என் மலர்

    நீங்கள் தேடியது "Assignments"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 28 பணிகள் 301.13 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

    பெருங்கட்மபனூர் மற்றும் ஓர்குடி கிராமங்களில் வாய்க்கால் தொலைவு 4.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை மற்றும் 12.00 கி.மீ முதல் 15.00 கி.மீ வரை தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பெருங்கடம்பனூர் கிராமம் புளியந்தோப்பு தெருவில் மின்சார கசிவு காரணமாக ஜெயராமன் மற்றும் பிரேம்தாஸ் ஆகியோரது தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளர் ராஜேந்திரன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தாா்.

    தொடர்ந்து கல்லணையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னே ற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

    கொள்ளிடத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஷட்டர்களுக்கான மின்மோட்டார்கள், கொள்ளிடம் மணல் போக்கிப் பகுதியில் கட்டப்பட்டு வரும் தரைத்தள பணிகள் மற்றும் தடுப்பு சுவர் ஆகிய பணிகளையும், காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னா் அவா் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ. 20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெறுகிறது.

    மொத்த முள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, நீா்வளத் துறை செயற்பொறியாளா்கள் இளங்கோ, மதனசுதாகா், பவழகண்ணன், உதவி செயற்பொறியாளா்கள் சிவக்குமாா், மலா்விழி, சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் தெரிவித்ததாவது,

    திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

    இக்கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள்,

    நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் நமக்கு நாமே திட்டம், கலைஞரின் மேம்பாட்டு திட்டம், மழை நீர் சேகரிப்பு, வருவாய் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டுவரும் எண்ணும், எழுத்தும் திட்டம், பள்ளி கட்டமைப்புகள், சாலை விரிவாக்க பணிகள் ஆகியவைகள் குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆய்வின் அடிப்படையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வளர்ச்சி பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் இராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி கீர்த்தனா மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா உள்ளிட்ட அரசு அலுவல ர்கள், அனைத்துதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை உதவி செயற்பொறியாளர் ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    எனவே அன்றைய தினம் அருளானந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்புநகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரத்தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம் நகர், அண்ணாமலைநகர், ஜெ.ஜெ.நகர், டி.பி. எஸ்.நகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், எஸ்.பி.அலுவலகம், கலெக்டர் பங்களாரோடு, டேனியல் தாமஸ்நகர், ராஜராஜேஸ்வரிநகர், காவேரிநகர், நிர்மலாநகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நட்சத்திராநகர், ஆர்.ஆர்.நகர், சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தம்மாள்நகர், குழந்தைஏசு கோவில் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நசுவினியாறு வடிகால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நாடியம்பாள்புரம் பாளமுத்தி ஏனாதி அருகே சுக்கிரன்பட்டி வடிகால் வாய்க்கால் நீர்வளத் துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது ஆய்வு செய்யப்பட்டது.

    பொன்னவ ராயன் கோட்டை அருகே நசுவினியாறு வடிவேல் நீரவளத்துறை சார்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் விபரங்களை சிறப்பு செயலியில் பதிவேற்றப்பட்டு பணிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும்.

    இதன் மூலம் மாவட்டம் தோறும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் வடிகால் மற்றும் வாய்க்கால்களில் விரைவா கவும் சீராகவும் தூர்வார ப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    முன்னதாக பட்டுக்கோ ட்டையில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பயிற்றுநர்களுக்கான பயிற்சியினை தொடக்கி வைத்து பயிற்சி பெறுபவ ர்களிடம் பயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டல ஊரக வளர்ச்சி நிறுவன கூடுதல் இயக்குநர் மற்றும் முதல்வர் பிரபாகர், கல்லணைக் கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவழக்கண்ணன், கல்லணை கால்வாய் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் மற்றும் அனைத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
    • பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்வ தற்காக செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா இன்று காலை நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது நெல்லிக் குப்பம் பகுதியில் 6 குளங்கள் தூர்வாரப்படும் பணிகள், ஜம்புலிங்க பூங்காவில் காலை சிற்றுண்டி செய்வதற்கு புதிய கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வரு வதை நகராட்சி நிர்வாக இயக்குனர் சசிகலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அனைத்து பணிகளும் அரசு விதிக்கப்பட்ட உத்தரவு படியும், அந்தந்த காலக்கட் டத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தி னார். அப்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு அகர திருக்கோவிலக்கா பகுதியில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த தூய்மை பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீரென ஆய்வு செய்தார்.

    மேலும், பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் வாசுதேவன், தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே கரந்தையில் கருணாசாமி கோவில் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் குட்டை போல் வரண்டு காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்குதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு  தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.

    இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது:

    தஞ்சாவூரில் 40 குளங்கள் உள்ளது. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசுவாமி கோயில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும், கரந்தையில் ஜைன குளம், குஜிலியன் குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆய்வின் போது மாநகரா ட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
    • இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்பு பணிகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று, சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.

    இதையடுத்து நாகை கிழக்கு கடற்கரை சாலையில், செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சுமார் 10 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் அந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது நாகப்பட்டினம் வட்டாட்சியர், நாகை நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் இடத்தின் தன்மை மற்றும் நில எடுப்புப் பணிகள் குறித்து விளக்கினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp