என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sports department"
- தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.
- கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற் குட்பட்ட கழனிவாசல் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென அடிக்கல் விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த னர். அதனை தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி பேசிய தாவது:-
முதலமைச்சரால் 2021-2022-ம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத் திற்குட் பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளார்கள். சொன் னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.
கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை முதல்-அமைச்சர், விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளை யாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் பங்கேற்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உருவாக உள்ள தடகள பயிற்சி மையத்தில், சேர ஆர்வமுள்ளவர்களுக்கு, மாவட்ட விளையாட்டு த்துறை அழைப்பு விடுத்து ள்ளது.
இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் அறிக்கை:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் தடகள பயிற்சி மையம் அமைய உள்ளது. தடகள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு வீரர், வீராங்கனை தேர்வு, அதற்கான பயிற்சி முகாம், மார்ச், 10ம் தேதி, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. பயிற்சியில் பதினைந்து முதல், 30 வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும், 12 முதல், 18 வயதுடைய வீரர், வீராங்கனையர் மார்ச், 10ம் தேதி காலை, 10 மணிக்கு சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் தடகள போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்"
கல்வி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்து அறநிலையத்துறை சார்பில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள தேர்கள் மாற்றி புதிய தேர்கள் அமைக்கப்படும்.
பொங்கல் பரிசு ரூ.1,000 சர்க்கரை கார்டு உள்ளவர்களுக்கும் வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு சொல்லி தர ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
தமிழக அரசு சார்பில் கல்விதுறைக்கு என தனியாக ஒரு சேனல் உருவாக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்களை மாணவர்கள் குருவாக நேசிக்கவும், பெற்றோர்களை நேசிக்கவும் இந்த சேனல் பயன்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
பேட்டியின்போது அருகில் அமைச்சர் கே.சி.கருப்பணன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர். #MinisterSengottaiyan #Plus2
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்