தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்கள்

தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு கொண்டு வருகிறது.கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித்,  மாங்குடி எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.
கழனிவாசல் பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றினார். அருகில் கலெக்டர் ஆஷா அஜித், மாங்குடி எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற் குட்பட்ட கழனிவாசல் பகுதி யில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கென அடிக்கல் விழா நடந்தது. காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த னர். அதனை தொடர்ந்து, அமைச்சர் பெரியகருப்பன் கழனிவாசல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றி பேசிய தாவது:-

முதலமைச்சரால் 2021-2022-ம் ஆண்டின் சட்டப்பேரவை நிதி அறிக்கையின் கீழ் மாநிலம் முழுவதும் விளையாட்டு திறனை விரிவு படுத்துகின்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளி யிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக 10 சட்டமன்றத் தொகுதிகளில் இன்றைய தினம் அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத் திற்குட் பட்ட கழனிவாசல் பகுதியில் சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது பொது மக்களுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில், ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2½ ஆண்டுகளில் 85 சதவீத வாக்குறுதிகளை நிறை வேற்றியுள்ளார்கள். சொன் னதை செய்தது மட்டுமன்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களையும் தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார்.

கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி விளையாட்டு துறையிலும் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்கிடும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகள், அனைத்து விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி விளையாட்டு துறையை முதல்-அமைச்சர், விளை யாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஊக்குவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, மாவட்ட விளை யாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், சங்கராபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் தேவி மாங்குடி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் சொக்க லிங்கம், காரைக்குடி நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, மாவட்ட கால்பந்து விளையாட்டு கழக தலைவர் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com