என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரிச்சலுகை"

    • 5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை ஜிஎஸ்டி கொண்டிருந்தது.
    • 8 ஆண்டுகளாக இவ்வரி மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது.

    நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மாநில அரசும், மத்திய அரசும் தனித்தனியாக வரி வசூலிப்பதை தவிர்க்கும் வகையில், அன்றாட பயன்பாட்டுப் பொருட்களுக்கு 5%, பொது பயன்பாட்டுப் பொருட்களுக்கு 12 %, அதிகம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 18% வரி மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கு 28% வரி என விகிதங்கள் வகுக்கப்பட்டன.

    ஜி.எஸ்.டி. வரி முறை அமலுக்கு வந்த பிறகு பல்வேறு பொருட்களும் இந்த வரி விதிப்புக்குள் கொண்டு வரப்பட்டது.

    இதில் சில பொருட்களுக்கு அதிகபட்ச வரி விகிதம் இருந்தது. இதனால் அதை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன.

    அதையடுத்து அவ்வப்போது வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. ஆனாலும்கூட இன்னும் சில பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    மேலும் குறு, சிறு தொழில்களும் இந்த வரிமுறைக்கு கொண்டு வரப்பட்டன. குறைந்த முதலீட்டில் தொழில் செய்யும் நபர்களும் ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வரப்பட்டதால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை சந்திக்க வேண்டி இருந்தது.

    குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை வரி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும், ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையை பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி.யில் பதிவான நிறுவனங்களிடம் மட்டும் தான் கொள்முதல் செய்ய வேண்டும்.

    அவை ஒவ்வொன்றையும் ஜி.எஸ்.டி. பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் சிறு தொழில் செய்பவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகினர்.

     

    5%, 12%, 18% மற்றும் 28% என 4 வகையான வரி அடுக்குகளை கொண்டிருந்த ஜிஎஸ்டி. வரி 8 ஆண்டுகளாக மாற்றமின்றி வசூலுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைத்து அறிவிக்கப்பட்டது.

    அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வரி முறை அமலுக்கு வந்தது. மேலும், சிகரெட் மற்றும் புகையிலை, பான் மசாலா போன்ற பாவப்பொருட்கள் மற்றும் சொகுசு கார் போன்ற உயர் ரக ஆடம்பர பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றுக்காக 40 சதவீத சிறப்பு வரி அடுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் விலை குறையும் பொருட்கள்:

    உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டதால் விலை குறைகிறது.

    மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டதால் விலை குறைந்தது.

    தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டதால் பிரீமியம் தொகை குறைந்தது.

    வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளதால் விலை குறைந்தது.

    ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதால் விலை குறைந்தது.

    • திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இது திரைத்துறையினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணை மூலம் அமலுக்கு வந்துள்ளது.

    இந்த வரிக்குறைப்பு திரைப்படத் துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    மேலும், இது டிக்கெட் விலைகளைக் குறைக்கவும், திரையரங்க வருவாயை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
    • அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.

    மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

    வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    • வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன.
    • வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி சலுகை அளித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

    இந்த புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரி மாற்றங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும். பழைய மற்றும் புதிய வரி விதிகளில் ஒன்றை தேர்வு செய்வது வரி செலுத்துவோரின் தனிப்பட்ட பொறுப்பாக இருந்தாலும் புதிய வரிமுறையை ஊக்குவிப்பதற்காக ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    2 முறையின் கீழும் வரி செலுத்துவோர் செய்ய வேண்டிய சில தகவல்கள் உள்ளன. அதன் அடிப்படையில் வரி செலுத்துவோர் தங்கள் வங்கி கணக்கு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

    மேலும் சேமிப்பு கணக்குகளில் ஈட்டப்படும் வட்டியையும் குறிப்பிட வேண்டும். செயலற்ற வங்கி கணக்குகளை தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை திரும்ப பெறுவதற்கு முதன்மை கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    அதேபோல் ஷேர்மார்க் கெட்டின் பங்குகள் கூட்டாண்மை சொத்துகள் மற்றும் கடன்கள் வெளிநாட்டு சொத்துகள் அல்லது வருமானம் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிட வேண்டும்.

    பழைய வரிமுறையின் கீழ் பல்வேறு விலக்குகள் மற்றும் கழிவுகள் இருப்பதால் வரி செலுத்துவோர் கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும். முதலீடுகள், சுகாதார காப்பீடு, கல்விக்கடன், நன்கொடைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

    புதிய வரிவிதிப்பு குறைந்த வரிவிகிதங்களை வழங்குகிறது. ஆனால் பெரும்பாலான விலக்கு களை அனுமதிக்காது. அடிப்படை வருமான வெளிப்படுத்துதல் மட்டுமே தேவைப்படுகிறது. வீட்டு வாடகை, பயணப்படி போன்ற விலக்குகளுக்கான சலுகைகள் பொருந்தாததால் இது எளிமையானது என்றார்.

    வரி செலுத்துவோர் பழைய வரி முறையை விரும்பினால் வீட்டு வாடகை கொடுப்பதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் புதிய வரிமுறையில் இந்த விலக்கு கிடைக்காது. வாடகை ரசீது இதில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளரின் பெயர், வாடகை தொகை, பணம் செலுத்தும் தேதி மற்றும் முகவரி ஆகியவை இருக்க வேண்டும்.

    கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    கோவை:

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-

    வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    ×