என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் அருகே வங்கி ஊழியர் விபத்தில் பலி
    X

    வேலூர் அருகே வங்கி ஊழியர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 20).ஆற்காட்டில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

    வேலூர் கொசப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தினமும் வேலைக்கு சென்று வந்தார். வாலிபால் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30-ந் தேதி கே.வி. குப்பம் அருகே உள்ள காவனூரில் வாலிபால் விளையாடுவதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் அன்று இரவு வேலூர் அடுத்த மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் தமிழரசன் மீது மோதியது. இதில் அவர் படுகாயடைந்தார்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்‌. அவர்கள் விரைந்து வந்து தமிழரசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×