search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ready for harvest"

    • அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
    • நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .

    இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

    • பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்கப்படு கிறது.
    • மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் சின்னசேலம் சங்கரா புரம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பரவலாக மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி அறுவடை செய்யும் வகையில் ஜூலை மாதம் மஞ்சள் விதைக்க ப்படு கிறது. இந்த மஞ்சள் ஜனவரி மாதம் பொங்க லுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறுவடை செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு பகுதி களில் மஞ்சள் கொத்து கள் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கல்யாணமான பெண்க ளுக்கு பிறந்த வீட்டில் இருந்து பொங்கல் சீர் வரிசையில் முக்கியமாக பொருள்களாக விளங்கு வது மஞ்சள், கரும்பு பானை, அரிசி, வெள்ளம் இப்பொருள்களை வைத்து பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொடுப்பார்கள். இதில் முக்கிய பங்காற்றுவது மஞ்சள்.

    இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, வெல்லம், மஞ்சள், இஞ்சி ஆகியவை முக்கிய இடம் பெறுகிறது. சின்னசேலம் நயினார்பாளையம் கூகையூர் மூங்கில்பாடி, கல்லாநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் பொங்கல் பண்டிகையை யொட்டி விற்பனை செய்யும் வகையில் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடி செய்துள்ளோம். தற்போது மஞ்சள் அறு வடைக்கு தயார் நிலை யில் உள்ளது. சென்ற ஆண்டை ப்போல இந்த ஆண்டும் மஞ்சள் நல்ல விளைச்சல் இருக்கிறது. இதனால் நாங்கள் மகிழ்ச்சியில் உள்ளோம். மேலும் கடந்த ஆண்டு மஞ்சள் கொத்து ரூ.30 முதல் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டும் நல்ல விலை கிடை க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    ×