என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "couple"

    • போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார்.
    • இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    பொதுவாக தகராறு, மோசடி, வரதட்சணை கொடுமை போன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்....

    சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை பெறுவதற்காக வினோதமான முறையில் சிந்தித்து வீடியோவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், குடும்பத் தலைவி ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுப்பது, அதனை எடிட் செய்து பதிவிடுவது என சமூக வலைத்தளத்தில் எந்நேரமும் பிசியாக இருந்துள்ளார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தினந்தோறும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.



    இதையடுத்து காவல்நிலையத்திற்கு இவர்களின் தகராறு சென்றுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது கணவர் தனது மனக்குமுறல்களை கொட்டியுள்ளார். தனது மனைவி சமூக வலைத்தளத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். இதனால் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவதில்லை. அவள் எப்போதும் வீடியோ எடுப்பது, எடிட் செய்வது என மும்முரமாக இருப்பதால் எங்களுக்கு உணவு கிடைப்பதில் தாமதமாகிறது. எந்நேரமும் மொபைல் போனிலேயே இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கணவர் முன்வைத்தார்.

    இதைத் தொடர்ந்து மனைவி கூறியது தான் ஹைலைட்.

    வீடியோ எடுத்து எடிட் செய்து பதிவிடுவது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் இரண்டையும் நிர்வகிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ரீல்கள் வெறும் வேடிக்கைக்காக மட்டும் இல்லை. அவை இப்போது என் அடையாளத்தின் ஒரு பகுதியாகும். வீட்டு வேலை காரணமாக எனது வீடியோக்களை பதிவிட தவறவிடும்போது, என்னை பின்தொடர்பவர்களை இழந்துவிடுகிறேன். மேலும் எனது தொடர்பு குறைகிறது. இது ஒரு சிறு வணிகத்தை நடத்துவது போன்றது, யாரும் என்னுடைய அழுத்தத்தைப் புரிந்துகொள்வதில்லை என்று கூறினார்.

    இதையடுத்து இருதரப்பு விளக்கத்தையும் கேட்ட போலீசார் இருவருக்கும் அறிவுரைக் கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி இணையத்தால் குடும்ப உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.
    • தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது.

    தம்பதியர் பலரிடம், திருமண தொடக்கத்தில் இருக்கும் நெருக்கமும், ஈர்ப்பும் நாளடைவில் குறைந்துவிடுகின்றன. 'ரொமான்ஸ்' என்பதே இல்லாமல் போய்விடுகிறது. இந்நிலைக்கு காரணம் என்ன? பின்வரும் விஷயங்கள்தான்...

    பேச்சுவார்த்தை இல்லாமை

    தம்பதியர் இடையே போதிய பேச்சுவார்த்தை, தொடர்பு இல்லாமை, நெருக்கத்தை குறைக்கிறது. தம்பதிகள் இருவரும் தங்களுக்குள் வெளிப்படையாகப் பேச வேண்டும். அப்போதுதான் திருமண உறவு பலப்படும். தகவல்தொடர்பு முறிவு, தவறான புரிதலுக்கும், ஏமாற்றத்துக்கும் வித்திடும்.

    மன அழுத்தம், அவசரம்

    வருடங்கள் செல்லச் செல்ல, திருமண உறவில் ரொமான்ஸ் குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், துணையில் ஒருவர் அல்லது இருவரின் வேலைப்பளு அல்லது மனஅழுத்தமாக இருக்கலாம். மன அழுத்தமும், வேலைப்பளுவும் மண உறவை பாதிக்கும் காரணிகளாக மாறிவருகின்றன. தம்பதிகள் அதிக வேலைப்பளுவால் பாதிக்கப்பட்டு பொறுப்புகளை சுமக்கும்போது, பரஸ்பர காதல் காலாவதி ஆகிறது.

    அலுப்பூட்டும் 'வழக்கம்'

    திருமணம் முடிந்து காலம் செல்லச் செல்ல, திருமணத்தில் புதிதாக எதுவும் நடக்காது. அனைத்து நாட்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான செயல்களை செய்வது அவர்களுக்கு சலிப்பையும், ஆர்வமின்மையையும் ஏற்படுத்தும். திருமணத்திலிருந்து காதல் மறைந்து போவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

    கவனிக்கப்படாதது

    திருமண உறவில் ஒருவர் துணையிடமிருந்து புறக்கணிப்பை எதிர்கொள்வதும், அவரது முயற்சிகள் கவனிக்கப்படாமல் போவதும் அவருக்கு விரக்தியையும் சோர்வையும் ஏற்படுத்தும். ரொமான்ஸ் காணாமல் போவதற்கு இதுவும் பிரதானம். வாழ்க்கைத்துணை மேற்கொள்ளும் முயற்சிகளை அங்கீகரிப்பதும், மனந்திறந்து பாராட்டுவதும் மிகவும் முக்கியம்.

    எதிர்மறை நடத்தை

    எதிர்மறை நடத்தை ஒரு திருமண உறவை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிர்மறையான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் காதல் காணாமல் போகும். ஒருவருக்கொருவர் நேர்மறையான அணுகுமுறையும் ஆதரவும் இருந்தால் மட்டுமே ஒரு திருமண வாழ்க்கையில் அன்பும், காதலும் நிறைந்திருக்கும்.

    உடல்ரீதியான நெருக்கமின்மை

    திருமணத்தில் தாம்பத்திய உறவு மட்டுமல்ல, சின்னச் சின்ன தொடுதலும், உடல் நெருக்கமும் முக்கியம். காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுபோன்ற அன்பின் வெளிப்பாடுகள் அவசியம். துணைவர்கள் ஒருவரையொருவர் தொடுவதையும், கட்டிப்பிடிப்பதையும், முத்தமிடுவதையும் நிறுத்தினால், அந்த உறவில் இருந்து அன்னியோன்னியம் ஆவியாகிப்போகும்.

    விரக்தி, வெறுப்பு

    திருமண உறவிலேயே மிகவும் மோசமான நிலை, தம்பதிகள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விரக்தியாகவும், வெறுப்பாகவும் உணருவது. கடந்த கால அனுபவங்களில் உண்டான வெறுப்புகளையும் கோபத்தையும் மனதில் சுமப்பது, ஒரு திருமண உறவை நஞ்சாக்கி விடும்.

    தம்பதியர் தமக்குள் எழும் பிரச்சனைகளை தாமே தீர்த்துக்கொள்ள முயல வேண்டுமே தவிர, வெளியில் உள்ள வேறு யாராலும் அது முடியாது. காரணம், ஒவ்வொரு தம்பதியரின் தேவைகள், விருப்பங்கள், பிரச்சனைகள் வேறுபட்டவை. மனப்பூர்வமான செயல்பாட்டின் மூலம், தம்பதிகள் தங்கள் வாழ்வை அன்புப் பூஞ்சோலை ஆக்கிக்கொள்ள முடியும்.

    • சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார்.
    • சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    கர்நாடகாவில் சைபர் மோசடியில் ரூ.50 கோடியை இழந்த வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பெலகாவி மாவட்டத்தில் டியோக்ஜெரோன் சாந்தன் நாசரேத் (82) மற்றும் அவரது மனைவி ஃபிளேவியானா (79) ஆகியோர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்நிலையில், அவர்களது வீட்டில் இருவரும் உயிரிழந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது டியோக்ஜெரோன் தனது கைப்பட எழுதிய தற்கொலை கடிதத்தை போலீசாரை கண்டுபிடித்தனர்.

    அக்கடிதத்தில் "இப்போது எனக்கு 82 வயது, என் மனைவிக்கு 79 வயது. எங்களை பார்த்துகொள்ள்ள யாரும் தேவையில்லை. யாருடைய தயவிலும் நாங்கள் வாழ விரும்பவில்லை, அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு தொடர்பாக பேசிய போலீசார், "சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகிய இருவர் டியோக்ஜெரோனை தொடர்பு அவரது சிம் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி அவரது சொத்து மற்றும் நிதி விவரங்களை கோரியுள்ளனர். இந்த சைபர் மோசடியில் சிக்கிய டியோக்ஜெரான் ரூ.50 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளார். ஆனாலும் அவர்கள் கூடுதலாக பணம் கேட்டு அவரை தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.

    தற்கொலை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுமித் பிர்ரா மற்றும் அனில் யாதவ் ஆகியோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் மற்றும் சைபர் மோசடி பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • ரூ. 18 லட்சம் மோசடி; தம்பதி மீது புகார் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை சுதந்திரா நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவர் ஒத்தக்கடை ேபாலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சாம்சன்பால் தன்னிடம் உள்ள காரை கொடுப்பதாக கூறி ரூ. 18 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்து விட்டனர். இதற்கு உடந்தையாக அவரது மனைவி சக்திபிரியா, உறவினர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார்.
    • மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா அத்தனகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மனைவி பார்வதம்மா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனால் மஞ்சுநாத் அப்பகுதி கோவிலில் சென்று குறி கேட்டுள்ளார்.

    கோவிலில் பூசாரியாக இருப்பவர் மஞ்சுநாத்திடம் மனைவியை பிரிந்து வாழும்படி கூறியுள்ளார். அதன்படி, தனது மனைவியை பிரிய மஞ்சுநாத் முடிவு செய்தார். அத்துடன் மனைவியுடன் சேர்ந்து வாழ பிடிக்கவில்லை என்றும், விவாகரத்து வழங்கும்படியும் துமகூரு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் மஞ்சுநாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதியின் தொடர் விசாரணையில் பூசாரி கூறியதாலே மஞ்சுநாத் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து நீதிபதி தம்பதியை சேர்த்துவைக்கும் பொருட்டு மஞ்சுநாத், பார்வதம்மாவை அழைத்து தனித்தனியாக பேசினார்.

    மூட நம்பிக்கையால் மனைவியை பிரிந்து வாழ முடிவு செய்திருப்பது சரியில்லை. மூட நம்பிக்கையை நம்ப வேண்டாம், மனைவியுடன் சேர்ந்து வாழ்வதுதான் சிறந்தது என்று மஞ்சுநாத்திற்கு நீதிபதி அறிவுரை வழங்கினார். இதையடுத்து, தனது மனைவி பார்வதம்மாவுடன் சேர்ந்து வாழ மஞ்சுநாத் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து கோர்ட்டிலேயே நீதிபதி முன்னிலையில் மஞ்சுநாத்தும், பார்வதம்மாவும் மாலை அணிவித்து கொண்டனர்.

    • புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது.
    • கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது.

    மாமல்லபுரம்:

    திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்ச்சி ஆகும். இதனை அவரவர் வசதிக்கேற்ப செலவுகள் செய்து நடத்துவது வழக்கம்.

    முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நட்சத்திர விடுதி, கடற்கரை ரிசார்ட், அரங்கங்களில் பிரமாண்டமான முறையில் திருமண விழாக்கள் நடத்தி வருகிறார்கள்.

    தற்போது புதுமண ஜோடிகள் கடலுக்கு அடியில் தண்ணீரில் திருமணம் செய்வது புதிய டிரெண்டாகி வருகிறது. ஸ்கூபா டைவிங், பாராசூட் திருமணம் என வாழ்வில் மறக்க முடியாதபடி பிரம்மாண்டமாக தங்களது திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

    இந்த வகை திருமணங்கள் பலருக்கு ஆச்சரியமாகவும், பிரமிக்க வைப்பவையாகவும் உள்ளது. இதற்கு முன்பு கடலுக்கு அடியில் திருமணம் செய்வது கோவாவில் அதிகளவில் நடந்து வந்தது. தற்போது இதுபோன்ற திருமணங்கள் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரையில் அதிகரித்து வருகிறது.

    இதற்கு முக்கிய காரணம் விமான நிலையத்தில் இருந்து குறைந்த நேர பயணம், இடையூறு இல்லாத வாகன போக்குவரத்து, முக்கியமாக பாதுகாப்பு உள்ளிட்டவை காரணங்களாக உள்ளன. கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து அதிக அளவு புதுமண ஜோடிகள் வருவதாக இதற்கான ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறது. ஒரு மணிநேரத்திற்கு ரூ.25ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு கடலுக்கு அடியில் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதற்கான முன்பதிவு செய்யும் புதுமண ஜோடிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. காதலர்கள் மற்றும் புதுவித அனுபவத்தை பெற விரும்புபவர்களும் இதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையில் தாஜ்மகாலை பின்னுக்கு தள்ளிய மாமல்லபுரம் தற்போது சாகச திருமணத்தில் கோவாவை பின்னுக்கு தள்ளி வருகிறது.

    ஏப்ரல் மாதம் ஆசியாவின் மிகப்பெரிய திருமண உச்சி மாநாடு சென்னையில் நடத்தப்பட இருப்பதாகவும் அதில் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச திருமண சேவை அமைப்பினர் கலந்துகொள்ள இருப்பதாகவும், திருமண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.

    தற்போது இதுபோன்ற வாழ்வில் மறக்க முடியாத திருமணம், போட்டோ சூட், கேன்டிட் ஷாட், அட்வென்ஜர், விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி உள்ளிட்ட புதிய திட்டங்களை பிரபலமாக்க மாமல்லபுரம், கோவளம் பகுதியில் உள்ள தனியார் மரைன் நிறுவனம், நட்சத்திர ஓட்டல்கள் இந்த ஆண்டு கூடுதலாக திருமண நிகழ்ச்சிகள் நடத்த இலக்கு வைத்து முயற்சி எடுத்து வருவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    உடுமலை:

    உடுமலை கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வருகை தந்த உடுமலை தாலுகா சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வி மற்றும் அவரது கணவர் ஆறுச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பத்திரப்பதிவு சம்பந்தமாக சார்பதிவாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் அலுவலகப்பணிக்கு இடையூறு செய்ததுடன் கூச்சல் போட்டு ரகளை செய்தனர்.அதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் உடுமலை போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் பேரில் அங்கு வருகை தந்த போலீசார் அந்த தம்பதியிடம் சமாதானம் பேசினார்கள். அதற்கு அவர்கள் உடன்பட மறுத்து தொடர்ந்து சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டு வைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இது குறித்து சார்பதிவாளர் கணேசன் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார்.அதன் பேரில் மனுஏற்பு ரசீது பதிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த தம்பதிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    அலுவலகத்தில் நேற்று சார் பதிவாளர் கணேசன் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தார்.இந்த சம்பவத்தால் பத்திர பதிவு பாதிக்கப்பட்டதுடன் கச்சேரி வீதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

    • டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பால சுப்பிரமணியம் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மங்காபுரம் நேதாஜி தெருவைச் சேர்ந்த–வர் முத்துக்குமார் (வயது 35). இவரது மனைவி விஜய–லட்சுமி (30). இவர்கள் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களது உறவி னர் பாலசுப்பிரமணி–யம் (50).

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் டிரா வல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கண வன், மனைவி இருவரும் சென்று தாங்கள் நடத்தி வரும் ஏலச்சீட்டில் சேருமா றும், அதில் அதிக வட்டித் தொகை கிடைப்பதாகவும், அதன் மூலம் லாபம் பெற–லாம் என்றும் ஆசை வார்த் தை–களை கூறியுள்ள–னர்.

    இதனை நம்பிய பால சுப்பிரமணியம் ஏலச் சீட்டில் தன்னையும் இணைத்துக் கொண்டார். அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பிலான சீட்டில் சேர்வதாக கூறினார். இதில் மாத தவணை யாக கடந்த 8.9.2021 முதல் 13.10.2022 வரையிலான காலத்தில் ரூ.11 லட்சத்து 73 ஆயிரத்தை தம்பதியினரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வந்துள்ளார்.

    ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்தும் சீட்டுத் தொகையை தராமல் தம்ப தியினர் இழுத்தடிப்பு செய்து வந்தனர். பல முறை கேட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பணத்தை திரும்ப கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதையடுத்து பாலசுப்பிர மணியம் ஓசூரில் இருந்து ராஜபாளையத்திற்கு நேரில் வந்து முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டிக்கி டந்ததோடு, இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பலரிடம் ஏலச்சீட்டு நடத்து வதாக கூறி பண மோசடி யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. பின்னர் பால சுப்பிரமணியம் ராஜ பாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ் பெக்டர் மோகன் ஆகியோர் முதல்கட்ட விசாரணை நடத்தி ஏலச் சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட முத்துக்குமார், அவரது மனைவி விஜய லட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய் துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இதேபோல் வேறு எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளனர் என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி போலீசில் தஞ்சமடைந்தனர்.
    • 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    வடமதுரை:

    எரியோடு அருகே கோவிலூர் கணபதிபுரம் குறிகோடாங்கி பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 25). பட்டதாரி வாலிபர். இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (வயது 20) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி வீராப்பூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை போலீஸ் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு தரப்பின ரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி செல்லலாம் என அறிவுறை கூறி அனுப்பி வைத்தனர்.

    • கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் . இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
    • திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த கல்வராயன்மலை கருமந்துறை மணியார்குண்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்புராஜ். இவருடைய மனைவி பழனியம்மாள் (வயது 20). இவரது வீட்டில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இேதபோல் கருமந்துறை பகுதியை சேர்ந்த சடைச்சி (50) என்பவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அங்கி ருந்து 5 பவுன் தங்க நகை மற்றும் ஒரு செல்போனையும் திருடி சென்றனர்.

    இது குறித்து புகாரின் பேரில் கருமந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து தங்க நகை திருடும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சைபர்கிரைம் ேபாலீசார் உதவி நாடப்பட்டது.

    சடைச்சி என்பவரது வீட்டில் திருடப்பட்ட செல்போன் ஐ.எம்.ஐ. எண்ணை வைத்து ஆய்வு செய்ததில் அந்த செல்போன் கல்வராயன் மலை கிணத்தூர் பகுதியை சேர்ந்த தனபால் (28) மற்றும் அவரது மனைவி சசிகலா(20) ஆகிய இருவரிடமும் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரை யும் பிடித்து விசாரித்ததில் இருவரும் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து திருடியது தெரியவந்தது.

    இத்தம்பதி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த கருமந்துறை போலீசார் தனபாலை கைது செய்து 9 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீடு புகுந்து நகை திருடிய தம்பதியை அவர்கள் திருடிய செல்போனே காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சினேகா கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார்.
    • சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்.கூலித் ெதாழிலாளி. இவரது மகள் சினேகா. இவர் கடந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி காணாமல் போனார். பல இடங்களில் தேடி எங்கும் கிடை காததால் காடாம்புலியூர் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடு த்தனர்.காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    4ஆண்டு க்கு முன்பு காணாமல் போன இளம் பெண் சினேகாவை, இன்ஸ்பெக்டர்ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் குமார் ஆகியோர் பல்வேறு கோணங்களில் நடத்தி தேடி வந்தனர். இவர்களது தீவிர முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகுபழனி அருகே ஒரு கிராமத்தில்இளம் பெண் சினேகா,அசோக் என்ற வாலிபரைதிருமணம் செய்து தம்பதி சமேதராக குழந்தையுடன் இருப்பதை கண்டு பிடித்தனர். இவர்களை காடாம்புலியூர்போலீஸ் நிலையத்திற்குஅழைத்துவரஏற்பாடுசெய்துள்ளனர். 

    • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
    • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    குனியமுத்தூர்:

    தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

    செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

    நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

    நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

    மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

    ×