search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம்- அமைச்சர் திறந்து வைத்தார்
    X

    புதிய கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். 

    மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடம்- அமைச்சர் திறந்து வைத்தார்

    • இது போன்ற இயக்க பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
    • மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்தம் நகரில் மாநகர தி.மு.க. அலுவலகம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.

    தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம் , அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா சொன்னது போல் எங்கு சென்றாலும் தி.மு.க‌.விற்க்கென்று அலுவலகம் இருப்பது அவசியம். மாவட்டங்களில் மாவட்ட கழக அலுவலகங்கள் இருப்பது போல் தஞ்சையில் மாநகர தி.மு.க‌.வுக்கென்று புதிய அலுவலகம் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நாள் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.

    கனமழை, மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது.

    அதை கவனித்து வருவோம். மழைகாலங்களில் தேவைக்கேற்ப்ப பள்ளிகள், மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×