என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் கொரியர் நிறுவன ஊழியர் விபத்தில் பலி
    X

    வேலூர் கொரியர் நிறுவன ஊழியர் விபத்தில் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளிகொண்டாவை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா கோட்டை தெருவை சேர்ந்தவர் ராஜகுரு (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜகுரு வேலூரில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தினமும் அவர் பைக்கில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். நேற்று இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அன்பூண்டி வங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை பார்த்து மனைவி குழந்தைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    ராஜகுருவிற்கு பின் புறம் தலையில் மட்டும் அடிபட்டுள்ளது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரிழக்காமல் தப்பித்து இருக்கலாம்.

    அவர் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதினாரா அல்லது வேறு ஏதாவது வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×