search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "typing test"

    • தொடரும் குளறுபடியால் தட்டச்சு தேர்வு நாளை நடக்குமா என தேர்வர்கள் தவிக்கின்றனர்.
    • தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் என தொழில்நுட்ப கல்வி த்துறை அறிவித்திருந்தது. ஆனால் பழைய நடைமுறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டதால் தேர்வுகள் அப்போது ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (26-ந் தேதி) மற்றும் 27-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஹால்டிக்கெட்டுகள் தட்டச்சு பயிற்சி மையம் மூலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட்டுகள் வராததால் நாளை தேர்வு நடக்குமா? என்று தேர்வர்கள் பரிதவிப்புக்கு ள்ளாகின்றனர்.

    ×