search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்ப பக்தர் விபத்தில் பலி
    X

    அய்யப்ப பக்தர் விபத்தில் பலி

    • ராஜபாளையம் அருகே அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானார்.
    • சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகணேசன் (29). சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த இவர் சம்பவத்தன்று புத்தூரில் நடந்த பூஜையில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். குடல்வேலி விளக்கு அருகே வந்த போது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. படுகாயமடைந்த சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×