search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான கலைத்திருவிழாவில் மலை கிராம அரசு பள்ளி  முதலிடம்
    X

    மாநில அளவிலான கலைத்திருவிழா நடனப்போட்டியில் முதல் பரிசு பெற்ற மண்ணுார் மலை கிராம மாணவ – மாணவியர்.

    மாநில அளவிலான கலைத்திருவிழாவில் மலை கிராம அரசு பள்ளி முதலிடம்

    • மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ –மாணவியர் படித்து வருகின்றனர்.
    • அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கல்வராயன் மலையில் மண்ணூர் கிராமம் அமைந்துள்ளது. பழங்குடியின மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்திற்கு, சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் வரை சாலை போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் இருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னரே அடிப்படை வசதிகள் கிடைத்தது.

    இந்த மலை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 1 முதல் 8 வகுப்பு வரை, ஏறக்குறைய 100 பழங்குடியின மாணவ

    –மாணவியர் படித்து வருகின்ற னர். தலைமையாசிரியர் கதிர்வேல் உள்பட வெங்க டாஜலம், பா.சக்திவேல், நல்லுசாமி, ர.சரண்யா, லீலாவதி ஆகிய 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அர்ப்பணிப்பு உணர்வோடு ஒருங்கி ணைந்து பணியாற்றி வரும் ஆசிரியர்கள், மாண வர்களுக்கு தரமான கல்வி கற்பிப்பதோடு, பல்வேறு கலைத்திறன் மற்றும் விளையாட்டு பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். இதனால், தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்திய வட்டார அளவி லான கலைத்திருவிழா குழு நடனப்போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி மாணவ–மாணவியர், கா.காவியா.

    பொ.மாலதி.மு.ரஞ்சித்கு மார், மு.சந்ரு, த.வினோத், த.லோகேஸ்வரன், ஜெ.கோகுல்கிருஷ்ணா, ஆ.செல்லதுரை, பொ.சரத்கு மார் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலிடம் பிடித்து

    மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    இதனையடுத்து, அண்மையில் மதுரையில் செளராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா நடனப் போட்டியில் பங்கேற்ற இப்பள்ளிக் குழுவினர், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து போட்டியில் பங்கேற்ற குழுக்களை விட மிகச் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனர்.

    முதன்முறையாக மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று கிராமத்திற்கு திரும்பிய மாணவ–மாணவியருக்கு, மண்ணுார் மற்றும் மாமாஞ்சி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து, மேள வாத்தியம் முழுங்க பாரம்பரிய முறைப்படி ஆரத்தியெடுத்து, மாலை யணிவித்து பொன்னாடை போர்த்தி அதிர் வேட்டு முழங்க வரவேற்பளித்து கெளரவித்தனர்.

    மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கணித ஆசிரியர் சக்திவேல் மற்றும்

    ஊக்குவித்த தலைமை யாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர். வட்டார, மாவட்ட, மாநில பள்ளிக்கல்வித்துறை உயரதி காரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×