என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலை"
- மாவட்ட அளவிலான போட்டிகள் 2 நாட்கள் அவ்வையார் அரசு பள்ளியில் நடைபெறுகிறது.
- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தருமபுரி,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 -ம் வகுப்பு வரையிலான மாண வர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலை வடிவங்களை குறித்த அறிவையும் புரிதலையும் மாணவர்களுக்கு உருவாக்கி நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்க கலை விழாவை அரசு நடத்தி வருகிறது.
இதில் வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம், காட்சிகலை, நாடகம் மற்றும் தனிநபர் நடிப்பு எனும் 5 தலைப்புகளில் கலை பண்பாட்டு திருவிழா 2015 - 16 -ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து 2023 - 24 -ம் ஆண்டிற்கான கலை பண்பாட்டு திருவிழா மாவட்ட அளவிலான போட்டிகள் இரண்டு நாட்கள் தருமபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்நிகழ்வினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் மான்விழி, ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரவிக்குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீனிவாசன், துரைராஜி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
வாழப்பாடி:
வாழப்பாடி அக்ரஹாரம் சென்றாயப் பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி, லதா நாட்டியாலயா இசைப்பள்ளி சார்பில், வாழப்பாடியில் முதன்முறையாக பரதநாட்டியம் மற்றும் குரலிசை, இசைக்கருவிகள் அரங்கேற்ற விழா நடைபெற்றது.
விழாவிற்கு, பரதநாட்டிய இசைப்பள்ளி ஆசிரியை லதா வெங்கடேஷ் வரவேற்றார். வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி. சக்கரவர்த்தி தலைமை வகித்தார்.
வாழப்பாடி இன்ஸ்பெக்டர்கள் உமாசங்கர், தனலட்சுமி, இலக்கிய பேரவை செயலர் சிவ.எம்கோ, அரசு மருத்துவர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில், பரதநாட்டியம், குரலிசை, இசைக்கருவிகளை வாசித்து, குழந்தைகள் அரங்கேற்றம் செய்தனர்.
முறையாக பயிற்சி பெற்று நேர்த்தியாக அரங்கேற்றம் செய்த குழந்தைகளுக்கு, சென்றாய பெருமாள் கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடாசலம், தாண்டவராயன், கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் சீனிவாசன், மா. கணேசன், கடலூர் மாவட்ட ஆரிய வைசிய மகாசபை நிர்வாகி வினோத்குமார், தனுஷா ஆகியோர், வளர் கலைமணி விருது மற்றும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முன்னதாக வாழப்பாடி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சலங்கை பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில், காங்கிரஸ் பிரமுகர் அத்தனூர்பட்டி ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் சாந்தகுமாரி சரவணன், சிங்கிபுரம் விவசாயக் கூட்டமைப்பு தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை லதா நாட்டியாலயா இசைப்பள்ளி பயிற்றுநர் லதா வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்