என் மலர்
நீங்கள் தேடியது "entertainment"
- பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம்.
- பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் பெரியண்ணன் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
அரசு தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு புதிய பூங்காவினை திறந்து வைத்தார். இந்த பூங்காவில் பெரியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கான தளம், குழந்தைகள் விளையாட்டு மையங்கள், ஊஞ்சல், சரக்கு ஏற்ற, இறக்க மரம் போன்ற பொழுதுபோக்கு உபகரணங்கள் வைத்து அழகு படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, பாபநாசம் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் துரைமுருகன், பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்திவாசன், சமீராபர்வீன், பிரேம்நாத் பைரன். பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கஜலெட்சுமி, கோட்டையம்மாள், மற்றும் மாவட்ட ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளா் வேலுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
மோட்டாா் வாகனச் சட்டத்தை நடை முறைப்படுத்தக் கூடாது. சட்டப் பேரவையில் இதற்கான தீா்மா னத்தை நிறைவேற்ற வேண்டும். ஆட்டோ தொழிலாளா்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மத்திய ஜெயில்கள், மாவட்ட ஜெயில்கள் என மொத்தம் 70 ஜெயில்கள் உள்ளன. இவற்றில் 1 லட்சத்து 2 ஆயிரம் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு பொழுது போக்கு வசதிகள் இல்லாததால் கைதிகள் சோர்வுடன் காணப்பட்டனர். இதனால் ஜெயிலில் பல்வேறு மறுசீரமைப்புகளை செய்ய ஜெயில் துறை முடிவு செய்துள்ளது.

இந்த டி.வி.க்களில் தகவல் தொடர்பான நிகழ்ச்சிகள் மற்றும் பயனுள்ள நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உ.பி. ஜெயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது
அதே நேரத்தில் ஜெயில் காவலர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. அங்கு 9 ஆயிரம் ஜெயில் காவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 4 ஆயிரம் ஜெயில் காவலர்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். மீதி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. #UPJails