search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டிமன்றம்"

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • தினசரி பிரபல பேச்சாளர்களின் பட்டிமன்றம், சொற்பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.
    • விழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டமாக பிரிந்து 30 ஆண்டுகள் ஆகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக "கடலூர் 30" என்ற தலைப்பில் "நெய்தல் புத்தக திருவிழா," 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை கடலூர் சில்வர் பீச்சில் நடைபெறுகிறது. இதற்காக 45 புத்தக அரங்கு களும், அரசின் பல்துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த கொள்கை விளக்க பொருட் காட்சியும் அமைக் கப்பட்டுள்ளது. மேலும் மாணவ- மாணவிகளி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தினசரி பிரபல பேச்சாளர்க ளின் பட்டிமன்றம், சொற் பொழிவுகள், ஊக்க உரை நடக்கிறது.தினசரி மாலை 4 மணி முதல் 6 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் தினசரி 2,500 முதல் 3 ஆயிரம் மாணவர்கள் வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மொத்தம் 28 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாண வர்களின் வசதிக்காக 50 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மூலம் பள்ளி களுக்கே சென்று மாண வர்களை ஏற்றிவரவும், விழா முடிந்ததும் மீண்டும் அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழாவின் நோக்கமே மாணவர்களிடம் புத்தகம் படிக்கும் திறனை ஊக்குவிப்பதே ஆகும். 

    மேலும் இங்கு வரும் குழந்தைகளுக்காக அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், பல்வேறு விளையாட்டு போட்டிகள், தமிழர் கலாசாரத்தை பறை சாற்றும் வகையி லான கலைநிகழ்ச்சிகளும் நடை பெறும். புத்தக திருவிழா வுக்கு வருபவர்களின் வசதிக்காக மொபைல் டாய்லெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்து கொடுக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், கடலுக்கு செல்லாத வகை யில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுவார்கள். புத்தக திருவிழாவையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படா மல் தடுக்கும் வகையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உடனிருந்தார்.

    • யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .
    • முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

      வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் பேச்சுத் திறனை அதிகரிப்பதற்காகவும், மேலும் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியம் பணப்பரிவர்த்தனையா, யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .

    இதில் பணப்பரிவர்த்தனை சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் பேசினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் யமுனா நடுவராக இருந்து மாணவிகளின் வாதங்களிலுள்ள சிறப்புகளை தொகுப்பித்து இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக முக்கியம் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் வணிக மேலாண்மை, துறை மாணவி செளமியா வரவேற்று பேசினார். துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    • ராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழாவில் ஜோதிடர் கரு.கருப்பையாவின் நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • சிவகிரி பேராசிரியர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மதுரை

    பிரசித்தி பெற்ற ராமேசு–வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழா நாளை (13-ந்தேதி, வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    விழாவையொட்டி கோவில் தெற்குவாசல் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிக–ளும் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் விழா–வின் சிறப்பு நிகழ்ச்சியாக நாளை (13-ந்தேதி) மாலை 6 மணிக்கு முதலாம் நாள் நிகழ்ச்சியாக கோவை சூலூர் ஏரோ சித்த மருத்து–வமனை கரு.கருப்பையா வழங்கும் உலகம் சிவமயம் என்ற தலைப்பில் ஆன்மீக் சொற்பொழிவு நடைபெறு–கிறது.

    இதையடுத்து பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா–வின் நடுவர் பொறுப்பில் நகைக்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் சிவகிரி பேராசிரியர் முனைவர் ராமராஜ், தூத்துக்குடி வக்கீல் சாந்தா ஆகியோர் கலந்துகொண்ட பேசுகி–றார்கள். முடிவில் பட்டி–மன்ற நடுவர் கரு.கருப் பையா தீர்ப்பு வழங்கு–கிறார்.

    • சோழவந்தானில் பட்டிமன்றம் நடைபெற்றது.
    • மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சி ஓட்டல் காபி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.

    அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கடைவீதியில் கழுவேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குகசீலன் ரூபன் நடுவராக இருந்து இன்னிசை பட்டிமன்றம் நடத்தினார். மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருப்பது அன்றைய பாடல்களா? இன்றைய பாடல்களா? என்ற தலைப்பில் இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க நிர்வாகி ஜவகர்லால் வரவேற்றார்.

    முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன், பேரூராட்சி தலைவர் ஜெயராமன் ,துணைத் தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்யபிரகாஷ், செந்தில்வேல், குருசாமி, சிவா ஆகியோர் பேசினர். துணைத் தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.

    ×