என் மலர்
நீங்கள் தேடியது "Groundnut"
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.57 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை நடைபெற்றது
- விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
சிவகிரி,
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.62.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் விற்பனையானது. நிலக்கடலைக்காய் மொத்தம் ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 14-க்கு விற்பனையானது.
- சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
- ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி மாவு- ஒரு கப்
ராகி மாவு- அரை கப்
உப்பு- ஒரு சிட்டிகை
தேங்காங் துருவல்- ஒரு கப்
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
வேர்கடலை பொடித்தது- கால் கப்
பொடித்த வெல்லம்- அரை கப்
வாழை இலை-1
செய்முறை:-
முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.
இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.
ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.
ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.
- முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரை விற்க்கப்பட்டது.
- மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
அவிநாசி:
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ7,600 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
- குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 5.13 1/2 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.
- மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.
- முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது.
அவினாசி:
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வரத்து குறைந்ததால் 215 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6.64 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 விவசாயிகள் 44 மூட்டைகள் (2,238 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.50க்கும், சராசரியாக ரூ.60க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.
- அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.
பரமத்திவேலூர்:
சாலைப்புதூரில், அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61½ குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை காய் விற்ப னைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.20-க்கும் என ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.3½ லட்சத்துக்கு ஏலம் போனது
- கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் விற்பனையானது
கரூர்,
கரூர் நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில், கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 45.70 குவிண்டால் எடை கொண்ட 123 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 891-க்கு நிலக்கடலை விற்பனையானது.
- ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா்.
- நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ. 7,450 வரையில் ஏலம் போனது.
அவினாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,450 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
- 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
- நிலக்கடலை குவிண்டால் ரூ.6,100 முதல் ரூ.7,300 வரை ஏலம் போனது.
அவினாசி :
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 130 மூட்டை நிலக்கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,100 முதல் ரூ.7,300 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,100 முதல் ரூ.6,300 வரையிலும் ஏலம்போனது.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
- 49 மூட்டைகளில் தேங்காய் பருப்பை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
- தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும் ஏலம் போனது.
காங்கயம் :
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.86 லட்சத்துக்கு தேங்காய் பருப்புகள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 49 மூட்டைகளில் (2445 கிலோ) தேங்காய் பருப்பை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.86க்கும், குறைந்தபட்சமாக ரூ.62க்கும், சராசரியாக ரூ.80க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.86 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ. 9 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு 325 நிலக்கடலை மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,300 முதல் ரூ.7,500 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,300 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.