என் மலர்
நீங்கள் தேடியது "தேசிய தலைவர்"
- தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்.
- 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ஜேடி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார்.
ஆனால் தேஜஸ்வி யாதவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவுக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தேஜஸ்வியின் பதவி உயர்வு குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ரோகிணி ஆச்சார்யா, "அரசியலின் உச்சம் - ஒரு வகையில், ஒரு மனிதனின் புகழ்பெற்ற இன்னிங்ஸின் மகத்தான இறுதிப் போட்டி; தங்கள் கைகளில் பொம்மையாக மாறிய இளவரசரின் முடிசூட்டு விழாவிற்காக, அந்தச் ஜால்ராக்களுக்கும் 'ஊடுருவல் கும்பலுக்கும்' வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து திடீரென ஓய்வு எடுத்து, தனது தாய்வழி குடும்பத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்டார் ரோகிணி ஆச்சார்யா.
தேஜஸ்வியின் அரசியல் பயணம்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015-ல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017-ல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழிநடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லையென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதல்வராகப் பதவியேற்றார். 2024-ல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
- நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார்.
- அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார்.
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பதவியேற்றார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு, இன்று பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்மூலம் பாஜகவில் குறைந்த வயதில் தேசிய தலைவர் பொறுப்பை வகிப்பவராக நிதின் நபின் மாறியுள்ளார். முன்னதாக, அமித் ஷா தனது 49 வயதில் தேசிய தலைவர் பதவியை ஏற்றார். ஜே.பி. நட்டா 2020 முதல் கட்சியின் தேசியத் தலைவராக இருந்தநிலையில், அவரது பதவிக்காலம் 2024 இல் முடிவடைந்தது. ஆனால் தேர்தல் போன்ற காரணங்களால் பதவி நீட்டிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று (ஜன, 19 ) நடைபெற்றது. இத்தேர்தலுக்கு வேறு எந்த வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு அவருக்கு இசட்-பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இன்று காலை அவர் பதவியேற்பதற்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, ஜே.பி. நட்டாவும் இதே போன்ற பாதுகாப்பைப் பெற்றார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்கிற படமாக உருவாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாளான இன்று திரைப்படம் வெளியாகியுள்ளது.
தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக பாவித்து அதற்கேற்ப செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். சுதந்திர போராட்டத்தில் சுபாஷ் சந்திர போஸின் வழியை பின்பற்றியது உள்பட பிற முக்கிய நிகழ்வுகளும் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரை குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை கடவுளுக்கு நிகராக மதித்து கொண்டாடுகின்றனர். இவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது ஒவ்வொரு சாதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம்.பஷிர் கச்சிதமாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்துள்ள பிற கதாப்பாத்திரங்களும் கதைக்கு ஏற்ப நடித்துள்ளனர்.
இயக்கம்
இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார். படத்தை இன்னும் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம். திரைக்கதை மீது கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தது.
ஒளிப்பதிவு
அகிலன் ஷியாலியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
- பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
- மனோகர் லால் கட்டார், வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
பாஜக கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளாகும்.
2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் ஜே.பி.நட்டா இல்லத்தில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் அரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்.
- நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ஐயா அவர்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ்ந்து தம் பொதுவாழ்வுப் பணியைத் தொடர்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






