என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்- தேஜஸ்வி யாதவ்
    X

    பீகார் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள்- தேஜஸ்வி யாதவ்

    • பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது.
    • கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    இதற்கிடையே கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது. இது மக்கள் அரசாங்க மாற்றத்திற்கு வாக்களித்திருப்பதைக் குறிக்கிறது.

    பீகாரில் பா.ஜ.க கூட்டணியின் வெற்றியைக் கணித்த கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×