என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்கட்சி தலைவர்"
- சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
- ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.
இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 20 ஆம் தேதி புதிய அமைச்சரவையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.
எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
- கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் இந்த சூழல் ஏற்பட்டது
288 சட்டமன்றங்கள் கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்றைய தினம் [நவம்பர் 23] வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் சூழலில் ஆளும் மாகயுதி [பாஜக - ஷிண்டே சேனா - அஜித் பவார் என்சிபி] 230 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
கூட்டணியில் பாஜக 132 இடங்களிலும், ஷிண்டே சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவார் என்சிபி 41 இடங்களிலும் வென்றுள்ளது.
ஆனால் எதிரணியான மகா விகாஸ் ஆகாதி அணியை சேர்ந்த காங்கிரஸ் 16 இடங்களிலும், உத்தவ் தாக்கரே சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவார் என்சிபி 10 இடங்களிலும் என கூட்டணியே மொத்தமாக 46 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
எனவே அமைய மகாராஷ்டிர சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத சூழல் உருவாகி உள்ளது. மகாராஷ்டிர அரசியலில் கடந்த 57 ஆண்டுகளில் இதுபோன்ற மோசமான சூழல் ஏற்பட்டது கிடையாது.

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, மொத்தமுள்ள சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 10% இடங்களை பெற்று இருக்க வேண்டும். 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 28 உறுப்பினர்களைத் தன்வசம் வைத்திருக்கும் கட்சியிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவரைப் பரிந்துரைக்க முடியும்.
ஆனால் எதிர் கூட்டணியான மகா விகாஸ் அகாதியில் அதிகபட்சமான இடங்களை வென்றது உத்தவ் தாக்கரே சிவா சேனா. அதுவும் 20 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
எனவே அவரும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு உரிமை கோர முடியாது மகா விகாஸ் அகாதி கூட்டணி தேர்தலுக்கு முன்னரே உருவாகியிருந்தாலும், விதிகளின்படி, மூன்று கட்சிகளின் கூட்டு பலத்தைக் கொண்டும் எதிர்க்கட்சி தலைவர் பதவியைப் பெற முடியாது என்று சட்டமன்ற முன்னாள் முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற எதிர்கட்சித் தலைவர் இல்லாத சூழல் மகாராஷ்டிராவில் கடைசியாக கடந்த 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.






