search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மகளிர் கலை கல்லூரியில்  பட்டிமன்றம்
    X

    அரசு மகளிர் கலை கல்லூரியில் பட்டிமன்றம்

    • யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .
    • முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள் இணைந்து மாணவிகளின் பேச்சுத் திறனை அதிகரிப்பதற்காகவும், மேலும் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும், நாட்டிற்கும் மிகவும் முக்கியம் பணப்பரிவர்த்தனையா, யூ.பி.ஐ .பரிவர்த்தனையா என்ற தலைப்பில் கல்லூரி கலையரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது .

    இதில் பணப்பரிவர்த்தனை சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே சிறந்தது என்ற தலைப்பில் 6 மாணவிகளும் பேசினார்கள். இந்நிகழ்வில் வணிகவியல் துறை தலைவர் யமுனா நடுவராக இருந்து மாணவிகளின் வாதங்களிலுள்ள சிறப்புகளை தொகுப்பித்து இன்றைய சூழ்நிலையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் மிக முக்கியம் யூ.பி.ஐ .பரிவர்த்தனையே என்று தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்விற்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும் ,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் வணிக மேலாண்மை, துறை மாணவி செளமியா வரவேற்று பேசினார். துணை முதல்வர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக மேலாண்மை, மாணவி சத்யா நன்றி கூறினார்.

    Next Story
    ×