search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
    X

    விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.

    குமாரபாளையத்தில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

    • ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல் குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சுகாதார விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்தார்.இதில் தூய்மை இந்தியா திட்டம் கீழ், மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து எடுத்தல், மக்கும் குப்பையில் உரம் தயாரித்தல், தனி நபர் இல்ல கழிப்பறை பராமரித்தல், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் இருத்தல், பொதுக்கழிப்பிடம் பயன்படுத்துதல், மக்காத கழிவுகளை மறு சுழற்சி செய்வதுடன் எரியூட்டுதல், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்டவைகள் குறித்து கலை நிகழ்சிகள் மூலம் சேலம் வெங்கடாசலபதி நாடக குழுவினர் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் செல்வராஜ், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×