாலசுப்பிர மணியம் ஓசூரில் இருந்து ராஜபாளையத்திற்கு நேரில் வந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டிக்கி டந்ததோடு, இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு நடத்து வதாக கூறி பண மோசடி யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்னர் பால சுப்பிரமணியம் ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ் பெக்டர் மோகன் ஆகியோர் முதல்கட்ட விசாரணை நடத்தி ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட முத்துக்குமார், அவரது மனைவி விஜய லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இதேபோல் வேறு எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது.
    • கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது.

    மாமல்லபுரம்:

    திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம்.

    முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்டமான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள்.

    தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த நேர பயணம், இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து, முக்கியமாக பாதுகாப்பு உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து அதிக அளவு புதுமண ஜோடிகள் வருவதாக இதற்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறது. ஒரு மணிநேரத்திற்கு ரூ.25ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காதலர்கள் மற்றும் புதுவித அனுபவத்தை பெற விரும்புபவர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம் தற்போது சாகச திருமணத்தில் கோவாவை பின்னுக்கு தள்ளி வருகிறது.

    ஏப்ரல் மாதம் ஆசியாவின் மிகப்பெரிய திருமண உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட இருப்பதாகவும் அதில் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச திருமண சேவை அமைப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும், திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

    தற்போது இதுபோன்ற வாழ்வில் மறக்க முடியாத திருமணம், போட்டோ சூட், கேன்டிட் ஷாட், அட்வென்ஜர், விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரபலமாக்க மாமல்லபுரம், கோவளம் பகுதியில் உள்ள தனியார் மரைன் நிறுவனம், நட்சத்திர ஓட்டல்கள் இந்த ஆண்டு கூடுதலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு வைத்து முயற்சி எடுத்து வருவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார்.
    • மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில் சென்று குறி கேட்டுள்ளார்.

    கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார். அதன்படி, தனது மனைவியை பிரிய மஞ்சுநாத் முடிவு செய்தார். அத்துடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கும்படியும் துமகூரு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதியின் தொடர் விசாரணையில் பூசாரி கூறியதாலே மஞ்சுநாத் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தம்பதியை சேர்த்துவைக்கும் பொருட்டு மஞ்சுநாத், பார்வதம்மாவை அழைத்து தனித்தனியாக பேசினார்.

    மூட நம்பிக்கையால் மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது சரியில்லை. மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதையடுத்து, தனது மனைவி பார்வதம்மாவுடன் சேர்ந்து வாழ மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் மஞ்சுநாத்தும், பார்வதம்மாவும் மாலை அணிவித்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை ேபாலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).

    இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் தம்பதியின் குடிசை வீடு இடிந்து விழுந்தது.
    • இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநேரி வி.கே. நகரைச சேர்ந்தவர்கள் வேலு -இசக்கியம்மாள் தம்பதியர். முதியவர்களான இவர்கள், மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் இவர்களது குடிசை வீடு இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினரை நேரில் சந்தித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஆறுதல் கூறினார்.

    தொடர்ந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இடிந்து விழுந்த வீட்டை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக உறுதியளித்தார்.

    அதன்பேரில் தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார்.

    தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    இன்று அங்கு நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். கன மழையில் வீட்டை இழந்த முதிய தம்பதியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. செய்துள்ள இந்த மனிதாபிமான உதவியை நாங்குநேரி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே வாடகை தகராறில் தம்பதியை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (வயது 25). இவரது மனைவி கவுசல்யா. (20). இவர்கள் தீபாவளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை வைத்திருந்தனர். இதற்காக ரூ.15 ஆயிரம் அட்வான்சும் மாதம் ரூ.1500 வாடகையும் செலுத்தி வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையை காலி செய்வதாக அவர்கள் கூறி தங்களது அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே தீபாவளி, அவரது மனைவி செல்வி மற்றும் முருகன், குமரேசன், விகாஸ் ஆகியோர் சேர்ந்து நவீன் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் போடி மல்லிகாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மகள்கள் ஜெயசூர்யா (21), ஸ்ருதி (15) ஆகியோர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது பங்கஜத்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் பங்கஜம், கணவர் ராஜா, மகன் மலைச்சாமி ஆகியோர் சேர்ந்து கோபால் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முத்துப்பேட்டை அருகே கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo