search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crop"

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
    • ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர், நெல்லிக்குப்பம், காட்டு மன்னார் கோவில், சேத்தியா தோப்பு, புவனகிரி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலூர் மாவட்டத்தில் அதிக பட்சமாக சிதம்பரத்தில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.

    புவனகிரி, சேத்தியா தோப்பு, காட்டு மன்னர் கோவில் பகுதிகளில் 14 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது.

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவன சுரங்கங்களில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி நிற்பதால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை. ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, தொரப்பாடி, புதுப்பேட்டை காடாம் புலியூர், அண்ணாகிராமம், முத்தாண்டிக்குப்பம், கண்டரக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    பண்ருட்டியில் இன்று காலை 6 மணி வரை 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் இன்று 2-வது நாளாக மழை பெய்து வருகிறது.

    • கா்நாடக அரசு திறந்துவிட மறுத்து, பெயரளவுக்கு சிறிதளவு தண்ணீரை மட்டும் திறந்துவிட்டது.
    • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் பாசன நீா், 22 மாவட்டங்களின் குடிநீா் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து குழு ஒருங்கிணைப்பாளா் மணியரசன் கூறியதாவது:-

    நிகழாண்டு கா்நாடக அணைகள் 90 சதவீதம் நீா் நிரம்பிய நிலையிலும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு திறந்துவிட வேண்டிய முறையே 9.19 டி.எம்.சி., 31.24 டி.எம்.சி., 45.95 டி.எம்.சி. தண்ணீரைக் கா்நாடக அரசு திறந்துவிட மறுத்து, பெயரளவுக்கு சிறிதளவு தண்ணீரை மட்டும் திறந்துவிட்டது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மிகக் குறைவாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிட ஆணையிடப்பட்டது. ஆனால், அதைத் திறந்துவிட கா்நாடகம் மறுத்து, சில நாள்களுக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் மட்டும் திறந்துவிட்டு, அதையும் நிறுத்திவிட்டது.

    கடந்த 12 ஆம் தேதி காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடுமாறு கா்நாடகத்துக்கு ஆணையி ட்டது. அதை கா்நாடகம் முற்றிலும் மறுத்து அணைகளை மூடிவிட்டது.

    இதனால், தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை பயிா் அழிகிறது. ஒரு போக சம்பா 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களின் பாசன நீா், 22 மாவட்டங்களின் குடிநீா் பறிபோய்க் கொண்டிருக்கிறது.

    எனவே, கா்நாடக அரசின் சட்ட விரோத மற்றும் இனவெறிச் செயலைக் கண்டித்தும், நடுநிலை தவறி, கா்நாடக அரசின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் தீா்ப்பின்படி காவிரி நீரைத் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தர வலியுறுத்தியும் காவிரி உரிமை மீட்புக் குழு, விவசாயிகள் சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் இணைந்து தஞ்சாவூா் மாவட்டம், பூதலூரில் வருகிற 26ஆம் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் குழு பொருளாளா் மணிமொழியன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் வெங்கட்ராமன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலா் சிமியோன் சேவியர்ராஜ், வெள்ளாம்பெரம்பூா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
    • தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.

    இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.

    மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.

    இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.

    எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
    • நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .

    இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

    • தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 21-22-ம் ஆண்டு முதல் ரூ.114 கோடி மனித சக்தி நாள் உருவாக்கப்பட்டு உள்ளது. 22-23-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

    அதனைப் பின்பற்றி மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் கழிவுகள் மேலாண்மை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை துறையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் பூண்டி, அம்மாபேட்டை வழியாக அந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    மின்சாரத் துறையின் மூலம் மாநகராட்சிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கங்களில் மின்சார துறைகளின் தேவைகளை நிறைவேற்றி தரவும், இரும்புதலையில் மின் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மின் இலாகா அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.

    அதனை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை சட்டரீதியாக பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.
    • பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    நாமக்கல் மாவட்டத்தில் 2023 -ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அந்த பயிருக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.

    பிரிமிய தொகை ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு 311.22 ரூபாய் ஆகும். கடைசி நாள் வருகிற 31-ம் தேதி ஆகும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பகுதி நகல் , ஆதார் அட்டை நகல் மற்றும் செல்சிபோன் எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
    • விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில், 2022-23-ம் ஆண்டு ரபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர்க்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என நாமக்கல் மாவட்ட விவ சாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22-யை

    கடைசி தேதியான 31.12.2022-க்குள் செலுத்த வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கங்க ளின் கடன் பெறும் விவ சாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதி மொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரீமியம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு நிவாரணம்.
    • குடிநீர் தட்டுப்பாடு, இலவச மனைபட்டா வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் பானுசேகர் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் கவிதா வரவேற்றார். ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பி.டி.ஓ. அருள்மொழி முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் கலந்து கொண்டு பேசுகையில், ஊராட்சியைச் சேர்ந்த முத்தரையர் தெருவில் உடனடியாக 60 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கிடவேண்டும் என்றார்.

    ஒன்றிய குழு உறுப்பினர் சிவபாலன்பேசுகையில், கோதண்டபுரம் நீரேற்றும் பணியாற்றுபவருக்கு சம்பளநிலுவையில் இருப்பதால் 6பஞ்சாயத்துக்களில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்காவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    லெட்சுமி பாலமுருகன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி சாலைகளையும் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2 கோடியே 122 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றி என்றார்.

    ரீகன் பேசுகையில், நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு போதிய மருத்துவர்கள் இருப்பதில்லை. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    தலைவர் (பொ) பானுசேகர் பேசுகையில், கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை நிவாரணம் அறிவிக்கவேண்டும். இதனை இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் ஏற்றி நிறைவேற்றம் செய்யவேண்டும் என்றார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, கலியபெருமாள், ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூர்ண சந்திரன் பங்கேற்றனர். முடிவில் ஒன்றிய மேலாளர் சம்மந்தம் நன்றி கூறினார்.

    • விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க தே.மு.தி.க. வலியுறுத்துகிறது.
    • மழை பாதித்த மாவட்டங்களில் திமுகவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது.

    தரங்கம்பாடி:

    திருக்கடையூர் அமிர்த கடைஸ்வரர் கோவிலில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்கள் ஆயுள் விருத்திக்காக வழிபாடு செய்கிறார்கள்.

    இந்நிலையில் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மகன்கள் மாநில இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், நடிகர் சண்முக பாண்டியன் ஆகியோர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் ஆகிய சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருக்கடையூர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பார்வையிட்டு செய்தி யாளர்களிடம் கூறுகையில்:-

    விவசாயிகளின் கோரி க்கையை ஏற்று பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 30 ஆயிரம் வழங்க தே.மு.தி.க. வலியுறுத்துகிறது.

    அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம், மயிலாடுதுறை தாலுகாவிற்கு நிவாரணம் தொகையை அறிவிக்க வேண்டும்.

    மேலும் நிவாரண உதவிகளை உடனே வழங்க வேண்டும்.சென்னை உள்பட மயிலாடுதுறை மாவட்டம் உள்ளிட்ட மழை பாதித்த மாவட்டங்களில் திமுகவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேமுதிக வரவேற்பு தெரிவிக்கிறது என்றார்.

    அவருடன் கட்சி பொருப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
    • ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.

    மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.

    இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை நாமக்கல் கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.
    • மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி, கபிலர்மலை, மோகனூர், நாமக்கல் வட்டாரத்தில் 2022-23-ம் ஆண்டு சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் நெல்-II (சம்பா) மற்றும் சிறிய வெங்காயம்-II பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

    அதன்படி, பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நெல்-II (சம்பா) பயிருக்கு ரூ.337.16-யை 15.12.2022-க்குள் செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களான சிறிய வெங்காயம்-II பயிருக்கு பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு ரூ.1,990.82-யை 30.11.2022-க்குள் செலுத்த வேண்டும்.

    புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் இதர வங்கிகள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கடன் பெறும் விவசாயிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் உறுதிமொழி கடிதம் அளித்து பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

    கடன் பெறாத விவசாயி கள் பொது சேவை மையங்களில் முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் சான்று, நடைமுறையில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் (கணக்கு எண் மற்றும் ஐ.எப்.எஸ்.சி கோடு எண்ணுடன்) ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றுடன் இணைத்து காப்பீடு பிரிமீயம் செலுத்தி விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இது தொடர்பான மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் ஆகியோரை அணுகி தெரிந்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

    • கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.
    • ஆட்டுப்புழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரிடெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகு படிக்காக மேட்டூர்அணை முன் கூட்டியே திறக்கப்பட்டது.

    இதனால்கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இலக்கை தாண்டி சாகுபடிநடந்து ள்ளது என்று வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தஞ்சை அருகே ராமநாதபுரம், ரெட்டிப்பாளையம் உட்பட பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    பல பகுதிகளில் 5 வாரங்கள் கடந்த நாற்றுக்கள் செழுமை யாக வளர்ந்து நிற்கிறது.

    வளர்ந்துள்ள குறுவை பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் விவசாயி சதீஷ் என்பவர் தனது சாகுபடி வயலில் ஆடுதுறை 36 வகை நெல்லை பயிரிட்டுள்ளார்.

    பல ஆண்டுகளாக இயற்கை வழி சாகுபடியை மேற்கொள்ளும் இவர் ரசாயன உரத்திற்கு பதிலாக ரெட்டிப்பாளையத்தில் ஆட்டு கிடை போட்டுள்ள வர்களிடம் இருந்து ஆட்டுப்புழுக்கை மற்றும் கிராமப்பகுதியில் இருந்து சாணம் ஆகியவற்றை வாங்கி வந்து இயற்கை உரமாக தெளிக்கிறார்.

    இதற்காக பேய்வாரி தரைப்பாலத்தில் ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை காயவைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார்.

    இதுகுறித்து சதீஷ் கூறுகையில், பல ஆண்டு களாக இயற்கை வழி சாகுபடியை செய்து வருகிறேன்.

    ரசாயன உரங்கள் தெளிக்காமல் ஆட்டுக்கிடை போட்டுள்ளவர்களிடம் மொத்தமாக ஆட்டுப்பு ழுக்கை மற்றும் சாணத்தை வாங்கி வந்து உலர்த்தி நசுக்கி பயிருக்கு தெளிப்பதால் நன்கு ஊட்டமாக வளரும்.

    நாற்று நட்டதில் இருந்து இரண்டாவது முறையாக தற்போது இயற்கை உரம் தெளிக்கிறேன் என்றார். இவரை போல் ஏராளமான விவசாயிகளும் இயற்கை உரங்கள் இடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ×