search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை
    X

    கோப்புபடம்.

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து தண்ணீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை

    • 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.
    • ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பேசியதாவது:-

    பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு மூலம் தண்ணீர் உறிஞ்ச தடை விதிக்கப்பட்டுள்ளது. கோர்ட்டும் இதை உறுதிப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்துக்குள் ஆழ்குழாய் கிணறு, கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் உரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

    அவ்வாறான ஆழ்குழாய் கிணறு, கிணறுகளில் அமைத்த மோட்டார்களின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு விவசாயிகள் கூறும்போது, பி.ஏ.பி. வாய்க்கால் வெட்டுவதற்கு முன், 50 மீட்டர் தூரத்துக்குள் ஏற்கனவே கிணறு, ஆழ்குழாய் கிணறு இருந்தால் அதற்கு இந்த விதி பொருந்துமா? என்பதை தெரிவிக்க வேண்டும். வாய்க்கால் வெட்டுவதற்கு முன் விவசாயம் செய்தவர்களுக்கு இந்த விதியை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிப்பு செய்வது பொருத்தமாக இருக்காது என்றனர். அவ்வாறான இணைப்புகளுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பதில் தெரிவிக்கலாம் என்று சப்-கலெக்டர் தெரிவித்தார்.

    Next Story
    ×