search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu assembly"

    • தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
    • மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது,

    "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.

    தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.

    தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.

    அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.

    அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் சபாநாயகர் அறிவுறுத்தினார்.
    • வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அதன்படி அவை கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் அவை தொடங்கியது முதல் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டு அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறிய கருத்துக்கு சபாநாயகர் ராஜகண்ணப்பனை கடுமையாக விமர்சித்தார். மேலும் அமைச்சர்கள் பேசும் போது கவனமாக பேசுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

    இந்நிலையில் நேற்று சட்டசபையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே எச்சில் துப்புகிறார். இந்த வீடியோ இணையத்தில் பரவி பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


    இது குறித்து இணைய வாசிகள் டிசிப்ளின் கிலோ என்ன விலை?? என்றும், 40/40 வெற்றி பெற்றவர்கள் அவர்கள் வேலையை தொடங்கிவிட்டார்கள் என்று கமெண்டுகளையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.


    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.
    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

    • விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ்கிட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • திமுக ஆட்சிக்கு வந்த பின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 102 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    • ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட், கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின்.

    • கடந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் 12 பேர் பங்கேற்றிருந்தனர். இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 16 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    • கேலோ இந்தியா போட்டிக்கு ம.பிக்கு மத்திய அரசு ரூ. 25 கோடி கொடுத்து, தமிழகத்திற்கு கொடுத்தது ரூ. 10 கோடி.

    • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.

    • அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

    • கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

    • உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 210 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

    • ராயபுரம், கொடுங்கையூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நா‌ள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அன்றைய தினம் உரை நிகழ்த்த உள்ளார். அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டசபை சபாநாயகர் அப்பாவு வாசிக்க உள்ளார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் திங்கட்கிழமை மதியம் நடைபெற உள்ளது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீதான விவாதம் 3 நாட்கள் வரை நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. ஆனாலும், நாட்களை இறுதி செய்யும் பணியை அலுவல் ஆய்வு குழு மேற்கொள்ளும்.

    அதனைத் தொடர்ந்து, 19-ந்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்வார்.


    மேலும் 20-ந்தேதி 2024-2025-ம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21-ந்தேதி 2023-2024-ம் ஆண்டிற்கான முன் பணச் செலவின மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் சட்டப் பேரவை மண்டபம் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, ஒலிப் பெருக்கிகள் உள்ளிட்டவை முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் நுழைவாயிலில் உள்ளே செல்லும் வழி வெளியே வரும் வழி அறிந்துக்கொள்ள ஏதுவாக அறிவிப்பு பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், தலைமைச் செயலகம் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, சட்டமன்ற உறுப்பினர்கள் அறைகளில் உள்ள இருக்கைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

    திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெறும் போது அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் முழுமையாக வாசிப்பாரா? அல்லது கடந்த ஆண்டை போல் சில வாசகங்களை தவிர்த்து விட்டு வாசிப்பாரா? என்பது அப்போது தான் தெரிய வரும்.


    கவர்னர் உரைக்கு பிறகு தொடர்ந்து நடைபெறும் சட்டசபையில் ஆளும் கட்சி-எதிர்கட்சி இடையே அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் விவரங்கள், அவர்களது கேள்விகள் போன்றவற்றைக்காண வைக்கப்பட்டுள்ள அகண்ட திரையின் அகலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காகிதம் இல்லாத சட்ட சபையின் அங்கமாக சட்டசபை மண்டபத்தில் ஒரு சில இடங்களில் அகண்ட திரைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கேள்வி நேரத்தின்போது வினா எழுப்பும் உறுப்பினரின் பெயர், தொகுதி விவரங்கள், எழுப்பப்பட்ட வினா, அதற்கு பதிலளிக்கும் அமைச்சரின் பெயர், துறை விவரங்கள் அந்தத் திரையில் இடம் பெற்று வருகின்றன.

    இதற்காக வைக்கப்பட்டு உள்ள திரையின் அகலம் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக சட்டசபை செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். 50 அங்குலம் அளவில் இருந்த திரைகளின் அகலம் இப்போது கூடுதலாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திரையில் காட்டப்படும் விவரங்களை எங்கிருந்தும் எளிதாக பார்க்க முடியும். இதே போன்று சட்டசபையின் மண்டபத்தின் தரைத் தளத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு சுழலும் வகையிலான நாற்காலிகள் வாங்கப்பட்டுள்ளன. அவையும் இந்த கூட்டத் தொடரில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

    சட்டசபை கூட்டத் தொடரில் சில முக்கிய பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கு நிலைமை உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டசபை கூட்டத் தொடரை தொடங்கி வைக்கும் வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உரையைத் தவிர்த்து, சில பத்திகளை விடுத்தும், சில வரிகளை அவரே சேர்த்தும் வாசித்தார். இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    கவர்னர் படித்த உரை அவைக் குறிப்பில் இடம் பெறாது எனவும் அரசின் சார்பில் தயாரித்து சட்ட சபைக்கு அளிக்கப்பட்ட உரையே இடம் பெறும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான தீர்மானத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை.
    • அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் சட்டசபை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.

    மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை 24-ந் தேதி திறந்து வைக்க செல்கிறார். 25-ந்தேதி சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.

    இதனால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் தனியாகவும், வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுகிறது.

    பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அறிய துறை வாரியான ஆய்வுக் கூட்டங் கள் தலைமைச் செயலகத் தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொழில்துறை மற்றும் சிறு தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார். இதேபோல் ஒவ்வொரு துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வணிகர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நிதி அமைச்சர் ஆலோசனைகள் நடத்த இருக்கிறார்.

    இதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும்.

    அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்பதால் தேர்தலில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    அதேபோல் பெண்கள் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப் புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று உள்ளதால் புதிதாக தொழில் துவங்கும் நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிறு-குறு நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருவதால் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அவற்றை இடம் பெற செய்வார் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இடம்பெறும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேளாண் பட்ஜெட்டும் தயாராகி வருகிறது.

    அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    ஏனென்றால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில வரிகளை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார். இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.

    இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிட்டது.

    இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட வேண்டிய சட்டசபைக் கூட்டம் இதுவரை தொடங்க படவில்லை.

    அடுத்த மாதம் தான் (பிப்ரவரி) சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.

    • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை வந்தனர்.
    • உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன்.

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று மூன்றாவது நாளாக காலை 10 மணிக்கு கூடியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை வந்தனர்.

    எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கமான வெள்ளைச் சட்டை அணிந்தே வருகை வந்தனர். இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழிய பெற்று எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கியது.

    உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றன்.

    நாளை 12-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும். 13-ந்தேதி, எம்.எல்.ஏ.க்களின் விவாதத்திற்கு முதலமைச்சர் பதில் அளித்து பேசுவார்.

    பின்னர் அவசர சட்டம் தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட சில சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். அவை தினமும் காலை 10 மணிக்கு கூடும். கேள்வி நேரம் உண்டு. கவர்னர் உரைக்கு வருத்தமும் நன்றியும் பதிவு செய்யக்கோரி அறிவிப்பு வரப்பெற்றுள்ளதாக எம்.எல்.ஏக்களுக்கு சட்டசபை செயலாளர் சீனிவாசம் கடிதம் எழுதி உள்ளார்.

    சில பகுதிகளை இணைத்தும், விடுத்தும் உரையாற்றியதற்கு பேரவை வருத்தத்தை பதிவு செய்வதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதிக்க சட்டசபை ஜூன் மூன்றாம் வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8-ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

    அதைத் தொடர்ந்து பிப்ரவரி 11, 12, 13-ந் தேதிகளில் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு பிப்ரவரி 14-ந் தேதியன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துப் பேசினார்.

    அனைத்து அலுவல்களும் முடிந்ததைத் தொடர்ந்து, சட்டசபை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடப்படாமல் பிப்ரவரி 14-ந் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகள், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மானியக் கோரிக்கைகள் தொடர்பான நிகழ்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. சட்டசபை மரபுப்படி 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை கூட்டம் கூடவேண்டும். அதாவது அக்டோபர் 13-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபை கூட்டப்பட வேண்டும்.

    இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தாலும், ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    சட்டசபையை மீண்டும் கூட்டுவதற்கு அதிக நாட்கள் இருந்தாலும், ஜூன் 2 அல்லது 3-ம் வாரத்தில் கூட்டத் தொடரைத் தொடங்க வாய்ப்பிருப்பதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது.



    இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் ப.தனபால் மீது தி.மு.க. கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மிக முக்கிய நிகழ்வாக இருக்கும்.

    எனவே தி.மு.க.வின் தீர்மானத்தை முறியடிக்க பல்வேறு முயற்சிகளில் அரசு இறங்கியுள்ளது.

    தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். #TNAssemblySession
    சென்னை:

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கடந்த 18-ம் தேதி ஆளுநர் அறிவித்தார்.



    இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெறும். அதன்பின்னர், விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார். #TNAssemblySession

    மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது. #TNAssembly #mekedatuDam
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதற்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தமிழக சட்டசபையின் சிறப்புக்கூட்டம் கூடுகிறது என தகவல் தெரிவிக்கின்றது. #TNAssembly #mekedatuDam
    தமிழ்நாடு முழுவதும் சொத்துவரியை 100 சதவீதம் வரை உயர்த்தி தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்தது. வீடுகளுக்கு 50 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    சென்னை:

    தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.

    இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.

    ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.

    குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.



    தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.

    தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.

    வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment #PropertyTax
    டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும் என சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். #OPanneerselvam #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் பொதுத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்லியில் உள்ள வைகை தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.57 கோடி செலவில் புதிய விருந்தினர் இல்லம் கட்டப்படும். தற்போதுள்ள பிரதான விருந்தினர் இல்ல கட்டிடம் ரூ.2½ கோடி செலவில் மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும்.

    தலைமை செயலகத்தில் செயல்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ரூ.90 லட்சம் செலவில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.

    தாயகம் திரும்பியோர் பயன்பெறும் வகையில் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ஆயிரம் வீடுகள், தாயகம் திரும்பியோருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #OPanneerselvam #TNAssembly
    ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன்கருதி உயர் கல்வி உதவித் தொகைக்கான கூடுதல் நிதிச் சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #OPannerselvam #TNAssembly #ADMK
    சென்னை:

    சட்டசபையில் நேற்று நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் கணேசன் (திட்டக்குடி தொகுதி) பேசினார். அப்போது அவர், பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜலட்சுமி, ‘பஞ்சமி நிலங்களை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்து பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டம்தான் இந்தத் திட்டம். 2017-2018-ம் ஆண்டுக்கான முதலாண்டு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய பராமரிப்பு உதவித்தொகையும், கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய நிர்வாகக் கட்டணமும் தவிர, மற்ற அனைத்து உதவித்தொகைகளையும் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கான நிதியை உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ரூ.850 கோடியை விடுவித்துள்ளது. 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை முடிவுற்ற பின்பு, கல்வி உதவிக்கான கேட்பு கணக்கிடப்பட்டு, அதற்கான உதவித்தொகையையும் மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைப்படி, மாநில அரசின் பொறுப்புத் தொகை ரூ.1,526 கோடியே 46 லட்சமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் மொத்த கேட்பு 2018-2019-ம் ஆண்டிற்கு அதற்கு மேல் உயர வாய்ப்பில்லை.

    இந்தநிலையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தில், இந்தத் திட்டத்திற்கான முழு நிதியையும் இனிமேல் மாநில அரசு, அதன் நிதி ஆதாரத்தில் இருந்தே வழங்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்களின் நலன் கருதி, இந்த நிதிச் சுமையை மாநில அரசே தொடர்ந்து ஏற்று செயல்படுத்தும்.

    அதே நேரத்தில், மற்ற மத்திய அரசின் திட்டங்களைப்போல், நிதிப்பகிர்வில் மத்திய அரசின் நிதி 60 சதவீதம், மாநில அரசின் நிதி 40 சதவீதம் என்ற விகிதாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து பேசிய உறுப்பினர் கணேசன், திட்டக்குடி வெலிங்டன் ஏரி கரை உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வெலிங்டன் ஏரியை பராமரிக்க ரூ.36 கோடியே 45 லட்சத்தில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில், ஏரி பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என்றார். #OPannerselvam #TNAssembly #ADMK
    ×