search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fetus"

    • குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.
    • விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பரிகம் காட்டுவளவு கிராமத்தில் தனியாக உள்ள புஷ்பாகரன் என்பவரின் விவசாயி வீட்டில் நேற்று கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனை நடப்பதாக பாலின தேர்வை தடை செய்யும் மாநில கண்காணிப்பு குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில், மருத்துவம் மற்றும் ஊராட்சிகளின் பணிகள் டி.எஸ்.பி. சரவணகுமார், ஏ.ஓ. கமலக்கண்ணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தருமபுரி சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தி தலைமையில் திடீர் சோதனைக்கு சென்றனர். அப்போது மருத்துவக் குழு வருவதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான வடிவேல் சொகுசு காரில் ஸ்கேன் மெஷின் உடன் தப்பிச் சென்றார்.

    இந்தநிலையில் வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் வடிவேலுக்கு உதவிய தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கருவுற்ற பெண்களை காரில் அழைத்து வந்த டிரைவர் முருகன் ஆகிய இடைத்தரகர்கள் 2 பேரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, மேட்டூர், ஓசூர், பெங்களூர், பகுதிகளில் இருந்து வர வழைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்பட 15 பேரை மருத்துவக் குழுவினர் விசாரித்தனர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு, சட்ட விரோதமாக கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஏற்கனவே ஆணா, பெண்ணா என கண்டறிந்த சம்பவத்தில் 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இவருக்கு பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் ஆகிய இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இந்த 2 பேர் மூலம் கருவுற்ற பெண்களின் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிய நினைக்கும் பெண்களை ஏற்கனவே கருவில் இருப்பது என்ன குழந்தை என்று கண்டறிந்து சென்ற கர்ப்பிணிப் பெண்களின் உதவியோடு கண்டறிந்தனர்.

    பின்னர் அவர்களை மாவட்டத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காத காட்டுப் பகுதிகளை தேர்வு செய்து, அப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக திருவிழா, கல்யாணம், காதுகுத்து, நடக்கும் பகுதிகளை பார்த்து அப்பகுதியில் ஒரு வீட்டை தேர்வு செய்து, விசேஷத்திற்கு வந்தது போல் கணவர்கள் சம்மதத்துடன் அவர்களை அழைத்து வந்து ஒரே இடத்தில் வைத்து கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என கண்டறிந்து உள்ளனர்.

    இதை கண்டறிய ஒரு நபரிடம் ரூ. 13 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளனர். ஒரு பெண்ணை அழைத்து வந்தால் இடைத்தரகரான வனிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் கமிஷனாக கொடுத்து உள்ளனர். இதே பாணியில் தான் நேற்று வனிதாவும் முருகனும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பரியம் காட்டுவளவு கிராமத்தில் உள்ள புஷ்பாகரன் வீட்டில் அரங்கேற்றி உள்ளனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூர், பெங்களூர் பகுதிகளில் இருந்து வரவழைத்த பெண்களை வீட்டில் தரையில் படுக்க வைத்து ஸ்கேன் மெஷின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேலு கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என 12 பேருக்கு கண்டறிந்து உள்ளார்.

    மேலாண்மை குழு வருவதை அறிந்த வடிவேலு ஸ்கேனிங் மெஷினுடன் சொகுசு காரில் தப்பி சென்றுள்ளார். பின்னர் வனிதாவும் டிரைவர் முருகனும் ஒரே காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போது பாலின தேர்வை தடை செய்யும் குழுவினரிடம் சிக்கிக் கொண்டனர்.

    இது குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் வனிதா மற்றும் கார் டிரைவர் முருகன் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் உடன் சேர்ந்து இத்தொழிலை தொடர்ந்து செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து தொப்பூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையன்று எதிலும் எச்சரிக்கை தேவை.
    • பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளிக்கிறார்.

    மதுரை

    வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசையாகும். புதன் கிழமை அன்று நிறைந்த அமாவாசையாக வருகிறது. மேலும் இந்த ஆடி மாதத் திலே இரண்டு அமாவா–சைகள் வருகின்றன. இதில் முதலில் வந்த அம்மாவா–சையை சூனிய அமாவாசை என்று சொன்னார்கள். எனவே இந்த அமாவாசை ஆனது பவர்புல் அமாவா–சையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அதனால் எதிலும் எச்ச–ரிக்கையாக இருப்பது நல் லது என்று பிரபல ஜோதி–டர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார். எச்சரிக் கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது என்று கரு.கருப்பையா கூறியுள் ளார். பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு அமா–வாசையோ அல்லது இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்திலே புதிய காரியங்கள் தொடங் கக்கூடாது என்று சொல்லு–வார்கள்.

    ஒரு சிலர் அமாவாசையை நிறைந்த நாள் என்று சொல்லி புதிய காரியங்களை தொடங்குவார்கள். ஒரு சிலர் சற்று யோசித்து தொடங்க மாட்டார்கள். மேலும் மறுநாள் பிரதமை என்பதால் சந்திரனின் பலம் குறைந்திருக்கும் என்ற காரணத்தால், அதற்கு அடுத்த நாள் மூன்றாம் பிறை புதிய காரியங்களை தொடங்குவார்கள்.

    ஆக மொத்தத்தில் வரு–கின்ற அமாவாசையில் நெருப்பு, மின்சாரம் போன்ற வற்றில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வண்டி வாகனங்களை கவ னமாக இயக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அன்றைய தினத்திலே முன் னோர்களுக்கு திதி, தர்ப்ப–ணம் கொடுத்தால், ஓராண் டிற்கு உள்ள பலன் கிடைக் கும் என்றும், குலதெய்வத்தை வணங்கி வந்தால் எல்லா காரியங்களும் வெற்றியாகும் என்றும் பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.

    • கரு. கருப்பையா பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது.
    • இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள குச்சம்பட்டியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் 120-ம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி மதியம் அன்னதானமும், இரவு 9 மணிக்கு பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா நடுவராக பங்கேற்கும் சிரிப்பு-பாட்டு பட்டிமன்றமும் நடக்கிறது.

    மதுரை கீழ மாரட் வீதி பந்தடி 4-வது தெருவில் உள்ள பழைய கோண அரசமரம் பிள்ளையார் கோவிலில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 11.15 மணிக்குள் விமரிசையாக நடைபெறுகிறது.

    அன்று மாலை 6 மணிக்கு ஓ.வி ஆர்.எம்.ராஜ்குமார் தலைமையில் சிரிப்பு பட்டிமன்ற நடுவரும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பேரவை தலைவருமான திருப்புவனம் கரு.கருப்பையா பங்கேற்கும் நகைச்சுவை சொல் அரங்கம் நடக்கிறது.

    இதனையடுத்து இரவு 7 மணிக்கு ஓ.ஆர். கண்ணன் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    ×