என் மலர்tooltip icon

    இந்தியா

    நிதிஷ் குமார் பாங் சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார் - ராப்ரி தேவி குற்றச்சாட்டு
    X

    நிதிஷ் குமார் 'பாங்' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார் - ராப்ரி தேவி குற்றச்சாட்டு

    • நிதிஷ் குமார் பெண்களை அவமரியாதை செய்கிறார்.
    • ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய நிதிஷ்குமார், "லாலு பிரசாத் ஊழல் புகாரில் சிக்கியபோது அவர் தனது மனைவியை முதல்வர் பதவியில் அமர்த்தினார்" என்று தெரிவித்தார்

    இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்களை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி உட்பட ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராப்ரி தேவி, "நிதிஷ் குமார் 'பாங்கு' சாப்பிட்டுவிட்டு சட்டமன்றத்திற்கு வருகிறார். அவர் பெண்களை அவமரியாதை செய்கிறார். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதையே அவரும் பேசுகிறார். அவரது சொந்தக் கட்சி உறுப்பினர்களும் பாஜக தலைவர்களில் சிலரும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்லச் சொல்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×