search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debate"

    • ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா?
    • முன்னதாக எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி பெருவிழா ஆறாவது நாள் ஆன்மிக பட்டிமன்றம் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலா, புறத்திலா? என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர், திரைப்பாடல் ஆசிரியர், டிவி புகழ் அகடவிகட நடுவர் கலைமாமணி நாகை நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    ஆன்மீகம் பெரிதும் பெருகியது அகத்திலே என்ற தலைப்பில் அன்னலெட்சுமி, பிரபாகரன், வர்ணனி ஆகியோரும், ஆன்மீகம் பெரிதும் பெருகியது புறத்திலே என்ற தலைப்பில் டிவி புகழ் பழனி, தமிழாசிரியர் சாகுல் ஹமீது, ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார்.

    எடையூர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் முனைவர் துரை ராயப்பன், ஆலோசகர் மருத்துவர் பாண்டியன், சர்வாலய உழவாரப்பணி குழுவை சேர்ந்த பாபு என்ற குமரவேல், முருகன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் ஊழியர் ராஜ்மோகன், நிசாந்த், அண்ணா துரை, மணி, மணிவண்ணன், குருக்கள் ஹரிஹரன், வினோத், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

    வருகிற அக் 24 ஆம் தேதி வரை அணைத்து நிகழ்ச்சிகளையும் சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி விழாக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

    • யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .
    • முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

      வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் பேச்சுத் திறனை அதிகரிப்பதற்காகவும், மேலும் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியம் பணப்பரிவர்த்தனையா, யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .

    இதில் பணப்பரிவர்த்தனை சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் பேசினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் யமுனா நடுவராக இருந்து மாணவிகளின் வாதங்களிலுள்ள சிறப்புகளை தொகுப்பித்து இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக முக்கியம் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் வணிக மேலாண்மை, துறை மாணவி செளமியா வரவேற்று பேசினார். துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    • திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது.
    • திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டில் 42-வது ஆண்டு கம்பன் விழா கைலாசநாதர் கோயில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு கம்பன் கழகத்தின் தலைவர் ஜான் சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளரும் கம்பன் கழகத்தின் துணைத் தலைவருமான பால தண்டாயுதபாணி வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக திருச்செங்கோடு சஎம்.எல்.ஏ. ஈஸ்வரன், திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்ட னர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக் கரசு, திருச்செங்கோடு வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்

    களின் தாளாளர் சிங்கார வேல் வாழ்த்தி பேசினார்

    ராமபிரானின் இதயத்தில் பெரிதும் இடம் பிடித்தவர்கள் உடன் பிறந்தோர், உடன் சேர்ந்தோர் என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக ராமச்சந்திரன் பேசினார். உடன் பிறந்தோரே என்ற அணியில் பெருந்துறை ரவிக்குமார், திருப்பூர் தெய்வநாயகி பேசினார்கள். உடன் சேர்ந்தோரே என்ற அணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா ஜெயச்சந்திரன், ராஜபாளையம் உமா சங்கர் பேசினர்.

    திருச்செங்கோடு கம்பன் கழக செயலாளர் செங்குட்டுவேல் நன்றி கூறினார்.

    • காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. கமிஷனர் பால்ராஜ், துணைத் தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஷ், பொறியாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தனர்.

    இதனை தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.

    1-வது வார்டு பிரியா (கம்யூ): எனது வார்டில் சேரன் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் கழிவு நீர் செல்கிறது. அதற்கு தீர்வுகாண வேண்டும்.

    7-வது வார்டு ரங்கசாமி (தி.மு.க), நேரு நகரில் போர்வெல் பழுதாகி உள்ளது. எனவே புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.

    5-வது வார்டு ரவிக் குமார்(தி.மு.க), பொன்விழா நகரில் வீட்டுமனைக்கு அனுமதி இல்லாமல் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும்.

    9-வது வார்டு பிரியா (தி.மு.க), ராயல் கார்டன், முல்லை நகர், காமராஜர் நகர் பகுதியில் குடிநீர் விஸ்தரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    21-வது வார்டு விக்னேஷ், (பாஜக),காரமடை நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மின்மயானத்தில் ஆம்புலன்ஸ் இருந்தும் வாடகை வாகனத்தை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    உடனடியாக இந்த ஆம்புலன்ஸ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின்மாயானம் மாலை 7 மணிவரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    24-வது வார்டு ராமமூர்த்தி (திமுக),பெரியார் நகரில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இவர்கள் பாலம் வசதி இல்லாததால் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் வீடுகளுக்கு குடிநீர் குழாய் அமைக்கும் பணியும் முறையாக நடக்கவில்லை. தனியார் ஒப்பந்ததாரர் குடியிருப்புவாசிகளிடம் இணைப்பிற்கு ரூ.15 ஆயிரம் வாங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் 3 முதல் 4 குடம் மட்டுமே வருகிறது.

    வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடும்போதும் ஒப்பந்த குழுவினருக்கு தெரியாமல் டெண்டர் விட கூடாது என பேசினார்.இதற்கு பதில் அளித்த கமிஷனர் பால்ராஜ், ரூ.25 ஆயிரத்திற்குட்பட்ட பணிகளுக்கு மட்டுமே பணிகளை பிரித்து கொடுப்பதில் முடிவு செய்யும் உரிமை ஒப்பந்த குழுவினருக்கு உண்டு. அதற்கு மேல் மதிப்பில் உள்ள பணிகளுக்கு ஒப்பந்த குழுவுக்கு உரிமை இல்லை என்றார்.

    துணைத்தலைவர் மல்லிகா ஜெயப்பிரகாஸ் (காங்கிரஸ்)- எனது வார்டுக் குட்பட்ட குடிநீருக்கு போர்வெல் அமைக்காததால் வீடுகளில் கருப்பு கொடி கட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும்.இதேபோன்று 13-வது வார்டு கண்ணப்பன் (தி.மு.க), 27-வது வார்டு வனிதாசஞ்ஜீவ்காந்தி (அ.தி.மு.க), 2-வது வார்டு குருபிரசாத், 17-வது வார்டு மலர்கொடி (தி.மு.க), தியாகராஜன்(தி.மு.க.) உள்பட அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் பகுதி குறைகள் குறித்து பேசினர்.

    இந்த கூட்டத்தில் 57 தீர்மானங்கள் மன்றத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அஜந்தாவில் மனை பிரிவுகள் வரையறைக்கு அனுமதி கேட்டு வைக்கப்பட்ட தீர்மானத்தில், எந்த இடம், எந்த வார்டு என குறிப்பிடவில்லை.

    மேலும் அங்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் உள்ளது. எனவே லே-அவுட்டுகளை கவுன்சிலர்கள் பார்வையிட வேண்டும் என்றும், அதன் பின்பே ஒப்புதல் அளிக்கவும், அதுவரை நிறுத்தி வைக்கவும் வேண்டும் என கவுன்சிலர் தியாகராஜன் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலான கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்ததால் அந்த தீர்மானம் உள்பட 6 தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    • பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா வடக்குமாங்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா பேசியதாவது:-

    கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது .

    அந்த வகையில் வடக்குமாங்குடி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடை பெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்தராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி.
    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணயைாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார. கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது-

    சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு வி ருது வழங்க காரணமாக இருந்த அனைத்து மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

    அ.தி.மு.க. எதிர்கட்சி தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில், சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியயாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி , கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அதிக நிதி ஒதுக்கியதே அதற்கு காரணம் என்றார். அதனால் அ.தி.மு.க.வுக்கும் பங்களிப்பு உள்ளது, மேலும் அனைத்து வார்டுகளையும் சமமாக பார்க்க வேண்டும், 'என்றார்.

    அப்போது குறுக்கிட்ட மேயர் அனைத்து வார்டுகளையும் சமமாகவே கருதுகிறோம் என்றார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், பனமரத்துப்பட்டி ஏரி டென்டர் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் சேலம் மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றார்.

    வாக்கு வாதம்

    அதற்கு பதில் அளித்து பேசிய சாந்த மூர்த்தி, பாதாள சாக்கடை திட்டம் உள்பட பல்வேறு பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடங்கி கிடந்தன. கடந்த 5 மாதத்தில் நடந்த பணிகளால் தான் சிறந்த மாநகராட்சி விருது கிடைத்தது என்றார். இதனால் தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கார சார மோதல் உருவானது. அதனால் மாநகராட்சி கூட்டத்தில் அமளி ஏற்பட்டது .

    இதற்கிடையே அங்கு வந்த விடுதலை சிறுத்தை கட்சி கவுன்சிலர் இமயவர்மன் மேயர் முன்பு தரையில் அமர்ந்த தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தி.மு.க. கவுன்சிலர்கள் சமரசம் செய்து இருக்கைக்கு அனுப்பி வைத்தனர்.

    தி.மு.க. மாநகராட்சி ஆளும்கட்சி தலைவர் ஜெயக்குமார் பேசியதாவது-

    திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்தது தான் இந்த விருது, அதனை திசை திருப்பி கொச்சை படுத்த முடிவு செய்துள்ளனர். இது தவறான செயல், இதற்கெல்லாம் தி.மு.க. அஞ்சாது, மாநகராட்சியில் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும், தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு சாதனைக்கு கிடைத்த விருது என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளஙகோ பேசுகையில், 5 மாத கவுன்சிலர்களின் செயல்பாட்டிற்கு கிடைத்த விருது தான் இது என்றார். அப்போது அ.தி.மு.க. மற்றும் தி.முக. கவுன்சிலர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கவுன்சிலர் இமயவரம்பன் பேசுகையில், தனது வார்டில் மின் மயானம் அமைப்பதாக கூறி 6 ஆண்டு ஆகியும் நிறைவேற்றாமல் உள்ளது. மேலும் தாதாகப்பட்டி பகுதியில் மூடப்பட்ட மானா சில்லி கடையை திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் ராமச்சந்திரன் உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    தொழிலதிபர் அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி என்றும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற ‘மக்களின் குரல்’ என்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், ரபேல் போர் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி தயாரா? என சவால் விடுத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது 526 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட போர் விமானம், தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக இந்த துறையில் சிறிதும் முன் அனுபவம் இல்லாத அனில் அம்பானிக்கு ஒப்பந்தத்தில் பங்கு அளிக்கப்பட்டதில் இருந்து இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரிகிறது என்றும், மக்களின் வரிப்பணத்தை தொழிலதிபர்களுக்கு மோடி வழங்கி வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய அவர், மோடி இந்திய மக்களுக்கு பிரதமராக பணியாற்றாமல், தொழிலதிபர்களுக்கு பிரதமராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் கிடைக்கும் லாபம் எதுவும் ஏழைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை ஏனெனில் மோடி தனது பணக்கார நண்பர்களுக்கு உதவுவதிலேயே மும்முரமாக செயல்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அம்பானியை காப்பாற்றுவதற்காகவே ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மோடி பிடிவாதமாக இருப்பதாகவும், இதன்மூலம் நாட்டின் மிகப்பெரிய கொள்ளையில் மோடியும் கூட்டாளி எனவும் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். #RahulGandhi #Modi #RafaleAircraftDeal 
    தமிழக சட்டசபை கூட்டத்தை வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கடந்த மார்ச் 15-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் சட்டசபை கூட்டம் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்துவதற்கான இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி விவாதிக்க அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தை வருகிற 29-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 23 நாட்கள் இந்த கூட்டத் தொடர் நடக்கிறது. #TNAssembly
    ×