என் மலர்

    நீங்கள் தேடியது "Killed in an accident"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
    • விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த ஆலங்கட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (வயது 70). இவர் 13-வது வார்டு அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள குடிநீர் குழாயில் குடிநீர் பிடிக்க இன்று காலை தனது மொபட்டில் சென்றார்.

    அப்போது முத்தூர் ரோட்டில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சிவகிரியில் பழக்கடை நடத்தி வரும் ஆனந்த் என்பவர் வந்து கொண்டி ருந்தார். ஆலங்காட்டு வலசு பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக செங்கோட்டையன் வந்து கொண்டிருந்த மொபட்டும், ஆனந்த் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டார். ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மருத்துவ குழுவினர் முகத்தில் படுகாயம் அடைந்த செங்கோட்டையன் மற்றும் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் வரும் வழியி லேயே செங்கோட்டையன் இறந்து விட்டதாக கூறினர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையம் அருகே அய்யப்ப பக்தர் விபத்தில் பலியானார்.
    • சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவகணேசன் (29). சபரிமலைக்கு மாலை அணிந்திருந்த இவர் சம்பவத்தன்று புத்தூரில் நடந்த பூஜையில் பங்கேற்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். குடல்வேலி விளக்கு அருகே வந்த போது சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சென்றது. படுகாயமடைந்த சிவகணேசன் பரிதாபமாக இறந்தார். தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 20).ஆற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    வேலூர் கொசப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30-ந் தேதி கே.வி. குப்பம் அருகே உள்ள காவனூரில் வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் அன்று இரவு வேலூர் அடுத்த மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் தமிழரசன் மீது மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்‌. அவர்கள் விரைந்து வந்து தமிழரசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார்.
    • இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிஷோர் (13) என்ற மகன் உள்ளார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி இயங்கும் இடத்திற்கு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க சென்று வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீபாவளியை தனது குடும்பத்துடன் கழிக்க சொந்த ஊரான சோழம் பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    வாசுதேவனூர் அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியர் சுரேசை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுரு வேலூரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் பைக்கில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அன்பூண்டி வங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து மனைவி குழந்தைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ராஜகுருவிற்கு பின் புறம் தலையில் மட்டும் அடிபட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழக்காமல் தப்பித்து இருக்கலாம்.

    அவர் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதினாரா அல்லது வேறு ஏதாவது வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×