search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyappa devotee"

    • விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து சபரிமலைக்கு சென்ற 11 பக்தர்கள் வந்த கார் குமுளி அருகே பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் சென்ற ஐயப்ப பக்தர்கள் 8 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    சபரிமலை வந்த ஐயப்ப பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்த கேரள முதல் -மந்திரி பினராயி விஜயன் மீட்புபணிகளை முடுக்கிவிடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலைக்கு வந்த தமிழக பக்தர்கள் விபத்தில் பலியான தகவல் அறிந்து மனம் வருந்தினேன். உறவினர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுபோல கேரள தேவசம் போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனும் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    • ராஜபாளையம் அருகே அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானார்.
    • சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகணேசன் (29). சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த இவர் சம்பவத்தன்று புத்தூரில் நடந்த பூஜையில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். குடல்வேலி விளக்கு அருகே வந்த போது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. படுகாயமடைந்த சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் போலீசார் நடத்திய தடியடியில் கொல்லப்பட்டதாக மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின. கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு வந்த பெண்களை தடுத்து நிறுத்தினர். சில பகுதிகளில் வன்முறையும் வெடித்தது. இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

    இந்நிலையில், சபரிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இன்று ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நடத்திய தடியடியில் ஐயப்ப பக்தர் சிவதாசன் கொல்லப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பினராயி விஜயன் உள்துறை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் கேரள பாஜக தலைவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

    ‘பந்தளத்தில் இருந்து ஐயப்ப பக்தர் சிவதாசன் சைக்கிளில் கோவிலுக்கு வந்தபோது பிலாப்பள்ளி வனப்பகுதியில் போலீசார் நடத்திய தடியடியில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் அக்டோபர் 17-ம் தேதி காணாமல் போனதாக உறவினர்கள் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, இந்த கொடூர செயலுக்கு காரணமான போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். அக்டோபர் 17ம் தேதி நடத்தப்பட்ட தடியடி குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும் ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். #SabarimalaProtests #PoliceLathicharge #AyyappaDevoteeBody #KeralaBJPChief
    ×