search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confusion"

    • மாலினியும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.
    • புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் போலீசில் புகார் செய்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள சென்னிமலை கிராமத்தை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மகன் கண்ணன் (வயது 21). களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் மாலினி (20). இவரும், கண்ணனும் ஒரே நூற்பாலையில் வேலை பார்த்தனர்.

    காதல் திருமணம்

    அப்போது இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் ஏறி கடந்த 3-ந் தேதி வேளாங்கண்ணியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் மாலினியின் தாயார் செல்வராணி நேற்று முன் தினம் அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து நெல்லைக்கு அழைத்து வந்தபோது 2 காரில் வந்த கும்பல் அந்த புதுப் பெண்ணை காரில் கடத்தி சென்றதாக கண்ணன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.

    2 பேரிடம் விசாரணை

    அதன் பேரில் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறும் போது, மாலினியை கடத்தி சென்று விட்டதாக கண்ணன் அளித்த புகாரில் விசாரணை நடத்தினோம். அப்போது மாலினியை அவரது உறவினர்கள் காரில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இது தொடர்பாக அவரது உறவினர்கள் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். ஆனால் தற்போது மாலினி தன்னை யாரும் கடத்த வில்லை என்றும், தனக்கு திருமணமாகவில்லை என்றும் முரண்பாடான கருத்துக்களை கூறி வருகிறார்.

    இதனால் வழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

    • தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ், லாரிகள் செல்ல மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    • தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை-தென்காசி சாலையில் பழைய பேட்டை கண்டியபேரி அருகே சாலை வளைவில் அமைந்துள்ள பழமையான தரைப்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது.

    இதனையொட்டி அந்த வழியாக நெல்லையில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் பஸ், லாரிகளும், இதே போல் மறு மார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லை மாநகரத்திற்குள் வரும் பஸ் மற்றும் லாரிகள் செல்வ தற்கும் மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதற்கான முன்னோட்டம் இன்று நடைபெற்றது. அதே நேரத்தில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் கண்டியப்பேரி வழியாக செல்வதற்கு தற்காலிகமாக மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில் தென்காசிக்கு செல்லும் பெரும்பாலான பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், பேட்டை, திருப்பணி கரிசல் குளம் வழியாக அபிஷேகப்பட்டிக்கு செல்லாமல் காட்சி மண்டபத்தில் இருந்து வழுக்கோடை வழியாக கண்டியப்பேரி பகுதிக்கு சென்று விட்டது.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது.

    தகவல் அறிந்த போக்கு வரத்து போலீசார் அங்கு விரைந்து வந்து போக்கு வரத்து நெருக்கடியை சரி செய்தனர். அதனைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் பழைய பேட்டை செக்போஸ்ட் அருகே திருப்பி விடப்பட்டு, புதுப் பேட்டை ரொட்டி கடை பஸ் நிறுத்தம் வழியாக கோடீஸ்வரன் நகருக்கு சென்று மீண்டும் வழுக்கோ டை வந்து தொண்டர் சன்னதி வழியாக மாநருக்குள் இயக்கப்பட்டது.

    இந்த நடைமுறை நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இன்று சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் புதுப்பேட்டை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு வாகன போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

    காலையில் தென் காசியில் இருந்து வரும் பஸ்கள் எளிதாக நெல்லை க்கு வந்து விடும் நிலையில் நெல்லை யிலிருந்து தென்காசி செல்வதற்கு பெரும் பாலான பகுதி களை பஸ் சுற்றி செல்வதால் பயண நேரம் மிகவும் அதிகரிப்ப தாக பயணி கள் புகார் கூறினர்.

    • பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
    • எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

    சிவகாசி

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ெரயில் நிலையங்களை சேர்க்கவில்லை. சென்னை- கொல்லம் ெரயில் சிவகா சியில் நிற்பதில்லை. தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

    ராகுல்காந்தி பிரதமர் ஆனால் சிவகாசி முன்னேற்றம் அடையும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

    சிவகாசிக்கு பல சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தயாராக இருந்தாலும், மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். மாநகராட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும்படியும் இது குறித்து மத்திய மந்திரிக்கு ரூ.250 கோடி நிதி கேட்டு மனு அளித்து 3 மாதங்களாகியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    நிலம் எடுப்புப் பணி முடிந்தும் சிவகாசி ெரயில்வே மேம்பால பணிகள் தொடங்கும். 2019 தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி மக்களை குழப்பி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டிடப் பணிகளைஆய்வு செய்தார்.

    ஊராம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எம்.பி. நிதியில் அமைக்கப் பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாணிக்கம்தாகூர் எம்.பி கேட்டறிந்தார்.

    விளாம்பட்டி ஊராட்சி காமராஜர்புரம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்.பி. பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ், வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் தர்மராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.
    • பைக்கில் வைத்திருந்த லைெசன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகம், தேத்தாகுடி வடக்கு கிராமம், புது ரோடு மரமில் எதிரில் மாட்டு தீவன கடை நடத்தி வருபவர் சண்முகம். இவரது மகன் வேலவன்.

    இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக எலக்ட்ரிக் பைக் வைத்து பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியிருந்தார்.

    பின்னர் வெளியில் செல்வதற்காக எலக்ட்ரிக் பைக்கை சாவி போட்டு ஸ்டார்ட் செய்தார்.

    அப்போது திடீரென பைக் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இந்த தீ விபத்தில் பைக் முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    மேலும் பைக்கில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்கள், லைெசன்ஸ் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசம் ஆனது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தொடரும் குளறுபடியால் தட்டச்சு தேர்வு நாளை நடக்குமா என தேர்வர்கள் தவிக்கின்றனர்.
    • தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் என தொழில்நுட்ப கல்வி த்துறை அறிவித்திருந்தது. ஆனால் பழைய நடைமுறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டதால் தேர்வுகள் அப்போது ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (26-ந் தேதி) மற்றும் 27-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஹால்டிக்கெட்டுகள் தட்டச்சு பயிற்சி மையம் மூலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட்டுகள் வராததால் நாளை தேர்வு நடக்குமா? என்று தேர்வர்கள் பரிதவிப்புக்கு ள்ளாகின்றனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் நாடு முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    புதுடெல்லி:

    வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகள் இணைந்து அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாரத்பந்த் குறித்து பேசிய மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, விலை உயர்வு விவகாரத்தில் காங்கிரஸ் வரலாற்றில் பல்வேறு குற்றங்கள் இருப்பதாகவும், ஆனால் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.



    மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் காங்கிரஸ் எதிர்மறையான சூழலை உருவாக்க முயற்சிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை தடுக்க யாரோ காங்கிரஸ் கட்சியை தூண்டுகிறார்களோ என தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணையும் கட்சிகள் அனைத்தும் படுதோல்வி அடையும் என்பதால்தான் பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த பாரத்பந்தில் பங்கேற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த 11 சதவிகித பணவீக்கத்தை, மோடியின் திறம் மிக்க ஆட்சியால் 4 சதவிகிதமாக குறைந்துள்ளது, மேலும் இது குறையும் எனவும் கூறியுள்ளார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நடைபெறும் இந்த முழு அடைப்பு போராட்டம், வதந்திகளையும், குழப்பத்தையும் பரப்புவதற்காக நடத்தப்படுவதாக மத்திய மந்திரி அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். #BharathBandh #PetrolDieselPriceHike #BJP #MukhtarAbbasNaqvi
    ×