search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "happiness"

    • மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான்.
    • தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் திரு. அன்னியூர் சிவா மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்.

    கழக வேட்பாளருக்கு மக்கள் அளித்த வாக்குகள் 1,24,053. தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ம.க வேட்பாளரை 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் கட்டுத்தொகையை இழந்திருக்கிறார்கள்.

    திராவிட மாடல் அரசு மக்களுக்கான அரசாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த இடைத்தேர்தல் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

    மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனான நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மக்கள் மீது நாமும், நம் மீது மக்களும் நம்பிக்கை வைத்திருப்பதால், இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். ஆனால், விக்கிரவாண்டியில் ஓர் இடைத்தேர்தல் என்பதுதான் கொஞ்சமும் எதிர்பாராதது.

    புன்னகை மாறாத முகத்துடன் களப்பணியாற்றி வந்த மாவட்டக் கழகச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் கழகக் கூட்டணிக்காகத் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தார்.

    பொதுக்கூட்ட மேடையிலேயே மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், முழுமையான அளவில் உடல்நிலை தேறாத நிலையில், நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அந்த வேதனையுடன்தான் இந்தத் தேர்தல் களத்தைக் கழகம் எதிர்கொண்டது.

    விக்கிரவாண்டி மக்களுக்குப் புகழேந்தி அவர்கள் செய்த பணிகளைத் தொடரவும், விக்கிரவாண்டி தொகுதி மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்திடவும் கழகத்தின் செயல்வீரரான அன்னியூர் சிவா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    மக்கள் தொண்டராக - கழக வீரராகப் பொதுவாழ்வு அனுபவம் பெற்ற அன்னியூர் சிவாவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களைக் காணொலி வாயிலாக உங்களில் ஒருவனான நான் கேட்டுக்கொண்டேன்.

    கழகத்தின் சார்பில் துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் முனைவர் க.பொன்முடி, கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் - நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் இடைத்தேர்தல் களத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைப்புப் பணியைச் சிறப்பாக மேற்கொண்டனர்.

    கழகத்தின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு, மாவட்டக் கழகச் செயலாளர்களும் அமைச்சர்களுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு, அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் ஒன்றியங்கள் வாரியாகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டனர்.

    கழகத்தின் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர்ச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், சார்பு அணிகளைச் சார்ந்தவர்களும், கழகத் தொண்டர்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் களப்பணியாற்றினர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் போட்டியிடாமல் அ.தி.மு.க. ஒதுங்கி நின்று, தனது கள்ளக்கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. தி.மு.க. வெளிப்படையான ஜனநாயக நெறிமுறைப்படி களம் கண்டது.

    விக்கிரவாண்டியில் உள்ள 2 இலட்சத்து 34ஆயிரத்து 653 வாக்காளர்களையும் கழக நிர்வாகிகள் வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து, மூன்றாண்டுகால திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டங்களின் பயன்களை நேரடியாகப் பெற்றுள்ள மக்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டார்கள்.

    கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்கள், தமது எழுச்சிமிகு பரப்புரையில், விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்படவிருக்கிற திட்டங்களைப் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

    திட்டங்களின் பயன்கள் எல்லாருக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்து, பாகுபாடின்றி அதனைச் செயல்படுத்தி வருகிறோம். இதே விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தது.

    அதில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொன்னபோதும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் மாதம் 1000 ரூபாய் தனக்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார். இதுதான் திராவிட மாடல் அரசு.

    ஒருவர் எந்தக் கட்சிக்காரர் என்று பார்ப்பதில்லை. தமிழ்நாட்டு வாக்காளரான அவர், திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையவரா என்பதை மட்டும் பார்த்து, அதன் பயனைக் கிடைக்கச் செய்கின்ற அரசுதான் உங்களில் ஒருவனான என் தலைமையிலான கழக அரசு.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மைச் சமுதாயத்தினர் வசிக்கின்ற விக்கிரவாண்டி தொகுதியில் சமூகநீதிக் கொள்கை வழியாக அந்தந்தச் சமுதாயங்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றம் காண வழிவகுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் என்பதைத் தொகுதிவாசிகள் மறந்துவிடவில்லை.

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்கிற பிரிவை இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி, அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கிய தலைவர் கலைஞரின் சமூகநீதிக் கொள்கையால் தலைமுறைகள் கடந்து அடைந்துள்ள முன்னேற்றத்தை அவர்கள் மறக்கவில்லை என்பதைத்தான் விக்கிரவாண்டி மக்கள் தந்துள்ள மகத்தான வெற்றி எடுத்துக் காட்டுகிறது.

    பட்டியல் இனச் சமுதாயத்திற்கு 18% இடஒதுக்கீடு வழங்கியதுடன், அவர்களின் வளர்ச்சிக்காகப் பல திட்டங்களை வழங்கிய தலைவர் கலைஞரின் வழியில், கடந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சிப் பாதையில் அவர்களை அழைத்துச் செல்கிறது.

    இடைத்தேர்தல் பரப்புரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அன்புச் சகோதரர் முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., அவர்கள் இதனைச் சிறப்பாக எடுத்துக்காட்டி வாக்கு சேகரித்து வெற்றிக்குத் துணை நின்றார்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கழக வேட்பாளர்களுக்காக அயராது பணியாற்றினர். அத்தனை பேருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கழகத்தின் வெற்றி வேட்பாளர் - இனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெருமிதத்துடன் பெற்றிருக்கிற திரு. அன்னியூர் சிவா - கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர் டாக்டர் கௌதம் சிகாமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி., ஆகியோருடன் அறிவாலயத்தில் என்னையும் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

    வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், மகத்தான வெற்றியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அறிவாலயத்தில் திரண்டிருந்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    ஒரே ஒரு தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றிக்காகவா இத்தனை மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்று கேட்கலாம். இல்லையில்லை.. அந்த ஒரேயொரு தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சதிகள், சாதி - மத வன்முறையைத் தூண்டுவதற்கான வேலைகள், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் மீதும் கழகத்தின் மீதும் வைக்கப்பட்ட மலிவான - மட்டமான அவதூறுகள், தி.மு.க.வுக்கு எதிராகக் களத்தில் நின்றவர்களும் - நிற்பதற்குப் பயந்தவர்களும் உருவாக்கிக் கொண்ட ரகசிய ஒப்பந்தங்கள் - இவை எல்லாவற்றையும் விக்கிரவாண்டி தொகுதி மக்கள் முறியடித்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் கழக நிர்வாகிகளிடமும் தோழமைக் கட்சியினரிடமும் வெளிப்படுகின்ற மகிழ்ச்சிக்கான காரணம்.

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, களப்பணிகள் தொடங்கிய நிலையில் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

    அதில் ஒவ்வொரு துறை சார்பிலும் மக்களுக்கு நலன் பயக்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை ஊரகப் பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் வகையில் உங்களில் ஒருவனான நான் நேரில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தேன்.

    மக்கள் எதிர்பார்க்கின்ற திட்டங்களை அறிவித்து அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதும், யாரும் எதிர்பாராத எந்த ஒரு அசம்பாவித நிகழ்வு நடந்தாலும் அதற்குப் பொறுப்பேற்றுச் செயல்பட்டு அதனை சரிசெய்யும் நேர்மைத் திறமும் நிர்வாகத் திறனும் கொண்டதுதான் திராவிட மாடல் அரசு. இன்னும் பல திட்டங்கள் தொடரும். அதில் விக்கிரவாண்டி தொகுதியும் பயன்பெறும்.

    முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கி இன்று வரை தொடரும் சமூகநீதித் திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சமூகநலத் திட்டங்கள் - இவற்றுக்கு நற்சான்றிதழ் அளித்து தி.மு.கழகத்திற்கு மகத்தான வெற்றியை வழங்கி, அவதூறுகள் பரப்பி - சதி செய்ய நினைத்த வீணர்களுக்கு விடையளித்திருக்கிறார்கள், விக்கிரவாண்டி வாக்காளர்கள். இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கையாக்கி, மக்களுக்குத் தொண்டாற்றும் நம் பணியைத் தொடர்ந்திடுவோம்.

    தமிழ்நாட்டில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியுடன், நாடு தழுவிய அளவில் 13 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

    அடுத்தடுத்த தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாவதுடன் அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கான சிந்தனைகளுடனும் அதனைச் செயல்படுத்தும் வலிமையுடனும் பயணிப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி.
    • அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் டுவிங்கிள் கண்ணா. கடந்த 1995-ம் ஆண்டு பர்சாத் என்ற படத்தின் மூலம் இந்தி திரை உலகில் அறிமுகமானார். அவருக்கு ஜோடியாக பாபி தியோல் நடித்திருந்தார். படத்தில் இருவரின் காதல் காட்சிகள் மிகவும் வரவேற்பை பெற்றது.

    இதுபோன்று படத்தில் இடம்பெற்ற காதல் பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்தது. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தின் மூலம் இந்தி திரை உலகில் டுவிங்கிள் கண்ணா பிரபலமாகி ஏராளமான படங்களில் நடித்தார்.

    ஷாருக்கான் சல்மான் கான் அக்சய் குமார் என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த டுவிங்கிள் கண்ணா, நடிகர் ராஜேஷ் கண்ணா-டிம்பிள் கபாடியா ஆகியோரின் மகள் ஆவார்.

    சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருந்த டுவிங்கிள் கண்ணா 2001-ம் ஆண்டு அக்சய் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் தனது முதல் கதாநாயகனான பாபி தியோலை டுவிங்கிள் கண்ணா சந்தித்துள்ளார்.

    தற்போது இருவரும் சந்தித்த புகைப்படங்களையும் பர்ஷாத் படத்தில் நடித்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் 29 ஆண்டுகளுக்கு பிறகு பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி. அவர் இப்போதும் படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    பாபி தியோல் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    சர்வதேச அளவில் வெளியான இந்த படம் பல்வேறு விமர்சனங்களை தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் இரத்த ஓட்டம் இதயம் முழுவதும் மேம்படும்.
    • ஒரு சீரான உணவுடன் இணைந்தால், உடற்பயிற்சி உங்கள் எடையை கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.

    நம்மில் பெரும்பாலோர் போதுமான அளவு அசைவதில்லை. உட்கார்ந்த வாழ்க்கை முறை உடற்பயிற்சியின் அவசியத்தை கிட்டத்தட்ட புறக்கணித்துள்ளது. அதுவும் மோசமான உணவுப்பழக்கம் மற்றும் வேலை அழுத்தத்துடன் சேர்ந்து ஆரோக்கியமற்ற உடல் மற்றும் மனதை நோக்கி நம்மைத் தள்ளுகிறது.

    உங்கள் வரவிருக்கும் ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை உறுதிசெய்ய, கூடிய விரைவில் வேலை செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது. தினசரி உடற்பயிற்சியின் நன்மைகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல. உங்கள் மன ஆரோக்கியத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணலாம்.

    வீட்டிலேயே உடற்பயிற்சியை ஏன் தொடங்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவ , உடற்பயிற்சியின் முதல் 10 நன்மைகளை நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ளோம். ஆரம்பிக்கலாம்.

    1. நோய்கள் மற்றும் சுகாதார நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கிறது

    நீரிழிவு, புற்றுநோய், கரோனரி தமனி நோய்கள் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் வழக்கமான உடற்பயிற்சி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் இரத்த ஓட்டம் இதயம் முழுவதும் மேம்படும்.

    ஏரோபிக் உடற்பயிற்சியின் நன்மைகள் ஆக்ஸிஜன் அளவை உயர்த்துவதும் அடங்கும், மேலும் இது அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. நீங்கள் கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு இழப்பு) போன்ற நோய்களை எதிர்த்துப் போராடலாம், தசை வெகுஜன இழப்பைத் தடுக்கலாம் மற்றும் வயதான செயல்முறையை எளிதாக்கலாம்.

    2. மூளை சக்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது

    நீங்கள் பயிற்சிகளைச் செய்யும்போது, உங்கள் உடல் செரோடோனின் வெளியிடுகிறது மற்றும் உடலில் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது. இது சிறந்த மனத் தெளிவுக்கும் அதிக உற்பத்தித்திறனுக்கும் வழிவகுக்கிறது. உடற்பயிற்சியின் அனைத்து ஆரோக்கிய நன்மைகளிலும், இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    சிறந்த மூளைத்திறன் உங்கள் உடல் இயக்கங்களை எளிதாக ஒருங்கிணைக்கும் திறனை மேம்படுத்துகிறது. இது மனச்சோர்வு அல்லது பதட்டத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் நன்மைகளில் அதிக செறிவு சக்தி மற்றும் அறிவாற்றல் திறன் ஆகியவை அடங்கும், மேலும் இது டிமென்ஷியா மற்றும் அல்சைமர் நோய் போன்ற உங்கள் ஆபத்தை குறைக்கலாம்.

    3. உடல் எடையை பராமரிக்கிறது

    இது அநேகமாக மக்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் உடற்பயிற்சியின் மிகவும் பிரபலமான நன்மைகளில் ஒன்றாகும். ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பரபரப்பான வாழ்க்கை அட்டவணை உடல் எடையை பாதித்துள்ளது மற்றும் அதைக் கட்டுப்படுத்த, வழக்கமான உடற்பயிற்சியை விட சிறந்த வழி எதுவுமில்லை. ஒரு சீரான உணவுடன் இணைந்தால், உடற்பயிற்சி உங்கள் எடையை கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.

    வலிமை பயிற்சி அல்லது HIIT பயிற்சிகள் மூலம் நீங்கள் தொப்பை கொழுப்பை இழக்கலாம் மற்றும் மெலிந்த எடையை உருவாக்கலாம். உடல் எடையை குறைக்க அல்லது எடை அதிகரிப்பதற்கான திட்டத்தைத் தயாரிக்க, உடற்பயிற்சி பயிற்சியாளர் அல்லது உணவியல் நிபுணரை அணுகவும்.


    4. எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக்கும்

    தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையும் நீட்சி உடற்பயிற்சியின் சிறந்த நன்மைகளில் ஒன்றாகும் . உங்கள் அன்றாட பணியை எளிதாக்க இந்த வலிமை மிகவும் முக்கியமானது. குறிப்பாக பெண்களுக்கு, எலும்புகள் வலுவாக இருப்பது முக்கியம், ஏனெனில் அவர்கள் வயதாகும்போது பலவீனமான எலும்புகளுக்கு ஆளாகிறார்கள். கூடுதலாக, வலுவான தசைகள் உங்கள் தடகள செயல்திறனை மேம்படுத்துகின்றன மற்றும் உங்களுக்கு சிறந்த சகிப்புத்தன்மையை அளிக்கின்றன.

    இதற்காக, நீங்கள் தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள் அல்லது எடை பயிற்சி அல்லது ஹைபர்டிராபி பயிற்சி போன்ற செயல்களைத் தொடங்கலாம்.

    5. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள். உடற்பயிற்சியின் நன்மைகள் வலுவான தசைகள் மற்றும் எடை மேலாண்மை மட்டுமல்ல. இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் கணிசமாக மேம்படுத்தும்.

    நீங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, தோல் உட்பட உங்கள் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க முனைகிறீர்கள். இது, சருமத்திற்கு ஊட்டமளித்து, முன்பை விட இளமையாகவும் பொலிவுடனும் இருக்க உதவுகிறது. உடற்பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை சருமத்தை நச்சுத்தன்மையாக்கி அழுக்கு மற்றும் தூசியை வெளியேற்றுகிறது.

    6. சிறந்த தூக்கம்

    நாம் முன்பே குறிப்பிட்டது போல, உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல்வேறு ஹார்மோன்கள் வெளியாகின்றன. அந்த ஹார்மோன்களில் எண்டோர்பின்களும் அடங்கும். இந்த குறிப்பிட்ட ஹார்மோன் உங்கள் தூக்க அட்டவணைக்கு பொறுப்பு. உங்கள் மனதையும் உடலையும் சமமாக புத்துணர்ச்சியூட்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு ஒரு நல்ல பயிற்சி உதவுகிறது. இது படுக்கையில் நீங்கள் விழித்திருக்கும் நேரத்தையும் குறைக்கிறது.

    தொழில் சார்ந்த மன அழுத்தம் காரணமாக தூங்க முடியாமல் சிரமப்படும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உடற்பயிற்சியின் சிறந்த பலன்களில் இதுவும் ஒன்றாகும். எடை இழப்பு உடற்பயிற்சி உங்கள் எடையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது என்று நீங்கள் நினைத்தால் , மீண்டும் சிந்தியுங்கள். இது உண்மையில் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதோடு ஒரே நேரத்தில் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    7. வலியைக் குறைக்கிறது

    உடற்பயிற்சியின் சிறந்த உடல் நலன்களில் ஒன்று, இது உடல் வலியைப் போக்கக்கூடியது மற்றும் தசைகள் விறைப்புக்கான வாய்ப்புகளையும் குறைக்கும். குறிப்பாக மூட்டு வலி அல்லது கீல்வாதம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இது நம்பமுடியாத நன்மை.

    மோசமான தோரணை மற்றும் செயலற்ற தன்மையால் ஏற்படும் பொதுவான கழுத்து மற்றும் முதுகு வலியையும் உடற்பயிற்சி குறைக்கிறது. நாள்பட்ட முதுகு அல்லது கழுத்து வலியால் நீங்கள் சிரமப்பட்டிருந்தால், சில நீட்சிப் பயிற்சிகளைத் தொடங்க வேண்டிய நேரம் இது. பிரசவத்திற்கு முந்தைய உடற்பயிற்சியின் மிகவும் விரும்பப்படும் நன்மைகளில் இதுவும் ஒன்றாகும், ஏனெனில் கர்ப்பம் தீவிர கால் மற்றும் கீழ் முதுகில் பிடிப்புகளுக்கு வழிவகுக்கும்.

    8. சிறந்த பாலியல் ஆரோக்கியம்

    உடற்பயிற்சியின் பொதுவாக விவாதிக்கப்படும் பலன்களில் இது ஒன்றாக இல்லாவிட்டாலும், ஆரம்பநிலைக்கு வொர்க்அவுட்டைத் தொடங்க சிறந்த பாலியல் ஆரோக்கியம் ஒரு சிறந்த காரணமாகும் . வழக்கமான உடற்பயிற்சி ஆண்களின் விறைப்புத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் பாலியல் செயல்திறனை மேம்படுத்தும்.

    பெண்களைப் பொறுத்தவரை, உடற்பயிற்சியானது உடலுறவுத் தூண்டுதலையும், உடலில் நம்பிக்கையையும் அதிகரிக்கும். உங்கள் இடுப்புத் தளத்தின் தசைகளை வலுப்படுத்த நீங்கள் பயிற்சிகளை மேற்கொண்டால், நீங்கள் அடிக்கடி மற்றும் அதிக தீவிரமான உச்சியை அனுபவிக்கலாம்.


    9. மனநிலையை உயர்த்துகிறது

    மன ஆரோக்கியத்தில் உடற்பயிற்சியின் நன்மைகளைப் பற்றி இறுதியாக அறிந்து கொள்வோம் . வொர்க்அவுட்டுகள் உங்களை அதிக ஆற்றலுடனும், உற்பத்தித் திறனுடனும் ஆக்குகிறது என்பது இதுவரை தெளிவாகத் தெரிகிறது. உடற்பயிற்சியின் போது வெளியிடப்படும் எண்டோர்பின்கள் நேர்மறையான உணர்வுகளைத் தூண்டுகிறது மற்றும் கவலை அல்லது மனச்சோர்வு போன்ற பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

    உண்மையில், மனச்சோர்வு மற்றும் பதட்டத்தை குறைக்கும் வகையில் நீச்சல் அல்லது நடன பயிற்சிகள் போன்ற சிறப்பு உடற்பயிற்சிகளும் உள்ளன.

    10. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது

    நோய்களின் குறைந்த ஆபத்து, வலுவான உடல், கதிர்வீச்சு தோல் மற்றும் நல்ல மனநிலை - இவை அனைத்தும் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக மேம்படுத்தும். உடற்பயிற்சியின் இந்த உடல் மற்றும் மன நலன்கள் நீண்ட காலம் வாழ உதவுகிறது.

    தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் 30 சதவீதம் குறைவாக இருப்பதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இப்போது, உடற்பயிற்சியின் அற்புதமான நன்மைகளில் இதுவும் ஒன்று அல்லவா?

    உடற்பயிற்சியின் நன்மைகள் முடிவற்றவை. நீரிழிவு நோய் அல்லது மனச்சோர்வுக்கான உடற்பயிற்சியின் நன்மைகளையும் நீங்கள் காணலாம் . ஆனால் இவை அனைத்தும் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டுகின்றன - விரைவில் வொர்க்அவுட்டைத் தொடங்குங்கள். வழக்கமான உடற்பயிற்சி மூலம், உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றலாம். இது உங்களைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும் மற்றும் சிறந்த மற்றும் வலுவான உறவுகளை உருவாக்க உதவும். 

    • தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
    • நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.

    கூடலூர்:

    தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    • எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன்
    • தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.

    தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்தவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன் (2003), 7ஜி ரெயின்போ காலனி  (2004) புதுப்பேட்டை  போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.




    இந்நிலையில் சோனியா அகர்வால் தற்போது ஆனந்த் பால்கி இயக்கத்தில் இசையமைப்பாளர் தரண்குமாருடன் இணைந்து 'பேய் காதல்' பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததால் பாடல் ஆல்பங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு சோனியாஅகர்வால் கூறியதாவது :-

    "எனக்கு படங்கள் குறையவில்லை. மலையாளத்தில் பிஹைண்ட் படத்தில் நடித்துள்ளேன். தமிழில் 2 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 2 படங்கள் தற்போது கைவசம் உள்ளன'.




    நான் நடித்த '7ஜி ரெயின்போ காலனி' படத்தை 'ரீ ரிலீஸ்' செய்து தற்போது வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். மேலும் நல்ல கதையுடன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிப்பேன்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.
    • ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2001-ல் வெளிவந்த படம் 'தீனா'.இப்படத்தில் அஜித்குமார், லைலா, சுரேஷ் கோபி ஆகியோர் இணைந்து நடித்தனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த படத்திற்கு பின் அஜித்திற்கு 'தல' என்ற பட்டம் பிரபலமானது.

    இந்நிலையில் 23 ஆண்டுகளுக்கு பின் 'தீனா' படம் டிஜிட்டல் முறையில் இன்று (மே 1 ) அஜித்குமார் பிறந்த நாளில் 'ரீ ரிலீஸ்' செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.




    இந்நிலையில் அஜித் பிறந்தநாள் விழாவை இன்று அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடித்த தீனா "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டதை யொட்டி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் 'தீனா' படத்தை பார்ப்பதற்காக இன்று காலையில் அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று 'தீனா' படம் ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது 'வத்திக்குச்சி பத்திக்காதுடா '.. பாடல் ஒலித்தது. உடனே ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நடனமாடத் தொடங்கினர்.



    அப்போது ரசிகர்கள் மத்தாப்பு மற்றும் சரவெடி பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட்டனர். இதனால் தியேட்டரில் பட்டாசு தீப்பொறி புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




    மேலும் தியேட்டரின் உள்ளே படம் ஓடிக்கொண்டு இருந்த போது அஜித் ரசிகர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடிய சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
    • அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள். வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அவர்கள் குளிர்பானங்களை நாடி செல்கிறார்கள். இதற்காக பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு தர்பூசணி, இளநீர், மோர், கம்பங்கூழ், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. காலை 7.30 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    இரவு நேரங்களிலும் கடும் வெப்பம் நிலவி வந்தது. கடும் வெப்பம் காரணமாக நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தண்ணீர் இன்றி வறண்டது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நெல்லை மாநகர பகுதிகளான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்ச நல்லூர், டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் மழை பெய்த நிலையில் இன்று காலை மீண்டும் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இதேபோல களக்காடு, மூலைக்கரைப்பட்டி, நாங்குநேரி, சேர்வலாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக நாலுமுக்கில் 36 மி.மீட்டரும், நாங்குநேரி 9 மி.மீட்டரும், சேர்வலாறு பகுதியில் 8 மி.மீட்டர் மழை பாதிவானது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் இன்று காலை சாரல் மழை பெய்தது. காயல்பட்டினம், ஆத்தூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது.

    அந்த வகையில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதேபோல் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் சுற்று வட்டார பகுதிகள் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலன இடங்களின் இன்று பரவலாக மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான கால நிலையை ஏற்படுத்தியது. இதனால் வெப்பத்தில் தவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. 70 சதவீதம் பேர் விவசாயம், கால்நடை வளர்ப்பை சார்ந்தே உள்ளனர். பெரிய அளவில் வருவாய் இல்லை என்றாலும், இதிலிருந்து மீள வழியின்றி பல குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் சீசனுக்கு தகுந்தாற்போல், விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர் உள்ளிட்ட கிராமங்கள் மற்றும் மரக்காணம் அடுத்த ஆலத்துார், நடுக்குப்பம், முருக்கேரி பகுதிகளிலும், வானுார் அடுத்த ரங்கநாத புரம், விநாயகபுரம், பரங்கனி, எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், தர்பூசணி சாகுபடி செய்யப் பட்டது.

    கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை பணி தற்போது தொடங்கியுள்ளது. அறுவடை செய்யப்படும் தர்பூசணி புதுச்சேரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஒரு டன் 7,500 ரூபாய் முதல் 8,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது. திண்டிவனம், மரக்காணம் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி அறுவடை செய்யப்படுகிறது

    இது குறித்து தர்பூசணி சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறுகையில், '2 மாத பயிர் தான் தர்பூசணி. எங்களிடம் இருந்து வியாபாரிகள் குறைந்த விலைக்கு தர்பூசணி பழங்களை கடந்த ஆண்டு வாங்கிச் சென்றனர். இதனால் தர்பூசணி செடிக்கு மருந்து தெளித்தல், தண்ணீர் பாய்சுவது மற்றும் ஆட்கள் கூலிக்கே கடந்த ஆண்டு சரியாகி விட்டது .இதில் எந்த லாபமும் கிடைக்க வில்லை. ஆனால் இந்த ஆண்டு ஒரு டன் தற்போது 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப் படுகிறது என தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
    • மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து நேற்றுமாலை 140 அடியை எட்டியது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பினர்.

    இடுக்கி மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்லக்கடவு, வண்டிபெரியாறு, உப்புத்துறை, சப்பாத்து ஆகிய பகுதிகளில் உள்ள பெரியாற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.35 அடியாக உள்ளது.

    அணைக்கு விநாடிக்கு 1817 கனஅடி நீர்வருகிறது. நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தும் வகையில் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 300 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்இருப்பு 7221 மி.கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் 141 அடியை எட்டும் போது 2-ம் கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கையும், 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படும். அதன்பிறகு உபரிநீர் 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு திறக்கப்படும்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும் என விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்குபிறகு இதுவரை 5 முறை அணையின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அணையின்நீர்மட்டம் 142 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வைகை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டியதால் அணையிலிருந்து தொடர்ந்து அதிகளவு தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை முதல் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக 800 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநீர் தொடர்ந்து 10 நாட்களுக்கு திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியதும் உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்பதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இன்றுகாலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 69.59அடியாக உள்ளது. நீர்வரத்து 1961 கனஅடி, தண்ணீர் திறப்பு 2599 கனஅடி, நீர்இருப்பு 5724 மி.கனஅடி.

    மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர்மட்டம் முழுகொள்ளளவின் நீடிப்பதால் அணையிலிருந்து உபரிநீர் கூடுதலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பெரியாறு 3, தேக்கடி 8.4, கூடலூர் 3.2, உத்தம பாளையம் 2.4, சண்முகா நதிஅணை 4, மஞ்சளாறு 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வீரபாண்டி 4, மி.மீ மழைளவு பதிவாகி உள்ளது.

    • வேலாயுதம்பாளையம் பகுதிகளில் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
    • 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் ,கந்தம்பாளையம், மூர்த்தி பாளையம்,நொய்யல், மரவாபாளையம், சேமங்கி ,முத்தனூர், கோம்புப்பா ளையம், பேச்சிப்பாறை, நடையனூர், திருக்காடு துறை, நன்செய் புகளூர்,புகழி மலை, காகித புரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக சாலை வழி யாக சென்று கொண்டி ருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் ,பொதுமக்கள் நனைந்து கொண்டு அவ திப்பட்டு சென்றனர். அதே போல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோ சன நிலை ஏற்பட்டுள்ளது . கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது.3 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • 25 ஆண்டுகளுக்கு பிறகு தார்சாலை அமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது சேர்வை காரன் பட்டி. இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். 25 ஆண்டுகளாக சிங்கம்புணரி எஸ்.புதூர் செல்லும் மாநில நெடுஞ் சாலையில் இருந்து இந்த கிராமத்திற்கு வர சாலை மோசமாக இருந்தது.

    இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியை ஆய்வு செய்த அவர் பொதுநிதியில் ரூ.18.03 லட்சம் நிதி ஒதுக்கி சாலை அமைக்க ஏற்பாடு செய்தார்.

    சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் பொன் மணி பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதை ெதாடர்ந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் சிங்கம்பு ணரி வடக்கு ஒன்றிய செயலாளர் திருவாசகம், நகர செயலாளர் வாசு, சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி தலைவர் பூங் கோதை கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது.
    • தங்களைப் படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மூன்று விஷயங்கள் நிம்மதி, மகிழ்ச்சியை தருகின்றன. அவை ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குறைவில்லா வாழ்வாதாரம். இம்மூன்றும் ஒருவருக்கு அமைந்து விட்டால் அவரை விட பாக்கியசாலி வேறு எவரும் இல்லை.

    கரு, சதைத்துண்டாக கருவறையில் இருக்கும் நிலையில் அதன் தவணை (ஆயுள்), வாழ்வாதாரம், செயல்பாடுகள், நற்பேறு பெற்றவரா? அல்லது துர்பாக்கியசாலியா? ஆகிய நான்கு விஷயங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி, வானவர் ஒருவரைக் கொண்டு எழுதப்படுகிறது. பின்னர், கருவில் உயிர் ஊதப்படுகிறது. மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அத்தனை படைப்புகளுக்குமான அனைத்து விஷயங்களும் அவை பிறப்பதற்கு முன்பே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது.

    இதுகுறித்து திருக்குர்ஆன் (57:22) இவ்வாறு குறிப்பிடுகிறது. `பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்த சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே ஆகும்'.

    அதற்காக, `என்னுடைய விதிதான் எழுதப்பட்டுவிட்டதே' என்று மனோ இச்சையின் படி நடந்து கொள்ளுதல் கூடாது. விதியின் மீது பழியைப் போடாமல், நம் உழைப்பு மற்றும் முயற்சியின் மூலமாகவும், பிரார்த்தனைகளின் மூலமாகவும் நம்முடைய வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியத்தையும் இறையருளால் மேம்படுத்தலாம்.

    `(நபியே) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும' என்று திருக்குர்ஆன் (2:186) விளக்குகிறது.

    `பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஒரு முறை சுலைமான் (அலை) அவர்களிடம் ஒருவர் வந்து, `அல்லாஹ் உங்களுக்கு பறவைகள் மற்றும் உயிரினங்களின் மொழிகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறான். எனக்கு அவற்றுள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுக்கொடுங்கள்' என்று கேட்கிறார்.

    `எனக்கு அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை' என்று சுலைமான் (அலை) கூறியும், அந்த மனிதர் வற்புறுத்தவே, `சரி, எந்த உயிரினத்தின் மொழியைக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?' என்று கேட்கிறார்கள். `எங்கள் வீட்டில் இரண்டு பூனைகள் உள்ளன, எனவே பூனைகளின் மொழியை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று அந்த மனிதர் சொல்கிறார்.

    பூனைகளின் மொழியை கற்றுக்கொண்டு வீடு திரும்பும் அவர், அன்றிரவு இரு பூனைகளும் பேசிக்கொள்வதை கேட்கிறார். ஒரு பூனை, மற்றொரு பூனையிடம், `நான் பசியால் செத்து விடுவேன் போல் இருக்கிறது, உன்னிடம் ஏதாவது உணவு இருந்தால் கொடு' என்று கேட்கிறது. அதற்கு அந்த பூனை `கொஞ்சம் பொறு, நம் எஜமான் வளர்க்கும் சேவல் நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்றது.

    இதைக்கேட்ட அந்த மனிதர், அதிகாலையிலேயே தன் சேவலை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். சேவலை காணாமல் ஏமாற்றமடைந்த பூனை, மற்ற பூனையிடம், `நம் எஜமான், செத்த சேவலை ஏதோ ஒரு இடத்தில் புதைத்து விட்டார் போலும்' என்றது. அதற்கு மற்ற பூனை, எஜமான் சேவலை விற்று விட்டதைக் கூறுகிறது.

    மறுநாளும் அதே பூனை `பசிக்கிறது' என்று மற்ற பூனையிடம் கேட்கிறது. `கவலைப்படாதே, எஜமான் வளர்க்கும் ஆடு நாளை செத்து விடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்' என்று மற்ற பூனை பதில் சொல்கிறது. அன்றும் பூனைகள் பேசுவதைக் கேட்ட அந்த மனிதர், அடுத்த நாள், அதிகாலையில் ஆட்டை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்று விடுகிறார். பூனைகளுக்கு இம்முறையும் ஏமாற்றமாகி விடுகிறது.

    அதற்கு அடுத்த நாள், பசிக்கிறது என்று சொன்ன பூனையிடம், `நாளை நம் எஜமான் செத்து விடுவார், அதை உண்டு பிழைத்துக்கொள்ளலாம்' என்று மற்ற பூனை ஆறுதல் சொல்கிறது.

    இதைக்கேட்ட அந்த மனிதர் பதறிப்போய் சுலைமான் (அலை) அவர்களிடம் வந்து நடந்ததைச் சொல்லி `எப்படியாவது நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று கெஞ்சுகிறார். சுலைமான் (அலை) அவரிடம் `சேவல் விஷயத்திலும், ஆட்டுக் குட்டி விஷயத்திலும் நீ எப்படி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாயோ, அவ்வாறே இப்பொழுதும் நடந்து கொள்' என்று கூறி, `வீட்டிற்குச் சென்று உன் மரண சாசனத்தையும், கஃபன் துணியையும் தயார் செய்து கொள்' என்று கூறி அனுப்பி விடுகிறார்கள்.

    இந்த சம்பவத்தின் மூலம் அல்லாஹ் மற்றவர்களுக்கு அளித்துள்ள அருட்கொடைகள் பற்றி பேராசை கொள்வதால் ஏற்படும் விபரீதத்தை நாம் புரிந்து கொள்ளலாம். "மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை, வேறு சிலரைவிட மேன்மையாக்கி இருக்கின்றானோ, அதனை அடைய வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள்". (திருக்குர்ஆன் 4:32)

    எனவே, அருட்கொடைகளை விரும்புபவர்கள், தங்களை படைத்த இறைவனிடமே துஆ செய்பவர்களாக இருக்க வேண்டும்.

    ×