search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple"

    • மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார்.
    • திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக கேரளா விளங்குகிறது என்றே கூறலாம். இங்கு அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டி தருவதில் மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    அதுவும் ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தையும் விரும்புவார்கள். அந்த வகையில் ஹவுஸ் போட் சுற்றுலா கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள ஏரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஹவுஸ் போட்களில் சில நேரங்களில் கேளிக்கை விருந்துகள் நடத்துவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஆலப்புழை கைநகரி ஏரியில் நடந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் புகைப்படங்களுடன் அது தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதாவது டெல்லி போலீசில் தடயவியல் நிபுணராக பணி செய்து வருபவர் ஹரிதா (வயது 25). இவர் ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் பங்கேற்று வருகிறார். இவருக்கும், சாலக்குடியை சேர்ந்த ஹரிநாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றார்.

    பின்னர் பிரத்யேகமாக திருமணம் நடத்த மண்டபம் மற்றும் கலைநிகழ்ச்சி, விருந்துகளை தடபுடலாக நடத்த ஒரு சிறிய மண்டபம் போன்று ஏரியில் செட் அமைக்கப்பட்டிருந்தது. திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவில் நடந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

    • நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்துள்ளனர்.
    • அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் நிர்வாணமாக நடந்துசென்ற தம்பதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாக்பூரின் லக்ஷ்மிநகர் சதுக்கதில் உள்ள சாலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஆடைகளேதுமின்றி நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதம் செய்தபடி நடந்து வந்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவ்வழியில் மோட்டார் வாகனத்தில் சென்ற இருவர், அவர்களைப் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். சமீப காலமாகவே நாக்பூரில், தரம்பேட் [Dharampeth], சாதர்[Sadar], பஜாஜ் நகர் [Bajaj Nagar] என பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது.

    தற்போது சனிக்கிழமை இரவு நடந்த சம்பவத்தை அடுத்து அவர்களை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடிப்பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவர்களின் குடும்பத்தாரிடம் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.

    • இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.
    • மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    மும்பையில் ஒரு பெண் தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி பெண்ணை மிரட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ஜோசுவா பிரான்சிஸ் இடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

    பெண்ணின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இந்த தம்பதியினர் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அவ்வப்போது சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அதனால் தனது மனைவியை அவமானப்படுத்த அவர்கள் அந்தரங்கமாக இருக்கும் தருணங்களை அவர் புகைப்படம், வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ, புகைப்படங்களை அவர் தனது நண்பர் ஜோசுவா பிரான்சிஸ் இடம் கொடுத்துள்ளார்.

    பின்னர் பிரான்சிஸ் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து அவரது அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒரு ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியதாக தெரிவித்து, ஆபாச தளத்தின் இணைய URL ஐ பகிர்ந்துள்ளார்.

    இந்த அந்தரங்க வீடியாக்களை நீக்க வேண்டும் என்றால் 50,000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று மிரட்டி அந்த பெண்ணிடம் இருந்து பிரான்சிஸ் பணம் வாங்கியுள்ளார்.

    ஆனால் இந்த அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சில நாட்களுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் பரவியது.

    அதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்ஷன் மையத்தில் கடந்த 12ம் தேதி மிக பிரமாண்டமான வகையில் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்த திருமணத்தில் உலக தலைவர்கள், உலக அளவிலான பிரபலங்கள், இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் மணமக்களுக்கு ஆசி வழங்கும் விழாவான 'சுப ஆசீர்வாத்' நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்பட திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். ஏராளமானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

    இந்நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். அப்போது, அம்பானிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கி அசத்தி இருக்கிறார்.

    இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது.
    • மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

    பீகாரில் போலீஸ் கஸ்டடியில் இருந்த கணவன் மனைவி மர்மமான முறையில் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காவல் நிலையத்தை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்டுத்தியுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள தார்பாரி கிராமத்தில் தனது மனைவி இறப்பதற்கு 2 நாட்கள் முன்பு அவரது 14 வயதுடைய தங்கையை கணவனர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

    மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கணவனை கைது செய்து பெண்ணையும் கணவனையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (மே 17) மதியம் கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக கிடைத்துள்ள சிசிடிவி பதிவில் ஒரு நபர் தூக்கில் தொங்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையே அவர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்துள்ளதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    காவலர்களை கல்லால் தாக்கிய பொதுமக்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல்களையும் அடித்து நொறுக்கி காவல் நிலையத்தை மொத்தமாக தீவைத்து எரித்தனர். இந்த சம்பவத்தில் 5 போலீசார் படுகாயமடைந்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. 

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்
    • திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார்

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும் போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்தார். அண்மையில் மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார்.

    நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது.

    அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி மீண்டும் இனியானது நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அந்த படத்தை சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் அல்லது பெங்களூர் டேஸ் என்ற மலையாள படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது.

    விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
    • சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைக்க ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

    பிரபல நடிகை ஜோதிகா- நடிகர் சூர்யா இணைந்து 1999 -ம் ஆண்டு இயக்குனர் வசந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் நடித்தனர்.

    சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில் 2006 -ல் திருமணம் செய்தனர், இவர்களுக்கு தியா என்ற மகள், தேவ் என்ற மகன் உள்ளனர்.

    இந்நிலையில் தற்போது ஜோதிகா ஷைத்தான் படத்தில் நடித்தார்.தற்போது மேலும் சில இந்தி படங்களில் ஜோதிகா நடிக்க உள்ளார். நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து வருகிறார்.




     

    இந்நிலையில் ஜோதிகா - சூர்யா இருவரும் ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்கும் வகையில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.

    ஜோதிகா, சூர்யா இருவரும்  சிறந்த நடிகர்கள் மட்டும் அல்ல. உடற்தகுதி மீது வெறி கொண்டவர்கள். தற்போது சினிமாவில் இருவரும் நடித்து வருவதால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஜிம் ஒர்க்கவுட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் வியந்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக கணவர் தெரிவித்துள்ளார்.
    • வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்று தான். இதற்காக கணவன், மனைவி கோபம் கொண்டு செய்யும் சம்பவங்கள் பல முறை செய்திகளாகி இருக்கின்றன. அந்த வகையில், ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    சண்டயை தொடர்ந்து பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் காவல் நிலையத்தில் புகாராக எழுந்து, வழக்கு பதியும் வரைசென்றுள்ளது. கணவருடன் சண்டையிட்ட மனைவி, அதன்பிறகு தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் "கணவரை கொலை செய்பவருக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஸ்டேட்டஸ் தொடர்பாக கணவன் ஆக்ராவின் பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்ட காவல் அதிகாரி ஷியாம் சிங் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளார். புகாரில் கடந்த 2023 டிசம்பரில் தனது மாமியார் தன்னை தொடர்பு கொண்டு கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தம்பதிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாத வாக்கில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்ததில் இருந்தே, கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 2022 டிசம்பர் மாதம் மனைவி தனது கணவனை பிறந்து சென்று தாய் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

    கணவன், மனைவி இடையே இந்தளவுக்கு சண்டை ஏற்பட காரணம் மனைவி தனது வீட்டின் அருகே வசிக்கும் வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது என்றும் கூறப்படுகிறது. மேலும், மனைவியின் காதலன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கணவன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    • பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
    • கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதி நாராயணன் (வயது 68)-ராஜேஸ்வரி(67). இவர்கள் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர்.

    இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் இல்லாததால் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து வந்தனர். பாசமாகவும், அன்பு செலுத்தியும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் நாராயணன் வயது மூப்பு காரணமாக நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாக இருந்தார். அவரை ராஜேஸ்வரி கவனித்து வந்தார். நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாராயணன் பரிதாபமாக இறந்தார். இந்த துக்கம் தாளாமல் கதறி அழுத ராஜேஸ்வரியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குமாரபாளையத்தில் கண் கலங்க வைத்துள்ளது. நீயின்றி நானில்லை என சாவிலும் இணைபிரியாத தம்பதியை நினைத்து அப்பகுதி மக்கள் கண்கலங்கினர்.

    வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வந்த நிலையில் கணவனுடன், மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும், இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கணவர் இறந்த நிலையில் மனைவியும் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
    • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    குனியமுத்தூர்:

    தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

    செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

    நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

    நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

    மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

    • சினேகா கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார்.
    • சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.கூலித் ெதாழிலாளி. இவரது மகள் சினேகா. இவர் கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடி எங்கும் கிடை காததால் காடாம்புலியூர் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடு த்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    4ஆண்டு க்கு முன்பு காணாமல் போன இளம் பெண் சினேகாவை, இன்ஸ்பெக்டர்ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் பல்வேறு கோணங்களில் நடத்தி தேடி வந்தனர். இவர்களது தீவிர முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகுபழனி அருகே ஒரு கிராமத்தில்இளம் பெண் சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். இவர்களை காடாம்புலியூர்போலீஸ் நிலையத்திற்குஅழைத்துவரஏற்பாடுசெய்துள்ளனர். 

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×