search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B.A.B."

    • பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.

    உடுமலை:

    பி.ஏ.பி., திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறுகின்றன.நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளை வாக்காளர்களாகக்கொண்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யவும், அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்தல் வாயிலாக தேர்வு செய்ய வேண்டும்.பி.ஏ.பி., திட்டத்தில் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்ட குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இப்பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009ம் ஆண்டு நடத்தப்பட்டது.முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம், 6மாதம் நீடிக்கப்பட்டு 2014 டிசம்பர் 31ல் நிறைவடைந்தது. அதற்கு பின் தேர்தல் நடத்தவில்லை.

    8 ஆண்டு இழுபறிக்குப்பின் கடந்த 2022 மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தலைவர், உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏப்ரல் 17-ந்தேதி நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    அடுத்த கட்ட தேர்தல்கள் 11 மாதங்களுக்கு பின் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட 2 பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 18-ந்தேதி பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, தாராபுரம், திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகங்களில், மார்ச் 10ந் தேதி நடந்தது.திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள 9 பகிர்மான குழு தலைவர்கள் இணைந்து திட்ட குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள், வாக்காளர் பட்டியல், வேட்பு மனு படிவம், ஓட்டுப்பெட்டி என தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருந்தனர். ஆனால் பகிர்மான குழு தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால், திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன.
    • முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது.

    உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டத்தில் விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டத்தின் கீழ் நீரினைப்பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை அத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் ஓட்டுப்பதிவு முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது.

    பி.ஏ.பி., திட்டம், பாலாறு படுகை பாசன அமைப்பு முறையின் கீழ் 134 பாசன சங்கங்கள் உள்ளன. 9 பகிர்மான குழு தலைவர்கள், 45 பகிர்மான குழு உறுப்பினர் மற்றும் திட்டக்குழு தலைவர் ஆகிய பதவிகள் உள்ளன. இம்முறையில் முதல் கட்டமாக கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சிமண்டல தொகுதி உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    பின்னர் பகிர்மானக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பகிர்மான குழு தலைவர்களில் ஒருவர் திட்டக்குழு தலைவராகவும், மற்றவர்களை திட்டக்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் நிர்வாக முறை இருந்தால் மட்டுமே பாசன திட்டங்கள் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படும்.

    மேலும் தேர்வு செய்யப்படும் பாசன சபை நிர்வாகிகள், தண்ணீர் வழங்குவது, விவசாயிகளுக்கு நீர் பிரித்து கொடுப்பது, வாய்க்கால் பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவர். இந்த பதவிகளுக்கான தேர்தல் கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

    முதலில் 5 ஆண்டாக இருந்த பதவிக்காலம் 6 மாதம் நீடிக்கப்பட்டது. பதவியில் இருந்தவர்களின் பதவிக்காலம் கடந்த 2014 டிசம்பர் 31-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பின் 8 ஆண்டாக தேர்தல் நடத்துவது இழுபறியாகி வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 17-ந் தேதி தேர்தல் நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பங்கேற்ற முதல் கூட்டம் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தது.

    பி.ஏ.பி., திட்டத்தில் முதற்கட்ட தேர்தல் நடந்த நிலையில் தொடர்ந்து நடத்த வேண்டிய பகிர்மான குழு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் திட்டக்குழு தலைவர் தேர்தல் 10 மாதமாக நடத்தப்படவில்லை.தொடர்ந்து நடத்த வேண்டிய தேர்தல்களையும் உடனடியாக நடத்த வேண்டும் என பாசன சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் கோவை மாவட்ட எல்லைக்குட்பட்ட, எண் 2 மற்றும் 3க்கான பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 18ந் தேதி பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. பகிர்மான குழு தலைவர் மற்றும் 10 பகிர்மான குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 112 பாசன சங்க தலைவர்கள் ஓட்டளித்து 7 பகிர்மான குழு தலைவர் மற்றும் ஒரு பகிர்மான குழுவிற்கு 5 உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் 35 பேர் தேர்வு செய்ய வேண்டும்.

    கோவை மாவட்ட பகுதியில் தேர்தல் நடந்துள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அதிக பதவிகள் உள்ளதால் திருப்பூர் மாவட்ட பகுதியிலும் உடனடியாக நடத்த வேண்டும். திட்ட குழு தலைவர் தேர்தலையும் நடத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகிர்மான குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 10-ந்தேதி நடக்கிறது.உடுமலை, தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
    • ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசியதாவது:-

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறான ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு விவசாயிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டுவதற்கு முன், 50 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே கிணறு, ஆழ்குழாய் கிணறு இருந்தால் அதற்கு இந்த விதி பொருந்துமா? என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் வெட்டுவதற்கு முன் விவசாயம் செய்தவர்களுக்கு இந்த விதியை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்காது என்றனர். அவ்வாறான இணைப்புகளுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பதில் தெரிவிக்கலாம் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

    ×